எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாததை கண்டித்து, சென்னையில் இன்று (பிப்.10) ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இப்போராட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments: