Ad 728x90

சனி, 4 ஏப்ரல், 2026

50-வது முறை களத்தில் 'ஜனநாயகப் போராளி' நூர் முகமது: மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து விநோத மனுத் தாக்கல்!!!

50-வது முறை களத்தில் 'ஜனநாயகப் போராளி' நூர் முகமது: மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து விநோத மனுத் தாக்கல்!!!

50-வது முறை களத்தில் 'ஜனநாயகப் போராளி' நூர் முகமது: மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து விநோத மனுத் தாக்கல்!!!

​"ஓட்டுக்குக் காசு வாங்கினால் பிச்சைக்காரர்கள் ஆவோம்!" - கோயம்புத்தூரின் 'விழிப்புணர்வு மனிதர்' நூர் முகமதுவின் அதிரடி என்ட்ரி!

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தேர்தல் களம் என்றாலே, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு பெயர் 'நூர் முகமது'. கோவை, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் தனது 50-வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ள 68 வயது நூர் முகமது, இம்முறையும் தனது விநோதமான போராட்ட வடிவால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளார். மொட்டை அடித்த தலையில் மிளகாய் மாலை அணிந்து, கையில் பிச்சை பாத்திரத்துடன், வண்டியில் இழுத்து வரப்பட்ட அவர் செய்த விழிப்புணர்வு பிரச்சாரம், செய்த சம்பவம் அரங்கேறியது.

​"வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் அரசியல் தந்திரங்களை முறியடிக்கவே இந்த வேடம்" எனப் பிரகடனம் செய்த அவர், தான் கடந்த 1997-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் கொண்டவர் என்பதையும் நினைவுபடுத்தினார். இதுவரை ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை சுமார் 49 முறை போட்டியிட்டுள்ள அவர், இதற்காகத் தனது சொந்தப் பணத்தில் சுமார் 8 லட்சம் ரூபாயை விழிப்புணர்வுக்காகச் செலவிட்டு உள்ளார். கடந்த காலங்களில் சவப்பெட்டியுடன் வந்து ஓட்டுக்குக் காசு வாங்குவதன் அபாயத்தை உணர்த்தியவர், இம்முறை பிச்சை பாத்திரத்துடன் வந்து, "இலவசங்களுக்கு அடிமையாகாதீர்கள்" எனத் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் ஒரு பாடத்தை எடுத்துரைத்து உள்ளார்.

​அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களும், பணமும் ஒரு கட்டத்தில் நம்மைப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை வலியுறுத்துவதே தனது நோக்கம் என நூர் முகமது கூறுகிறார். கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இவர், எந்தவிதப் பதவியையும் விட, மக்களின் விழிப்புணர்வே நாட்டின் உண்மையான பலம் என நம்புகிறார். 50 முறை வேட்புமனு தாக்கல் செய்து தோற்றாலும், தன் ஜனநாயகக் கடமையையும் சமூக அக்கறையையும் சளைக்காமல் செய்து வரும் நூர் முகமது, கோவை தேர்தல் வரலாற்றில் ஒரு தனித்துவமான மனிதராகத் திகழ்கிறார்.

கரகாட்டம், செண்டை மேளம், கலை நிகழ்ச்சிகள் என உற்சாக ஊர்வலம்: "த.வெ.க vs தி.மு.க - விஜய் முதல்வர் ஆவது உறுதி" - கோவையில் தேர்தல் களத்தைச் சூடாக்கிய வேட்பாளர் !!!

கரகாட்டம், செண்டை மேளம், கலை நிகழ்ச்சிகள் என உற்சாக ஊர்வலம்: "த.வெ.க vs தி.மு.க - விஜய் முதல்வர் ஆவது உறுதி" - கோவையில் தேர்தல் களத்தைச் சூடாக்கிய வேட்பாளர் !!!

 கரகாட்டம், செண்டை மேளம், கலை நிகழ்ச்சிகள் என உற்சாக ஊர்வலம்: "த.வெ.க vs தி.மு.க - விஜய் முதல்வர் ஆவது உறுதி" - கோவையில் தேர்தல் களத்தைச் சூடாக்கிய வேட்பாளர் !!!

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள வழக்கறிஞர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத், இன்று தனது தேர்தல் பயணத்தை எழுச்சியுடன் தொடங்கி உள்ளார். 

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் வரை, செண்டை மேளங்கள் முழங்க, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவர் சென்ற ஊர்வலம், அப்பகுதி பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. 

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

​"ஒரு வழக்கறிஞராக இதுவரை நான் செய்த மக்கள் பணிகளை, இனி ஒரு அரசியல் களத்தில் நின்று அதிகார பூர்வமாகச் செய்ய த.வெ.க எனக்கு வாய்ப்பு அளித்து உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த ஶ்ரீ கிரி பிரசாத், தொகுதியின் தற்போதைய சூழல் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

 "மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாகச் சென்றடையவில்லை. எனவே, இத்தேர்தல் களம் என்பது த.வெ.க-விற்கும், ஆளும் தி.மு.க-விற்கும் இடையிலான நேரடிப் போட்டியாகும்" என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.

​இளைஞர்களின் பேராதரவு மற்றும் எழுச்சி, தலைவர் விஜய்யைத் தமிழகத்தின் அடுத்த முதல்வராக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனத் தன்னம்பிக்கையுடன் கூறிய அவர், மாற்றத்தை விரும்பும் சிங்காநல்லூர் தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.

 வழக்கறிஞர் பின்னணியில் இருந்து களமிறங்கி உள்ள இவரின் அரசியல் வருகை, சிங்காநல்லூர் தொகுதியின் வாக்கு வங்கியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானே ஷாக் ஆயிட்டேன் - சாதிப்பெயர் சர்ச்சைக்கு சிங்காநல்லூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விளக்கம் !!!

நானே ஷாக் ஆயிட்டேன் - சாதிப்பெயர் சர்ச்சைக்கு சிங்காநல்லூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விளக்கம் !!!

 நானே ஷாக் ஆயிட்டேன் - சாதிப்பெயர் சர்ச்சைக்கு சிங்காநல்லூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விளக்கம் !!!

தனது பெயருக்கு பின்னால் நாயுடு என்ற சாதிய அடைமொழி இணைக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் அது தட்டச்சு பிழையால் ஏற்பட்டது எனவும் சிங்காநல்லூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீநிதி தன் சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 


https://x.com/i/status/2040402772210950166


கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த ஸ்ரீநிதி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயருக்கு பின்னால் நாயுடு என்ற அவரது சாதிப்பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஸ்ரீநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்‌. 


அவரது சமூக வலைதளப்பதிவில், நான் ஸ்ரீநிதி வெங்கடேசன் மோகன். தமிழ்நாடு பிறந்து வளர்ந்து மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள். தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதி அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்து எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சுப் பிழையால் ஏற்பட்டுவிட்டது. என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும் எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியை மட்டுமே அடையாளமாக கொண்டவள் நான். சாதி மத பேதம் அற்ற சமத்துவமே என் கொள்கை என குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து மாறி அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளரை மாற்ற கோரியும் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமானத்திற்குத் தோல்வி : கோவையில் மாற்றுத்திறனாளி வேட்பாளரை மாடி ஏறச் சொன்ன தேர்தல் அதிகாரி  !!!

மனிதாபிமானத்திற்குத் தோல்வி : கோவையில் மாற்றுத்திறனாளி வேட்பாளரை மாடி ஏறச் சொன்ன தேர்தல் அதிகாரி !!!

மனிதாபிமானத்திற்குத் தோல்வி : கோவையில் மாற்றுத்திறனாளி வேட்பாளரை மாடி ஏறச் சொன்ன தேர்தல் அதிகாரி  !!!

"விதிமுறை முக்கியம்; மனிதநேயம் அல்ல" - நடக்க முடியாமல், சென்று மனுத் தாக்கல் செய்த வேட்பாளரின் கண்ணீர் கதை !!!

கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று அரங்கேறிய ஒரு நிகழ்வு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ் (44), சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

தேர்தல் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. கால்கள் பாதிக்கப்பட்ட சங்கரராஜ், மாடிக்கு ஏறிச் செல்வது கடினம் என்பதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மாருதிப் பிரியாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். "நான் மாற்றுத்திறனாளி என்பதால் மாடிக்கு வர சிரமமாக உள்ளது, தயவு செய்து கீழே வந்து மனுவைப் பெற்றுக்கொள்ள முடியுமா?" என உருக்கமாகக் கேட்டார்.

அதிகாரியின் கறார் பதில்:

ஆனால், மனிதாபிமானத்தை விட விதிமுறைகளே முக்கியம் என நினைத்த அதிகாரி, "தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் அறைக்கு வந்து தான் மனு கொடுக்க வேண்டும்" என கறாராகக் கூறி விட்டார். வேறு வழியின்றி, சங்கரராஜ் மிகுந்த உடல் உபாதைகளுக்கு இடையே, ஒவ்வொரு படியாக ஊர்ந்து மிகுந்த சிரமத்துடன் முதல் மாடிக்குச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கரராஜ் கூறியதாவது:

"மாற்றுத்திறனாளிகள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரான நான், மாற்றுத்திறனாளிகளின் அரசியல் அங்கீகாரத்திற்காக தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் போட்டியிடுகிறேன். இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்குகள் உள்ளன.

தேர்தல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சாய்வு தளம், வீல்சேர் என வசதி செய்து தரும் அரசு, வேட்புமனு தாக்கலின் போது மட்டும் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை? என்னைப் போன்றவர்கள் வரும் போது அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அலுவலகங்களை அமைக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தா? கோவையில் அசர வைத்த சுயேட்சை !!!

இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தா? கோவையில் அசர வைத்த சுயேட்சை !!!

இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தா? கோவையில் அசர வைத்த சுயேட்சை !!!

அனைத்துக்கட்சி தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து, தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென, வேண்டுகோள் விடுத்த சுயேட்சை வேட்பாளர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் அதிகளவிலான விஸ்வகர்மா மக்கள் வசித்து வருகின்றனர். எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விஸ்வகர்மா மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தங்க நகை தயாரிப்பு தொழிலில் போதியளவு வேலைகள் இல்லாததால், , அவர்களது குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் தலைவர் வேல்முருகன் தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தஙகளது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை , வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அப்போதுதான் விஸ்வகர்மா மக்களின் பிரநிதியாக இருந்து சமூக மக்களின் குறைகளை எடுத்துக்கூறவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு, வாய்ப்பாக இருக்கும் என்றார்.

 மக்களிடம் ஓட்டு கேட்கும் வேட்பாளர்களிடையே, வேட்பாளர்களையே வாபஸ் பெற வேண்டுகோள் வைத்த சுயேட்சையால் அரசியலில் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள் எங்கப்பா நீ இருந்த என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அண்ணாமலை போட்டியிடாதது ஏன் ? ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் -  தேசிய மகளிர் அணித் தலைவி வானதி எம்.எல்.ஏ !!!

அண்ணாமலை போட்டியிடாதது ஏன் ? ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் - தேசிய மகளிர் அணித் தலைவி வானதி எம்.எல்.ஏ !!!

அண்ணாமலை போட்டியிடாதது ஏன் ? ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் -  தேசிய மகளிர் அணித் தலைவி வானதி எம்.எல்.ஏ !!!

கொங்கு மண்ணில் தேசிய ஜனநாயக கூட்டணி : "11-க்கு 11 வெற்றி உறுதி" - கோவையில் எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பேட்டி !!!

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசும்போது ;-

தமிழகத்திலே வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், நானும் கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்று காலை மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கூட்டத்தை முடித்துவிட்டு கொண்டு இருவரும் இன்று முதல் தங்களுடைய தேர்தல் பணிகளை தொடங்கியதாகவும் கூறியவர்,

 தமிழகத்தினுடைய அரசியல் சூழல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிக, மிக சாதகமாக சென்று கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்க கூடிய திராவிடம் மாடல் அரசு மக்கள் முன்பாக தங்களுடைய தோல்வி பயத்தால், ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பதாகவும், பெண்களுடைய பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, போதைப்பொருள் பயன்பாடு தமிழகத்தினுடைய இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாமல், நம்முடைய தொகுதிகள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இவர்களால் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் இந்த அரசாங்கம் எப்பொழுது வீட்டுக்கு செல்லும், வீட்டுக்கு அனுப்பவும் என்று காத்துக் கொண்டு உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தங்களுடைய கூட்டணியை பற்றி பேசி கொண்டு உள்ளதாகவும், இப்பொழுது இண்டி அலையன்ஸில் இருக்கக் கூடிய கூட்டணி ஒவ்வொரு கட்சிகளும் அவர்களுக்குள் இருக்கின்ற அதிருப்திகள், வெளிச்சத்திற்கு வந்து கொண்டு உள்ளதாக கூறியவர், எங்களுடைய பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாற்று பல்வேறு மட்டத்தில் இருக்கக் கூடிய அத்தனை தலைவர்களாலும், ஒவ்வொரு இடங்களிலும் அதற்கென்று கூட்டங்கள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக கட்சி அறிவிப்புகளை வெளியிடும் என பார்த்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

இந்தப் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலே கடந்த 2024 நின்றதில் இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பாக உழைத்துக் கொண்டு இருக்க கூடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் சட்டமன்ற தொகுதி அவிநாசிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் பகுதி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய பகுதி மட்டுமல்ல, மக்களுடைய ஆதரவையும் இருக்கக் கூடிய பகுதி அதனால் இங்கு போட்டியிடக் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கடந்த முறை தேர்தலில் பத்துக்கு பத்து 10/10 என்ற முறையில் எடுத்தோம், இந்த முறை கோவை - அவிநாசி தொகுதியும் சேர்த்து கோவை மாவட்டத்தில் 11 க்கு 11 என்று வெற்றி பெற போவதாக கூறினார்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பேச்சாளர் பட்டியல் இடம் பெற்று உள்ளார். ஸ்டார் வேட்பாளர் அது குறித்தான கேள்விக்கு

பரப்புரை தங்களுக்காக பண்ணுவதாக, கூறியிருக்கிறார். கட்சி இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி உள்ளதாகவும், அவருடைய பணி என்ன ? என்று, நாங்களும் அவருடைய பரப்புரை தங்கள் தொகுதியில் குறிக்கு இன்று காலை பேசி வந்ததாகவும், என்னென்ன தேதிகளில் எங்கெங்கு ? வருவதாக உள்ளார் என்றும், நாளை மாலை கோவை வடக்கு தொகுதிக்கு வருகிறார். நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சர் முருகன் ஜி வுடன் செல்கிறார். அவருடைய பணிகள் சரியாக போய்க் கொண்டு உள்ளதாக கூறினார்.

அண்ணாமலை சீட்டு கொடுக்காதது குறித்தான கேள்விக்கு

சீட்டு கொடுக்கின்ற இடத்தில் முதலில் நாங்கள் இல்லை, அதனால் இது மாதிரி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நான் தேர்தலில் போட்டியிடவில்லை, என்று அவரை கூறியதற்கு பின்னரும் திரும்பவும், திரும்ப கட்சி பூசல், அக்கா - தம்பி, அண்ணன் - தம்பி ஒன்று விடாமல், அதாவது இன்றைக்கு ஊடகங்களை பார்க்கிறோம். தேர்தல் பிரச்சாரம் சென்று கொண்டு இருக்கக் கூடிய தலைவர்கள் அவருடைய பிரச்சனைகள், தமிழகத்தினுடைய மக்களுடைய பிரச்சினைகளை பேசாமல் எங்கெங்கெல்லாம் ? இது போன்ற வைப் கிடைக்குமா ? அங்கெல்லாம் இது போன்ற கருத்துக்களை உருவாக்குவது என்பது நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் உண்மையான பிரச்சனைகளை நீங்கள் பேசினீர்கள் என்றால் பதில் சொல்லலாம்..

அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர் தனபால் தேர்தலில் சீட்டு கொடுக்காமல், பா.ஜ.க விற்கு கொடுத்து இருப்பதாக பேசியது குறித்தான கேள்விக்கு

கூட்டணிப் பேச்சு வார்த்தையில் எந்தெந்த தொகுதி என்பது கட்சியினுடைய மேல் மட்டத்தில் தலைமை முடிவெடுக்கிறது. அதில் இருக்கின்ற ஒவ்வொரு விபரங்கள் நீங்கள் கொடுத்தீர்களா ? நீங்கள் இந்த பட்டியல் கொடுத்தீர்களா ? நீங்கள் அதை பேசினீர்களா ? எப்படி வரும் என்று அதை எப்படி ? நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். 

எல்லா கூட்டணியும் தி.மு.க விடம் கேட்டார்கள், அதை நீங்கள் ஏன் ? கொடுக்கவில்லை என்று கேட்பீர்களா ? என கேள்வி எழுப்பியவர், கேளுங்கள் நாங்கள் அதை தான் சொல்கிறோம், ஒவ்வொரு கூட்டணி தலைமையும், அவர்கள் தலைமை தான் முடிவு செய்கிறது. இதற்கு மேல் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பேசும்போது ;

பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதம் பெற்று பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே நோக்கம் என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பல வேதனைகளை சந்தித்து வருவதாகவும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் தடைபட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

 தமிழகத்தின் வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் சர்க்காராக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் தேவை எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசோடு தி.மு.க அரசாங்கம் அனுசரணையாக இல்லாததால், தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் விரும்பும் வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தான் கொடுக்கும் எனவும், கட்சி சொல்வதை கேட்டு அனைவரும் உழைத்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

கோலாகலத் திருக்கல்யாணம்: விசாலாட்சி - விஸ்வநாதேஷ்வரர் அருளில் திளைத்த பக்தர்கள்!

கோலாகலத் திருக்கல்யாணம்: விசாலாட்சி - விஸ்வநாதேஷ்வரர் அருளில் திளைத்த பக்தர்கள்!

கோலாகலத் திருக்கல்யாணம்: விசாலாட்சி - விஸ்வநாதேஷ்வரர் அருளில் திளைத்த பக்தர்கள்!

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 16-வது ஆண்டு ஸ்ம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ சண்டி ஹோமம் - பக்திப் பரவசத்தில் கோவை மக்கள் !!! 

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்ற விசாலாட்சி–விஸ்வநா தேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 16வது ஆண்டு ஸ்ம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ சண்டி ஹோமம் நடைபெற்றது.இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இதில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை அமைக்கப்பட்டு விசேஷ சண்டி ஹோமம் நடைபெற்றது.வேத முறைப்படி ஹோமக் கிரியைகளை நடத்தி, உலக நலன் மற்றும் பக்தர்களின் வளமான வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, விசாலாட்சி அம்பிகா மற்றும் விஸ்வநாதேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வை ஒட்டி மங்கள இசைகள் முழங்க, சாமிகளுக்கு புனித அலங்காரம் செய்யப்பட்டு, பாரம்பரிய முறையில் கல்யாணம் நடத்தப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


இந்நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்