அண்ணாமலை போட்டியிடாதது ஏன் ? ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் - தேசிய மகளிர் அணித் தலைவி வானதி எம்.எல்.ஏ !!!
கொங்கு மண்ணில் தேசிய ஜனநாயக கூட்டணி : "11-க்கு 11 வெற்றி உறுதி" - கோவையில் எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பேட்டி !!!
கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும்போது ;-
தமிழகத்திலே வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், நானும் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்று காலை மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கூட்டத்தை முடித்துவிட்டு கொண்டு இருவரும் இன்று முதல் தங்களுடைய தேர்தல் பணிகளை தொடங்கியதாகவும் கூறியவர்,
தமிழகத்தினுடைய அரசியல் சூழல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக, மிக சாதகமாக சென்று கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்க கூடிய திராவிடம் மாடல் அரசு மக்கள் முன்பாக தங்களுடைய தோல்வி பயத்தால், ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பதாகவும், பெண்களுடைய பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் பயன்பாடு தமிழகத்தினுடைய இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாமல், நம்முடைய தொகுதிகள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இவர்களால் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அரசாங்கம் எப்பொழுது வீட்டுக்கு செல்லும், வீட்டுக்கு அனுப்பவும் என்று காத்துக் கொண்டு உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தங்களுடைய கூட்டணியை பற்றி பேசி கொண்டு உள்ளதாகவும், இப்பொழுது இண்டி அலையன்ஸில் இருக்கக் கூடிய கூட்டணி ஒவ்வொரு கட்சிகளும் அவர்களுக்குள் இருக்கின்ற அதிருப்திகள், வெளிச்சத்திற்கு வந்து கொண்டு உள்ளதாக கூறியவர், எங்களுடைய பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாற்று பல்வேறு மட்டத்தில் இருக்கக் கூடிய அத்தனை தலைவர்களாலும், ஒவ்வொரு இடங்களிலும் அதற்கென்று கூட்டங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக கட்சி அறிவிப்புகளை வெளியிடும் என பார்த்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.
இந்தப் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலே கடந்த 2024 நின்றதில் இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பாக உழைத்துக் கொண்டு இருக்க கூடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் சட்டமன்ற தொகுதி அவிநாசிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் பகுதி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய பகுதி மட்டுமல்ல, மக்களுடைய ஆதரவையும் இருக்கக் கூடிய பகுதி அதனால் இங்கு போட்டியிடக் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கடந்த முறை தேர்தலில் பத்துக்கு பத்து 10/10 என்ற முறையில் எடுத்தோம், இந்த முறை கோவை - அவிநாசி தொகுதியும் சேர்த்து கோவை மாவட்டத்தில் 11 க்கு 11 என்று வெற்றி பெற போவதாக கூறினார்.
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பேச்சாளர் பட்டியல் இடம் பெற்று உள்ளார். ஸ்டார் வேட்பாளர் அது குறித்தான கேள்விக்கு
பரப்புரை தங்களுக்காக பண்ணுவதாக, கூறியிருக்கிறார். கட்சி இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளதாகவும், அவருடைய பணி என்ன ? என்று, நாங்களும் அவருடைய பரப்புரை தங்கள் தொகுதியில் குறிக்கு இன்று காலை பேசி வந்ததாகவும், என்னென்ன தேதிகளில் எங்கெங்கு ? வருவதாக உள்ளார் என்றும், நாளை மாலை கோவை வடக்கு தொகுதிக்கு வருகிறார். நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சர் முருகன் ஜி வுடன் செல்கிறார். அவருடைய பணிகள் சரியாக போய்க் கொண்டு உள்ளதாக கூறினார்.
அண்ணாமலை சீட்டு கொடுக்காதது குறித்தான கேள்விக்கு
சீட்டு கொடுக்கின்ற இடத்தில் முதலில் நாங்கள் இல்லை, அதனால் இது மாதிரி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நான் தேர்தலில் போட்டியிடவில்லை, என்று அவரை கூறியதற்கு பின்னரும் திரும்பவும், திரும்ப கட்சி பூசல், அக்கா - தம்பி, அண்ணன் - தம்பி ஒன்று விடாமல், அதாவது இன்றைக்கு ஊடகங்களை பார்க்கிறோம். தேர்தல் பிரச்சாரம் சென்று கொண்டு இருக்கக் கூடிய தலைவர்கள் அவருடைய பிரச்சனைகள், தமிழகத்தினுடைய மக்களுடைய பிரச்சினைகளை பேசாமல் எங்கெங்கெல்லாம் ? இது போன்ற வைப் கிடைக்குமா ? அங்கெல்லாம் இது போன்ற கருத்துக்களை உருவாக்குவது என்பது நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் உண்மையான பிரச்சனைகளை நீங்கள் பேசினீர்கள் என்றால் பதில் சொல்லலாம்..
அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர் தனபால் தேர்தலில் சீட்டு கொடுக்காமல், பா.ஜ.க விற்கு கொடுத்து இருப்பதாக பேசியது குறித்தான கேள்விக்கு
கூட்டணிப் பேச்சு வார்த்தையில் எந்தெந்த தொகுதி என்பது கட்சியினுடைய மேல் மட்டத்தில் தலைமை முடிவெடுக்கிறது. அதில் இருக்கின்ற ஒவ்வொரு விபரங்கள் நீங்கள் கொடுத்தீர்களா ? நீங்கள் இந்த பட்டியல் கொடுத்தீர்களா ? நீங்கள் அதை பேசினீர்களா ? எப்படி வரும் என்று அதை எப்படி ? நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லா கூட்டணியும் தி.மு.க விடம் கேட்டார்கள், அதை நீங்கள் ஏன் ? கொடுக்கவில்லை என்று கேட்பீர்களா ? என கேள்வி எழுப்பியவர், கேளுங்கள் நாங்கள் அதை தான் சொல்கிறோம், ஒவ்வொரு கூட்டணி தலைமையும், அவர்கள் தலைமை தான் முடிவு செய்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பேசும்போது ;
பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என தெரிவித்தார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு தி.மு.க அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் விரும்பும் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தான் கொடுக்கும் எனவும், கட்சி சொல்வதை கேட்டு அனைவரும் உழைத்து வருகிறோம் என குறிப்பிட்டார்.