Ad 728x90

வியாழன், 28 மே, 2026

முடி முக்கியமல்ல; மூளைதான் முக்கியம்!’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ஜுகல்பந்தி; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு!” என அதிரடிப் பேட்டி !!!

முடி முக்கியமல்ல; மூளைதான் முக்கியம்!’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ஜுகல்பந்தி; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு!” என அதிரடிப் பேட்டி !!!

 முடி முக்கியமல்ல; மூளை தான் முக்கியம்’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு” என அதிரடிப் பேட்டி !!!

​“தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகே மற்ற பாடல்கள்”: த.வெ.க ஆட்சி குறித்து சிவகுமார் !!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கேஜி (தனியார்) மருத்துவமனையில் நிகழ்ச்சில் நடிகர் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் ஆகிய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேடையில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ், சிவகுமார் டை அடிக்காமல் வந்திருக்கலாம் அல்லவா?. நாமெல்லாம் தலைக்கு மேல் உள்ளதை நம்பி வாழ்பவர்கள் அல்ல தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று முடியையும் மூளையையும் சுட்டிக்காட்டினார். சிவக்குமார் இருந்த தைரியத்தில் தான் நாம் சென்னைக்கு சென்றேன் அங்கு சென்ற பிறகு தற்பொழுது ஓரளவு ஒழுக்கமானவனாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் சிவகுமார் தான். பெரியாரின் தொண்டன் எம்ஜிஆரின் ரசிகன் என்ற இரண்டு விஷயமும் என்னை பொறுத்தவரை எனக்கு ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும் தெளிவாக ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க முடியும் அதற்கு முக்கியமான துணை தந்தை பெரியார் தான். அதேபோல் உற்சாகமாக இருப்பதற்கு புரட்சித்தலைவி எம்ஜிஆர் அவரது பாடல்கள் தற்பொழுது வரை உறங்குவதற்கு முன்பு கடவுள் வாழ்த்து பாட மாட்டேன் வாத்தியாரின் பாடல்களை தான் கேட்பேன் என்று கூறிய அவர் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடலை கேட்டு விட்டு படுத்தால் தெம்பாத தெளிவாக இருக்கலாம் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் வந்தே மாதரம் பாடல்க்கு பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து பேசிய அவர் இனிமேல் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை பாடுங்கள் என்று வேண்டுகோளாக விடுகிறேன் அதன் பிறகு எந்த பாடலை வேண்டுமானாலும் பாடுங்கள் என்று தமிழ் மண்ணை சாப்பிட்டு வளர்ந்தவன் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சிவகுமார் பேசும்போது

நான் பிறந்த ஊரில் அப்பொழுது அடிப்படை வசதிகள் கிடையாது. மாட்டு சாணத்தை முழுகிய தரையில் அமர்ந்து தான் படிப்போம். இன்னொரு பிறவி எடுத்தாலும் ஓவியனாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நான் நான்கு முதல்வர்களுடன் நடித்துள்ளேன் என்று எம்ஜிஆர் ஜெயலலிதா கலைஞர் விஜய் ஆகியோர் உடன் நடித்த படங்களை நினைவுகூர்ந்து நடிகர் விஜயுடன் நான் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் 200 நாட்கள் ஓடியது என்றும் தெரிவித்தார்.மேலும் மேடையில் கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றை பாடி விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்த நடிகர் சிவக்குமார், அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட ஊர் கோவை என்றும் நான் கோவை சூலூர் அருகே உள்ள சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன் நான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது சிறுவயதில் கீழே விழுந்து அடிபட்டால் மாட்டு சாணத்தை தான் புண் மீது போடுவார்கள் ஒரு வாரத்தில் அது குணமாகிவிடும் நான் நாட்டு வைத்தியங்களில் வளர்ந்த ஆள்.

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு நம்முடைய உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உடலை நல்லபடியாக வைத்துக் கொண்டால் தானம் என்ற நடைமுறைக்கு செல்ல தேவையில்லை என்று கூறி பல்வேறு யோகா பயிற்சிகளையும் செய்தியாளர் சந்திப்பின்பொழுது செய்து காட்டினார்.

காபி டீ எல்லாம் சாப்பிட்டு 65 வருடங்கள் மேல் ஆகிறது, தினமும் யோகா செய்கிறேன்

சத்யராஜ் எம்.ஜி.ஆர் அவருடைய சிஷ்யன் கரலாகட்டையை சுத்தி கொண்டு இன்னும் உடலை கட்டுமானமாக வைத்துள்ளார். யாரும் பெரிய ஆள் என்று நினைக்காமல் அனைவரிடமும் நன்கு பழகினால் மன அழுத்தம் என்பது வராது, செல்போன்கள் எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் யாரும் தனியாக வாழாதீர்கள் நெருக்கமான நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள் நானும் சத்தியராஜ்யம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம்.

எனக்கு தற்பொழுது 85 வயது ஆகிறது உலகம் முழுவதும் 20 நண்பர்கள் எனக்கு உள்ளன நாள்தோறும் ஒரு மணி நேரமாவது அவர்களிடம் பேசுவேன், மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் தனிமை தான் எனவே அனைவரும் நண்பர்களுடன் இருங்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மருத்துவர்களே தேவை இல்லை.

பிராமணர்கள் 75 என்பது வயதிலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஏனென்றால் அவர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை சத்யராஜ் போன்றவர்கள் பெரியார் கூறியதைப் போல 95 வயதிலும் ஆடு மாடு கோழி எல்லாம் சாப்பிட்டு ஜீரணம் செய்ய முடியாமல் இருக்கிறார் என்று கிண்டல் அடித்தார. அப்போது குறுக்கிட்ட சத்தியராஜ் பெரியார் சமூக நீதியை தான் கூறினார். மேலும் மருத்துவரிடமே கேளுங்கள் அசைவத்தில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்றார். அப்பொழுது சிவக்குமார் நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன் 45 வயது வரை அசைவம் சாப்பிடலாம் 45 வயதுக்கு மேல் அது தேவை இல்லை குறைத்துக் கொள்ளலாம். தற்பொழுது உள்ள போதைப் பொருட்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஏதேதோ பெயர் எல்லாம் கூறுகிறார்கள். 

விஜய் நினைத்து சந்தோசம் பட வேண்டும் அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் என்று தான் மக்கள் வாக்களித்து உள்ளவர்கள் என்றார்.

மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம், காமராஜரை போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா? அவர் இருக்கும் பொழுது அவருக்கு சொத்து என்பதை 140 ரூபாய் பணம் 4, 5 துணிமணிகள், புத்தகங்கள் தான் அப்படிப்பட்ட காமராஜரயே தோற்கடித்தார்கள் காமராஜர் வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று அப்பொழுது மக்கள் நினைத்தார்கள், திமுகவும் 50 ஆண்டுகள் ஆண்டது தற்பொழுது அதுவும் வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள்.

யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள் மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள் மக்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 95 சதவிகிதம் காசு வாங்காமல் ஓட்டு போட்டு உள்ளார்கள் பெண்கள் அதிகமானோர் ஓட்டு போட்டு உள்ளார்கள், அடுத்த தலைமுறை எங்களுக்கு ஒரு சரியான தலைவன் வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது அதனை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார்?. 

சினிமாவை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியலில் அதிகம் இருந்துள்ளார்கள் என்ற கருத்து தொடர்பான கேள்விக்கு காந்தி காலத்திற்கு முன்பு அரசியல் தலைவர்களின் தாக்கம் அதிகம் இருந்தது மக்களை அதிகம் இருப்பவர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள் தான்

சினிமா துறையின் படம் மூலம் கூறுவது மக்களுக்கு நெருக்கமாக ஆகிவிடுகிறது என்றார். சினிமா துறையை சார்ந்த அரசியல் என்பது கேரளாவில் எடுபடவில்லை என்ற கேள்விக்கு அங்கு அனைவரும் படித்தவர்களாக உள்ளார்கள் மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும் சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள் மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?. அப்பொழுது குறுக்கிட்ட மருத்துவர் பக்தவச்சலம் அறியாமை இருந்தால் மருத்துவத்துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேட்டி அளிக்கும் போது 

நான் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வேன் நான் உடற்பயிற்சியையும் வாழ்க்கையும் தனித்தனியாக பிரித்துக் கொள்வது இல்லை இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை முடிந்தவரை மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வது குறித்து பேசும் பொழுது நம்முடைய ஆட்கள் அங்கு அதிகம் பேர் உள்ளார்கள் அங்கு வேலை செய்வதற்கு யாரும் இல்லை, அமெரிக்க காரர்கள் யாரும் வேலை செய்வது இல்லை ட்ரம்ப் தலையில் அடித்துக் கொள்கிறார் என நகைச்சுவையாக.

எம்.ஜி.ஆர் பாடியதைப் போல் அவரர்களே திருந்தாவிட்டால் போதையை ஒழிக்க முடியாது தற்பொழுது உள்ள அரசு பள்ளிகள் அருகில் உள்ள மதுபான கடைகளை மூடியது நல்ல விஷயம் தான் என்றார்.


குடியை நிறுத்தியதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு: வாலிபர் திடீர் மரணம் !!!

குடியை நிறுத்தியதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு: வாலிபர் திடீர் மரணம் !!!

 குடியை நிறுத்தியதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு: வாலிபர் திடீர் மரணம் !!!

கோவை செல்வபுரம், தெற்கு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (32), ராமகிருஷ்ணன் மகன். இவருக்கு அனிதா (28) என்ற மனைவி உள்ளார். அசோக் குமாருக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி பலமுறை கண்டித்தார். இதை அடுத்து கடந்த ஒரு வாரமாக குடிக்காமல், வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளார்.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மனைவி கஞ்சி பரிமாறும்போது, திடீரென அசோக் குமாருக்கு கழுத்து வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை !!!

15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை !!!

 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை !!!

கோவை, ராமநாதபுரம், அம்மன்குளம், எரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (60). இவருக்கு நாகமணி (46) என்ற மனைவி உள்ளார். தர்மராஜிற்கு கடந்த 15 வருடங்களாக மனநலம் சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடுமையான குடிப்பழக்கமும் இருந்து வந்தது.  

நைலான் கயிற்றில் தற்கொலை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தர்மராஜ், கடந்த 26-ந் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப் போட்டு தொங்கினார்.

 இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகமணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி ஆம்புலன்ஸை வரவழைத்தார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி பிரிந்து சென்ற துயரம் : வெல்டிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை !!!

மனைவி பிரிந்து சென்ற துயரம் : வெல்டிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை !!!

 மனைவி பிரிந்து சென்ற துயரம் : வெல்டிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை !!!

கேரளா மாநிலம் பாலக்காடு, குலமண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மகன் வினோத் (35). இவர் கோவை ரத்தினபுரி, சுப்பத்தாள் லே-அவுட்டில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் வினோத், ஷர்மிளா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வெல்டராக வேலை பார்த்து வந்தார். வினோத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.  

இதற்கு இடையே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வினோத், கடந்த 6 மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் ஃபேன் கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பரிதாப பலி !!!

ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பரிதாப பலி !!!

 ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பரிதாப பலி !!!

கோவை சாயிபாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, செர்மன்ராஜ் நகரைச் சேர்ந்த ஜோதிமணி (43) என்பவரது வீட்டில் கஸ்தூரி (75) என்ற மூதாட்டி வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவரை இவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கைவிட்டு விட்டனர். இதனால் அவர் அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் பிச்சை எடுத்து தனது வாழ்வாதாரத்தை கவனித்து வந்தார்.  

வயது முதிர்வு காரணமாக கடந்த 3 நாட்களாக கஸ்தூரிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரது அறையில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கிடந்ததை பக்கத்து வீட்டுக்காரரான சித்ரா பார்த்து ஜோதிமணிக்கு தகவல் கொடுத்தார். பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர், கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சாயிபாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மோடி தர்ற ரூ.3,000 வாங்கி தர்றேன்": 70 வயது பாட்டியிடம் நைசாக பேசி கம்மல், டாலர் பறிப்பு !!!

மோடி தர்ற ரூ.3,000 வாங்கி தர்றேன்": 70 வயது பாட்டியிடம் நைசாக பேசி கம்மல், டாலர் பறிப்பு !!!

 மோடி தர்ற ரூ.3,000 வாங்கி தர்றேன்": 70 வயது பாட்டியிடம் நைசாக பேசி கம்மல், டாலர் பறிப்பு !!!

கோவையில் "மோடி ஓல்டு ஏஜ் ஃபண்ட்" பணம் ரூ.3,000 வாங்கித் தருவதாகக் கூறி, 70 வயது மூதாட்டியிடம் இருந்து 3/4 பவுன் கம்மல் மற்றும் டாலரை அசிஸ்டெண்ட் போல நடித்து நைசாக பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (70), காசியப்பன் மனைவி. இவர் கடந்த மார்ச் 3-ந் தேதி காலை ராமநாதபுரம் சிக்னல் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், கஸ்தூரியிடம் பாசமாக பேசினார். "உங்களுக்கு மோடி அரசாங்கத்தின் முதியோர் உதவித் தொகை ரூ.3,000 வாங்கித் தருகிறேன், என்னுடன் வாருங்கள்" என கூறி தனது டூவீலரில் ஏற்றிச் சென்றார். அவரை ஐயர் மருத்துவமனை அருகே அழைத்துச் சென்ற அந்த நபர், "அதிகாரிகள் பார்க்கும் போது காதில் நகை இருக்கக் கூடாது, அப்போது தான் பணம் ஒப்புதல் ஆகும். கம்மலையும், டாலரையும் கழட்டி வையுங்கள்" எனக் கூறினார். அதை நம்பிய கஸ்தூரி நகைகளைக் கழட்டி தனது பர்சில் வைத்தார். 

உடனே அந்த நபர், "பாட்டி பர்ஸ் தொலைந்துவிடும், நான் பத்திரமாக வைத்து உள்ளேன்" என்று நகைகளை வாங்கிக் கொண்டு, "இதோ ஜெராக்ஸ் எடுத்து விட்டு வருகிறேன்" என்று கூறிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பைக் திருடிய சிவகங்கை, விருதுநகர் வாலிபர்கள் 4 பேர் கைது: பைக் பறிமுதல் !!!

பைக் திருடிய சிவகங்கை, விருதுநகர் வாலிபர்கள் 4 பேர் கைது: பைக் பறிமுதல் !!!

 பைக் திருடிய சிவகங்கை, விருதுநகர் வாலிபர்கள் 4 பேர் கைது: பைக் பறிமுதல் !!!

கோவை, கவுண்டம்பாளையம், மேரு நகர், அசோக் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் தனது பைக்கை கடந்த 13-ந் தேதி பழுது பார்ப்பதற்காக கர்ணா என்பவரிடம் கொடுத்து இருந்தார். கர்ணா அந்த பைக்கை ரத்தினபுரி கண்ணப்பா நகர் 4-வது வீதியில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றார். கடந்த 17-ந் தேதி இரவு அவர் வந்து பார்த்த போது பைக் திருடு போயிருந்தது தெரியவந்தது.  

இதுகுறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் பேரில், சி4 ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கை திருடியது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த வீரமணிகண்டன் (21), சூர்யபிரசாத் (21), சுதர்சன் (21) மற்றும் விருதுநகர் அரசகுலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (18) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.80,000 மதிப்பு உள்ள மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.