“சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ; essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!
“ஏசி அளவைக் குறைக்க முடியாதா ?” எனக் கேட்டதற்கு ஓட்டுநரின் அசால்ட் பதில் : இணையத்தைக் கலக்கும் அவல வீடியோ !!!
கோவையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக ரூ.1,614 கொடுத்து பிரபல essaar தனியார் ஆம்னி பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணி ஒருவர், பேருந்தின் சுகாதாரமற்ற மோசமான சூழல் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ காட்சி, தற்பொழுது இணையத்தில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள், சீரான பராமரிப்பின்றி இவ்வாறான சேவைகளை வழங்கிப் பயணிகளின் பணத்தைச் சுரண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
அந்த வீடியோவை வெளியிட்ட பயணி ஆதங்கத்துடன் பேசுகையில்,
"இந்த பேருந்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே இலவசமாக 'வீசிங்' (Wheezing) பிரச்சனை வந்துவிடும் அளவுக்குக் காற்று வீசுகிறது. குளிர்சாதனப் பெட்டியின் (AC) குளிர்சியைக் குறைக்கக் கோரி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டதற்கு, 'ஓரு முறை போட்டால் அப்படித் தான் வரும், குறைக்க முடியாது' என மிகவும் அசால்ட்டாகப் பதிலளித்தனர்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
அதுமட்டுமின்றி, பேருந்தின் இருக்கைகள் முழுவதும் தூசிகள் படிந்தும், ஆங்காங்கே பூச்சிகள் ஊர்ந்து கொண்டும் இருந்த சுகாதாரமற்ற நிலையையும் அவர் தனது செல்போனில் பதிவிட்டு உள்ளார்.
அதிகக் கட்டணம் வசூலித்தும் அடிப்படைப் பராமரிப்பைக் கூட வழங்காத தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகத்தின் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.