Ad 728x90

Tuesday, February 10, 2026

ஆந்​திராவில் பூட்டிய வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது

ஆந்​திராவில் பூட்டிய வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது

 விசாகப்பட்டினம்: சொகுசு ​வாழ்க்கை வாழ பூட்​டிய வீடு​களில் திருடிய ஐடி ஊழியரை ஆந்​திர போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.


ஆந்​திர மாநிலம், காக்​கி​நாடா பகு​தியை சேர்ந்​தவர் மகேஷ் ரெட்டி என்​கிற சன்னி (27). விசாகப்​பட்​டினத்​தில் ஐ.டி மேற்​படிப்பை முடித்த மகேஷ் ரெட்​டிக்கு ஹைத​ரா​பாத்​தில் ஒரு பிரபல ஐடி நிறு​வனத்​தில் வேலை கிடைத்​தது. கை நிறைய சம்​பளம். ஆனாலும் அது அவரின் ஆசைகளை நிறைவேற்ற உதவ​வில்​லை. மகேஷ் ரெட்​டிக்கு சிறு வயதிலிருந்தே திருடும் பழக்​கம் இருந்துள்ளது.


இதனால் அவர் தனது 15 வயதில் திருடி மாட்​டிக்​கொண்​டார். அதன் பிறகு, அவர் சிறு​வர் சீர்​திருத்த பள்​ளி​யில் படித்​தார். தற்போது ஐடி துறை​யில் பட்ட மேற்​படிப்பு படித்த பிறகு, தனது ‘கை’த்​தொழிலில் மீண்​டும் கவனம் செலுத்த ஆரம்​பித்​தார். இதற்காக ஒரு பைக் வாங்​கி​னார்.


அதில் நம்​பர் பிளேட் போடா​மல், முகக்​கவசம், கையுறை அணிந்து இரவு நேரங்​களில் பூட்​டிய வீடு​களில் பூட்டை உடைத்​து, பீரோ​வில் உள்​ளதை அள்​ளிச் செல்​வதை வழக்​க​மாக்கி கொண்டார். இதற்​காக கட்​டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், ட்ரில்​லிங் இயந்​திரம் போன்​றவற்​றை​யும் வாங்கி வைத்து உள்​ளார்.


பல முறை ராமசந்​தி​ராபுரம், இந்​திர பாளை​யம், ராஜ​முந்​திரி சிறை​களுக்கு சென்​றுள்​ளார். இது வரை அவர் 60 வீடு​களில் திருடி உள்​ளார். 26 வழக்​கு​கள் இவர் மீது நிலு​வை​யில் உள்​ளன. சமீபத்தில் 14 மாதங்​கள் வரை இவர் சிறை தண்​டனை அனுபவித்து உள்​ளார். ஆயினும் இவர் திருடு​வதை கைவிடவில்லை. ஏனெனில், இவருக்கு ஆடம்​பர​மாக வாழ்​வது மிகவும் பிடிக்​கு​மாம்.


அதாவது, பிஎம்​டபிள்யூ சொகுசு கார், அடிக்​கடி வெளி​நாட்டு சுற்றுலா, கழுத்​தி​லும், கையிலும் தங்க செயின்​கள், பிரேஸ்​லெட். 4 விரல்​களில் தங்க மோதிரம் அணிந்​திருப்​பார். இந்த வாழ்க்கை மிக​வும் பிடித்து போன​தால், போலீ​ஸார் கைது செய்​தா​லும், மீண்டும் திருட்டு தொழிலையே செய்​து, சொகுசு வாழ்க்​கையை வாழ்ந்து வரு​கிறார் மகேஷ் ரெட்​டி.


இந்​நிலை​யில் கடந்த 8-ம் தேதி விசாகப்​பட்​டினத்​தில் மகேஷ் ரெட்டியை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது அவரிட​மிருந்த 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்​கள் மற்​றும் பிஎம்​டபிள்யூ சொகுசு கார் போன்​றவற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.


இது த​விர ரூ.15.63 லட்​சம் மதிப்​புள்ள பொருட்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மகேஷ் ரெட்டி விசாகப்பட்​டினம் மட்​டுமின்​றி, ஹைத​ரா​பாத், காக்​கி​ நாடா ஆகிய பகு​தி​களி​லும் தனது கை வரிசையை காட்​டி உள்​ளார்​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.

“காங்கிரஸ் உடனான கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை” - கனிமொழி திட்டவட்டம்

“காங்கிரஸ் உடனான கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை” - கனிமொழி திட்டவட்டம்

 ராமநாதபுரம்: “திமுக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இணக்கமான நல்லுறவு உள்ளது. அதனால் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக இணைந்து செயல்படுவோம்” என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.



ஆட்டோ, கால் டாக்ஸி ஸ்ட்ரைக்: போக்குவரத்து முடங்கும் அபாயம்

ஆட்டோ, கால் டாக்ஸி ஸ்ட்ரைக்: போக்குவரத்து முடங்கும் அபாயம்

எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாததை கண்டித்து, சென்னையில் இன்று (பிப்.10) ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இப்போராட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாக்களிக்க இனி அடையாள அட்டை கட்டாயம்

அமெரிக்காவில் வாக்களிக்க இனி அடையாள அட்டை கட்டாயம்

 அமெரிக்க பொது தேர்தல்களில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, இனி வாக்காளர்கள் அனைவரும் அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மின்னஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறை இனி செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களை தவிர மற்ற குடிமக்கள் எவருக்கும் தபால் ஓட்டு வசதி கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பொய் புகார் அளித்த நிகிதா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பொய் புகார் அளித்த நிகிதா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

நகை திருட்டு புகாரில் கைது செய்யப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், புகார் அளித்த நிகிதாவின் புகார் பொய்யானது என சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து, நிகிதாவை மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுள்ளது.

“இந்த பாடலை இசையமைக்கும்போது அழுதுவிட்டேன்” - ஏ.ஆர்.ரகுமான்

“இந்த பாடலை இசையமைக்கும்போது அழுதுவிட்டேன்” - ஏ.ஆர்.ரகுமான்

இந்தியாவின் முக்கிய மற்றும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர், தான் ஒரு பாடலை இசையமைத்தபோது அழுதுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஒரு பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு, மிகப்பெரிய சவாலாக இருந்தது. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு இசையமைக்கும்போது நான் நோன்பில் இருந்தேன். அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த டியூன் என்று உணர்ந்தேன்'” என்றார்.