Ad 728x90

புதன், 22 ஜூலை, 2026

 “சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ;  essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!

“சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ; essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!

 “சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ;  essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!

“ஏசி அளவைக் குறைக்க முடியாதா ?” எனக் கேட்டதற்கு ஓட்டுநரின் அசால்ட் பதில் : இணையத்தைக் கலக்கும் அவல வீடியோ !!!

 கோவையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக ரூ.1,614 கொடுத்து பிரபல essaar தனியார் ஆம்னி பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணி ஒருவர், பேருந்தின் சுகாதாரமற்ற மோசமான சூழல் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ காட்சி, தற்பொழுது இணையத்தில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள், சீரான பராமரிப்பின்றி இவ்வாறான சேவைகளை வழங்கிப் பயணிகளின் பணத்தைச் சுரண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

அந்த வீடியோவை வெளியிட்ட பயணி ஆதங்கத்துடன் பேசுகையில், 

"இந்த பேருந்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே இலவசமாக 'வீசிங்' (Wheezing) பிரச்சனை வந்துவிடும் அளவுக்குக் காற்று வீசுகிறது. குளிர்சாதனப் பெட்டியின் (AC) குளிர்சியைக் குறைக்கக் கோரி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டதற்கு, 'ஓரு முறை போட்டால் அப்படித் தான் வரும், குறைக்க முடியாது' என மிகவும் அசால்ட்டாகப் பதிலளித்தனர்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 அதுமட்டுமின்றி, பேருந்தின் இருக்கைகள் முழுவதும் தூசிகள் படிந்தும், ஆங்காங்கே பூச்சிகள் ஊர்ந்து கொண்டும் இருந்த சுகாதாரமற்ற நிலையையும் அவர் தனது செல்போனில் பதிவிட்டு உள்ளார்.

 அதிகக் கட்டணம் வசூலித்தும் அடிப்படைப் பராமரிப்பைக் கூட வழங்காத தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகத்தின் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெங்களூரு டூ கேரளா: ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - கோவையில் 70 கிராம் மெத்தாம்பெட்டமினுடன் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது !!!

பெங்களூரு டூ கேரளா: ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - கோவையில் 70 கிராம் மெத்தாம்பெட்டமினுடன் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது !!!

 பெங்களூரு டூ கேரளா: ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - கோவையில் 70 கிராம் மெத்தாம்பெட்டமினுடன் 5 பேர் கும்பல் கூண்டோடு கைது !!!

கருமத்தம்பட்டி மேம்பாலத்தில் மடக்கிய தனிப்படை : சொகுசு கார் பறிமுதல் – எஸ்.பி பவன் கே ரெட்டி அதிரடி நடவடிக்கையால் உடைந்த மாநிலங்களுக்கு இடையேயான நெட்வொர்க் !!!


 பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல் செய்து 5 பேர் கொண்ட நெட்வொர்க் கும்பலை அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை வேரறுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பவன் K. ரெட்டி, தலைமையில் தீவிர சோதனைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தனிப்படை உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், கருமத்தம்பட்டி நான்கு சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த மாருதி சுசூகி ரிட்ஸ் காரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, காரின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

 இது தொடர்பாகப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து (Cr. No. 176/2026), பாலக்காட்டைச் சேர்ந்த அஜ்மல் (29), சாய்பாபா காலனியைச் சேர்ந்த அபுதாஹிர் (24), வீரபாண்டியைச் சேர்ந்த பாலாஜி (26) மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது அலி (27) ஆகிய 4 பேரைக் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட புலனாய்வில், இந்த வழக்கில் முதன்மைச் குற்றவாளியாக செயல்பட்ட திருச்சூரைச் சேர்ந்த ஜசீர் (30) என்பவரை போலீசார் தூக்கினர்.

 பெங்களூருவில் பணியாற்றிய போது போதைப்பொருள் மாஃபியா கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய ஜசீர், இந்த 4 பேரையும் பெங்களூருவுக்கு அனுப்பி போதைப்பொருளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தத் திட்டமிட்டது அம்பலமானது.

 ஏற்கனவே கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஜசீரையும் கைது செய்த போலீசார், கர்நாடகா மற்றும் கேரளாவை இணைக்கும் இந்த சர்வதேச நெட்வொர்க்கின் நொறுக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 த.வெ.க கட்சி கொடி காரில் நள்ளிரவு அராஜகம்... பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை : கோவையில் பொதுமக்களிடம் சிக்கித் தப்பி ஓடி ஸ்டேஷனில் தஞ்சம் !!!

த.வெ.க கட்சி கொடி காரில் நள்ளிரவு அராஜகம்... பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை : கோவையில் பொதுமக்களிடம் சிக்கித் தப்பி ஓடி ஸ்டேஷனில் தஞ்சம் !!!

 த.வெ.க கட்சி கொடி காரில் நள்ளிரவு அராஜகம்... பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை : கோவையில் பொதுமக்களிடம் சிக்கித் தப்பி ஓடி ஸ்டேஷனில் தஞ்சம் !!!

பாதிக்கப்பட்ட ஏழை வியாபாரிக்கு நியாயம் வழங்காத போலீசார் ? முற்றுகையிட்ட பொதுமக்கள்; கோவையில் தீயாய் பரவும் ‘வீடியோ’ !!!

கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கட்சி கொடி கட்டிய காரில் வந்த நான்கு போதை வாலிபர்கள், சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரியின் தள்ளுவண்டி மீது காரை மோதி பயங்கர ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய அந்த போதை ஆசாமிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் ‘தென்றல் மணமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று வேளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி கட்டப்பட்ட கார் ஒன்றில் 4 இளைஞர்கள் மது அருந்துவதற்காக வந்து உள்ளனர். அவர்கள் தங்களது காரை மதுபான கூடத்தின் எதிர்புறமாக அமைந்து உள்ள புறக்காவல் நிலையம் அருகிலேயே ‘நைஸாக’ நிறுத்தி விட்டுச் சென்று உள்ளனர்.

​நாள் முழுதும் மது அருந்தி விட்டு, இரவு நேரத்தில் அதிக போதையில் தங்களது காரை எடுக்க அவர்கள் வந்து உள்ளனர். அப்போது காருக்கு முன்பாக, கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வழக்கம் போலத் தனது தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

காரில் ஏறிய அந்த 4 போதை வாலிபர்களும், வழிவிடுமாறு ஏழை வியாபாரி லட்சுமணனிடம் ஆக்ரோஷமாக காரை எடுத்து லட்சுமணனின் பானிபூரி தள்ளுவண்டி மீது ‘டமார்’ என மோதி உள்ளனர். வண்டி சேதம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் தட்டிக் கேட்ட போது, போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த 4 வாலிபர்களும் அவருடன் தகாத வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

​பயந்து போன லட்சுமணன் அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவே, அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடமும் அந்த போதை ஆசாமிகள் அராஜகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ரகளை செய்த 4 பேரையும் கையும், களவுமாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றனர்.

பொதுமக்கள் தங்களைச் சூழ்ந்து கொண்டதை அறிந்த அந்த 4 வாலிபர்களும், கூட்டத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடி, அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆத்திரத்தில் திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

​இருப்பினும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை வியாபாரி லட்சுமணனுக்கு எவ்வித நஷ்டஈடோ அல்லது நியாயமோ ?பெற்றுத் தராமல், த.வெ.க கட்சி கொடியுடன் வந்த நபர்களுக்குக் காவல் துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினர். 

இதனிடையே, போதை வாலிபர்களின் இந்த அராஜகத்தையும் பொதுமக்களின் கொந்தளிப்பையும் அங்கு இருந்த சிலர் தங்களது செல்போன்களில் துல்லியமாகப் படம் பிடித்து உள்ளனர். 

தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட்: முழுவதுமாக நேரலை செய்யப்படும் என பேரவைத் தலைவர் உறுதி !!!

ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட்: முழுவதுமாக நேரலை செய்யப்படும் என பேரவைத் தலைவர் உறுதி !!!

 ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட்: முழுவதுமாக நேரலை செய்யப்படும் என பேரவைத் தலைவர் உறுதி !!!

தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5 அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181(1)-இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முழு சட்டப்பேரவை நிகழ்வும் நேரலை செய்யப்படும் என்று உறுதி செய்து உள்ளார்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவை கூடி காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அறிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2026 ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181-ன் கீழ், 2026–2027ஆம் ஆண்டிற்கான, திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இதற்காக ஆகஸ்ட் 5-ஆம் தேதியை மாநில ஆளுநர் குறித்து உள்ளார்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டபேரவைக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள், வாக்காளர்கள் மட்டுமல்லாமல் வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நம்புகிறேன். பட்ஜெட் தாக்கல் முழுமையாக நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்” என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று, சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருந்ததால் அன்றைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், புதிய த.வெ.க அரசின் முதல் திருத்திய பட்ஜெட்டை ஆகஸ்ட் 5 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார்.

ஜனநாயகன்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் !!!

ஜனநாயகன்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் !!!

 ஜனநாயகன்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் !!!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படம் ’ஜனநாயகன்’. இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு பிறகு வரும் 23 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரின் கடைசி திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் த.வெ.க வினர் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ’அடங்காத தல குருப்ஸ்’ அஜித் ரசிகர் மன்றம் சார்பில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வித்தியாசமான வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ரியாஸ் தலைமையில் நகரின் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளன.

இந்த போஸ்டர்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் கருப்பு உடையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் இணைந்து வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று உள்ளது. மேலும், "ரசிகர்களின் இதயத்தில் தல, மக்கள் மனதில் தளபதி, பாதை வேறாக இருந்தாலும், உச்சம் ஒன்று தான்" என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது.

அதேபோல், ’அடங்காத தல குரூப்ஸ்’ மயிலாடுதுறை மாவட்ட தலைமை சார்பில் 'ஜனநாயகன்' வெள்ளித் திரையில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரித்து வந்த காலம் முதல் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே போட்டிகள் மற்றும் மோதல்கள் நிலவியது. தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் கட்சி துவங்கி முதலமைச்சரான நிலையில், அஜித்தும் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளார். இதனால் காலப் போக்கில் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மோதல்கள் குறைந்து வருகிறது.

இந்த சூழலில், மயிலாடுதுறையில் முதலமைச்சர் விஜய்யின் திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி இருப்பது பொதுமக்கள் மற்றும் நடிகர்களின் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்ற அவலம் !!!

பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்ற அவலம் !!!

 பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்ற அவலம் !!!

ஆரணி அருகே உள்ள ஆவணியாபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (28) என்பவர் நேற்று (ஜூலை 20) இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தின் போது, அந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை வயல்வெளி வழியாக சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

ஆனால், வயல்வெளி வழியாக உடலை எடுத்துச் செல்வதால், அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைவதாகவும், இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் உடலை வயல்வெளி வழியாக எடுத்து செல்லும் சம்பவம் சமூக வலைதலங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிராமத்திற்கு சுடுகாடு செல்லும் முறையான பாதை வசதி இல்லாதது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து ஆவணியாபுரம் கிராம மக்கள் கூறுகையில், 

சுடுகாட்டிற்கு செல்லுவதற்கான முறையான பாதை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களுக்கு பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஒவ்வொரு முறையும் கிராமத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் போது இந்த அவல நிலையே தொடர்வதாகவும், உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலை நீண்ட நாட்களாக தொடர்வதாகவும், இதற்கான தீர்வு தற்போது வரை எட்டப்படவில்லை எனவும் அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதை அடுத்து, இது போன்ற அவலநிலை ஏற்படாத வகையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆவணியாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தரமான சாலை மற்றும் நடைபாதை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஓட்டலில் சாப்பிட சென்ற சிறுவன் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் பயங்கரம் !!!

ஓட்டலில் சாப்பிட சென்ற சிறுவன் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் பயங்கரம் !!!

 ஓட்டலில் சாப்பிட சென்ற சிறுவன் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் பயங்கரம் !!!

விக்கிரமசிங்கபுரத்தில், உணவகத்திற்கு சாப்பிட சென்ற இளைஞரையும், சிறுவனையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த இசக்கி பாபு (19). இவர் தனது நண்பரான கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (21), அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆகியோருடன் நேற்றிரவு மேற்கு ரத வீதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்று உள்ளார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இவர்கள் மூவரிடமும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் அவர்கள் தாக்கிக் கொண்டனர். அப்போது மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறுவன் உள்பட 3 பேரையும் வெட்ட முயற்சித்து உள்ளார். இதனை பார்த்து பயந்து போன மூவரும், அங்கு இருந்து ஓடி உள்ளனர். எனினும், அவர்களை விடாமல் துரத்திச் சென்ற மர்ம நபர்கள், சந்தனமாரியம்மன் கோவில் பின்புறம் அவர்களை வழிமறித்து, சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இந்த தாக்குதலில் சுபாஷ் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில், இசக்கி பாபு, சிறுவன் ஆகிய இருவருக்கும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் காயம் அடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கு இருந்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் அவர் அழைத்து செல்லப்பட்டார். தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.