காவல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

 கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளை தவசி மறைத்து வைத்திருந்த இடத்திற்கு, அதை கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை இன்று மாலை அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தவசியை, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட உடனடி ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 "14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

"14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

 கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரம், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12.09.2026) இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

 இதை அடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக எதிரி தவசி தெரிவித்து உள்ளார். அதன் பேரில், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர், தவசியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

​அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைப் பயங்கரமாக வெட்டினார். இதில் ஆய்வாளரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆய்வாளரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற தவசியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உடனடியாக எச்செரித்தனர். எனினும், எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அரிவாளுடன் காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், காவல் அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டுத் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

​துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

​கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யக் கோவை மாநகரக் காவல்துறை முன்னுரிமை அளித்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

புதன், 9 செப்டம்பர், 2026

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

ஒரே ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு அபராதம் !

ஒரே ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு அபராதம் !

கோவை, அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவிகள் 4 பேர் ஒரே ஸ்கூட்டரில் சென்றனர்.

அப்பொழுது அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை, அத்துடன் அவர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எனவே போக்குவரத்து விதிகளை மீறிய அந்த மாணவிகள் மீது காவல் துறையினர் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து பீளமேடு போக்குவரத்து போலீசார் அந்த மாணவிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் ஒரு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஒரே ஸ்கூட்டரில் நான்கு பேர் சென்றதும் தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்கள் போக்குவரத்து விதியை மீறியதால் அந்த நான்கு பேருக்கும் தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அந்த மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

தண்ணீர் பந்தல் சாலையில் அரங்கேறிய நடுரோட்டு அதிரடி: பொதுமக்கள் அச்சம், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி!

​ கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் '11 to 11' பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

​மது போதை தலைக்கேறிய நிலையில், தகராறு முற்றிப் பாரின் உள்ளேயும், வெளியேயும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

 ஆத்திரம் அடைந்த நபர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும்,  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார்.

​தற்போது அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

 அந்த வீடியோவில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

​ இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மதுபானக் கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "கோவையில் ஆடிட்டர் வீட்டில் பல லட்சம் வெள்ளி, ரொக்கம் திருட்டு" ; ஒரே வாரத்தில் கொள்ளையனைக் கூண்டோடு தூக்கிய கோவை தனிப்படை போலீஸ்!

"கோவையில் ஆடிட்டர் வீட்டில் பல லட்சம் வெள்ளி, ரொக்கம் திருட்டு" ; ஒரே வாரத்தில் கொள்ளையனைக் கூண்டோடு தூக்கிய கோவை தனிப்படை போலீஸ்!

பூஜை அறை, பீரோவை உடைத்துக் கைவரிசை காட்டிய நபர்கள் கைது: ரூ.3.30 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் மீட்பு!

​ கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வாரத்தில் கோவை மாநகரக் காவல் துறையினர் கைது செய்து பொருட்களையும் மீட்டு உள்ளனர்.

கோவை மாநகரம், B2 R.S.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கடாசலம் காலனி, ராபர்ட்சன் ரோட்டைச் சேர்ந்தவர் வி.ஆர்.சூரியநாராயணன் (76). ஆடிட்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

​கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு, இவரது மகன் வெளியூர் சென்று இருந்த நிலையில், ஆடிட்டர் சூரியநாராயணன் தனது மனைவியுடன் தரைத்தள படுக்கை அறையிலும், அவரது மருமகள் மற்றும் பேத்தி முதல் தளத்திலும் தூங்கச் சென்று உள்ளனர். வீட்டின் இருபுற கதவுகளையும் உள்புறமாகத் தாளிட்டு உறங்கச் சென்றனர்.

​மறுநாள் காலை (செப்டம்பர் 1) வழக்கம் போல் எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, ஹாலை ஒட்டி இருந்த பூஜை அறை மற்றும் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

​அங்கு இருந்த வாட்ரோப்பில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி குத்துவிளக்குகள், சிறிய வெள்ளி விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், கிண்ணங்கள் மற்றும் சிறிய இரும்பு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரொக்கப் பணம் ரூ.40,000/- மற்றும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த அபூர்வ பழைய நாணயங்கள் அனைத்தும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆடிட்டர் சூரியநாராயணன் அளித்த புகாரின் பேரில், B2 R.S.புரம் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

​சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தெற்குப் பகுதி காவல் துணை ஆணையர் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில், குற்றவாளியைப் பிடிக்கச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது.

 தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் தீவிர அறிவியல் பூர்வமான தடய சேகரிப்பு மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​விசாரணையின் முடிவில், இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி குணசீலன் (54), என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கைதான குணசீலன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆடிட்டர் வீட்டில் திருடப்பட்ட ரூ.3,00,000/- மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.30,00,0/- ரொக்கப் பணத்தை B2 ஆர்.எஸ்.புரம் தனிப்படை போலீசார் பத்திரமாகக் கைப்பற்றினர்.

​தொடர்ந்து குற்றவாளி குணசீலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

குட்கா, கூலி முதல் அனைத்து மதுபானங்களும் தாராளம்!

 கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுக்கடை முன்பு அரசாங்கத்தால் அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலை சித்திரா விமான நிலையம் அருகிலேயே, அந்த மூடப்பட்ட கடையின் முன்புறம் அமைந்து உள்ள ஒரு பெட்டிக்கடை சட்டவிரோத மது விற்பனையின் கூடாரமாக மாறிவிட்டது.

பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் அங்கு அனைத்து விதமான வெளிமாநில மற்றும் பிராண்டட் மதுபானங்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

மதுபானங்களுடன் நின்று விடாமல், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டு உள்ள குட்கா, ஹான்ஸ், சருதா, பான் மசாலா மற்றும் 'கூலி' போன்ற பல்வேறு ஆபத்தான போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் இந்தப் பெட்டிக் கடையில் தாராளமாக விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்தப் பகுதிக்கு வந்து எளிதில் போதைப் பொருட்களை வாங்கிச் செல்வது அப்பகுதி சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்து உள்ளது.

சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் இந்தச் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

எனவே,  காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகத் சித்திரா விமான நிலையம் அருகிலுள்ள அப்பெட்டிக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடக்கும் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

 "காவல் துறையின் உண்மையான வலிமை மக்கள் நம்பிக்கையில் தான் உள்ளது" - தமிழ்நாடு காவல் தினத்தில் கோவை மாநகரக் காவல் ஆணையர் நெகிழ்ச்சி உரை!

"காவல் துறையின் உண்மையான வலிமை மக்கள் நம்பிக்கையில் தான் உள்ளது" - தமிழ்நாடு காவல் தினத்தில் கோவை மாநகரக் காவல் ஆணையர் நெகிழ்ச்சி உரை!

சர் ராபர்ட் பீலின் கோட்பாடு, சைபர் குற்றங்கள் சவால் & காவல் குடும்பங்களின் தியாகம் குறித்து உருக்கமான வாழ்த்துச் செய்தி!

 மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் அமலுக்கு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான இன்று (செப்டம்பர் 6) தமிழ்நாடு காவல் தினத்தைக் கொண்டாடும் வகையில், கோவை மாநகரக் காவல் ஆணையர் தனது நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியையும், காவலர்களுக்குச் சிறப்பு வழிகாட்டுதல்களையும் வழங்கிச் சிறப்பித்து உள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு காவல் தினம்:

1859 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று அமலுக்கு வந்த மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் (Madras District Police Act), நமது மாநிலத்தில் நவீன காவல் நிர்வாகத்தின் மிக முக்கிய வரலாற்று மைல்கல்லாக அமைந்தது.

​அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்பம், தொழில்முறை திறன் (Professionalism) மற்றும் மனிதநேயத்துடன் மக்களின் பாதுகாப்பிற்காகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய காவல் ஆணையர், அதிகாரிகள், காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தனது தமிழ்நாடு காவல் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

"காவல்துறை என்பது ஒரு வேலை அல்ல ; அது ஒரு சேவை!":

நவீன காவல் துறையின் தந்தை சர் ராபர்ட் பீலின் (Sir Robert Peel) பொன்மொழியை மேற்கோள் காட்டிப் பேசிய காவல் ஆணையர்:

​*"குற்றம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறாமல் தடுப்பதே காவல் துறையின் முதன்மையான நோக்கமாகும். காவல் துறையின் உண்மையான வலிமை அதிகாரத்தில் இல்லை; மக்கள் நம் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையிலும் வழங்கும் ஒத்துழைப்பிலும் தான் உள்ளது.

காவல்துறை என்பது வெறும் வேலை அல்ல;

 அது ஒரு பொறுப்பு, ஒரு சேவை, ஒரு தியாகம். மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் நம்மை நாடி வரும் போது அவர்களுக்குத் தேவையானது ஒரு பாதுகாப்பான கரம், நம்பிக்கையான வார்த்தை மற்றும் நேர்மையான நடவடிக்கை ஆகும். சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமல்ல, சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதும் நமது கடமை"* எனக் குறிப்பிட்டார்.

பெண்கள் பாதுகாப்பு & நவீன சவால்கள்:

குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய ஆணையர், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் சைபர் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ளக் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவல் குடும்பங்களின் தியாகமும் தியாகிகள் நினைவும்:

இரவு பகலாகப் பணியாற்றும் ஒவ்வொரு காவலரின் பின்னாலும் இருக்கும் குடும்பங்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர், கடமையில் உயிர்நீத்த காவல் தியாகிகளுக்குத் தனது வீரவணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினார்.

​கோவை மாநகரக் காவல்துறையைத் திறமையான, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் மக்கள் நட்பான (People-Friendly Police) காவல்துறையாக மேலும் உயர்த்த அனைத்துக் காவலர்களும் நேர்மை, ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்துடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனத் தனது உ உரையை நிறைவு செய்தார்.

சனி, 5 செப்டம்பர், 2026

 "மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

"மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

ஜி.ஆர்.டி பள்ளி அருகே 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' (Singappadai Pink Booth) திறப்பு விழாவின் போது, கோவை மாநகரக் காவல் ஆணையருக்குக் காவலர் ஒருவரின் பிஞ்சுக் பெண் குழந்தை கம்பீரமாகச் சல்யூட் அடித்த காட்சி அங்கு திரண்டு இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கோவை மாநகரில் பெண்கள், மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முக்கியப் பகுதிகளில் மாநகரக் காவல் துறை சார்பில் 'சிங்கப்படை பிங்க் பூத்' மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகரக் காவல் ஆணையர் கலந்து கொண்டு புதிய பிங்க் பூத் மையத்தைத் திறந்து வைத்தார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிஞ்சுக் பெண் குழந்தையின் சல்யூட்:

விழா நிகழ்வின் போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் ஒருவரின் சிறிய குழந்தை, சீருடையில் இருந்த கோவை மாநகரக் காவல் ஆணையரைக் கண்டதும், சிறிதும் தயக்கமின்றி மிடுக்காக நின்று அவருக்குத் தனது பிஞ்சுக் கரங்களால் கம்பீரமாகச் சல்யூட் (Salute) அடித்தது.

காவலரின் குழந்தையின் இந்த எதிர்பாராத மரியாதையைக் கண்டு நெகிழ்ந்து போன மாநகரக் காவல் ஆணையர், உடனடியாக அக்குழந்தையைப் சல்யூட் (Salute) அடித்தது. புன்னகையோடு மகிழ்ச்சியை கொண்டார்.

இந்த அழகிய மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தருணம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் கூலிப்படையை ஏவி தந்தை, மகனை கொல்ல முயன்றது தெரியவந்து உள்ளது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் இருந்து 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் ஒரு சொகுசு வேனில் தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் ஆலப்புழா சென்று விட்டு, கோவை வழியாக அந்த வேனில் சென்னைக்கு புறப்பட்டனர்.

கோவை க.க.சாவடி அருகே டீசல் நிரப்புவதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் வேலை நிறுத்தினர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மற்றும் காரிலும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென வேணுக்குள் ஏறி சுற்றுலா பயணிகளை தாக்கியது. இதில் லோகநாதன், அவருடைய மகன் யுகேந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சி நடந்ததாக கருதப்பட்டது. ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் லோகநாதன் மற்றும் அவருடைய மகனை மட்டும் தாக்கியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.

மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பெயரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் பொழுது;

தென் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன், மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்து வருகிறார். அங்கு அவருக்கு தொழில் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூலிப்படையை ஏவி லோகநாதன், அவருடைய மகனையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்து உள்ளது.

இதில் கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது. அவர்களை பிடித்தால் தான் கூலிப்படையில் மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் ? எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள் ? என்ற முழு விவரம் தெரிய வரும், இது தொடர்பாக தனி படை போலீசார் மதுரை, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர் என்றும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 "பஸ்ஸை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் பாய்ந்த கார்" ; கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர் கும்பல்!

"பஸ்ஸை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் பாய்ந்த கார்" ; கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர் கும்பல்!

லட்சுமி மில்ஸ் பகுதியில் துணிச்சல் robbery: ரேஸ்கோர்ஸ் - பந்தய சாலை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கை!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1.06 கோடி பணப் பையைப் பறித்துக்கொண்டு காரில் தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை, காவல் துறையினர் உளுந்தூர்பேட்டையில் வைத்து மடக்கிப் பிடித்து உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது உறவினர் ஒருவர் ஆந்திராவில் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை கோவைக்கு வருகை தந்து, இங்கு உள்ள தங்க நகை தயாரிப்பாளர்களிடம் ரொக்கப் பணம் கொடுத்துப் புதிய தங்க நகைகளை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

அதே போல், நகைகள் வாங்குவதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்துடன் ரங்கசாமி இன்று கோவைக்கு வந்து உள்ளார்.

பேருந்தில் வந்து இறங்கிய ரங்கசாமி, அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு, கோவையில் உள்ள நகை தயாரிப்பாளருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வந்து விட்டத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

அவர் போனில் பேசிக் கொண்டு இருந்த போதே, அங்கு சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, ரங்கசாமியைச் சூழ்ந்து கொண்டது. நொடிப் பொழுதில் அவர் தோளில் அணிந்து இருந்த சோல்டர் பையை பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு, காரில் அதிவேகமாக அவிநாசி சாலை வழியாகத் தப்பியோடியது. அந்தப் பையில் நகைகள் வாங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 6 லட்சம் ரொக்கப் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த அவிநாசி சாலையில் நடந்த இந்தத் துணிச்சலான வழிப்பறி குறித்து, ரங்கசாமி உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், உடனடியாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தப்பிய கார் சென்ற பாதையில் உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமராக்கள் மற்றும் டோல்கேட் கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அந்த வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம் வரை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர், மாவட்ட எல்லைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமாக வந்த அந்த காரை மறித்துச் சோதனையிட்டனர். அதில் காரில் இருந்த 4 பேரையும், அவர்களிடம் இருந்த ரூ.1.06 கோடி பணத்தையும் காவல்துறையினர் பத்திரமாகக் கைப்பற்றினர்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைத் தனிப்படை போலீசார் சாதுரியமாகப் பிடித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பிடிபட்ட நால்வரிடமும் பந்தய சாலை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ஒரே பதிவு என்னுடன் இரண்டு வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை !

ஒரே பதிவு என்னுடன் இரண்டு வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை !

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மகேஸ்வரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும், அவருடைய நண்பர் சிபி என்பவரும் பிடிபட்டனர். நண்பர் அஸ்வினின் மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவை எண்களை சிபி தனது மோட்டார் சைக்கிளில் எழுதி இயக்கி வந்து உள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ரூபாய் 7,200 அபராதம் விதிக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அஸ்வின் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட விதி மீறல்களுக்கு ரூபாய் 700 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல் வாகனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

 "சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி" ; சாலையில் சாகசம் செய்து பீதியை ஏற்படுத்திய 6 பேர் கைது!

"சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி" ; சாலையில் சாகசம் செய்து பீதியை ஏற்படுத்திய 6 பேர் கைது!

இரண்டு பைக்கில் 6 பேர் பறந்து சென்று ஓட்டுநர்களை அச்சுறுத்தல்: இணையத்தில் வைரலான வீடியோவால் நடவடிக்கை!

 கோவை - திருச்சி சாலையில், காவல் நிலையம் அருகிலேயே இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வீதம் ஆபத்தான முறையில் பயணம் செய்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வால்த்தனமான செயல்களில் ஈடுபட்ட 6 கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கண்டனங்களைப் பெற்று உள்ளது.

கோவை - திருச்சி சாலையில் உள்ள சூலூர் காவல் நிலையத்திற்கு மிக அருகில், அப்பகுதியில் வழக்கம் போல் பொதுமக்களும் வாகனங்களும் சென்று கொண்டு இருந்தன. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வீதம் மொத்தம் 6 கல்லூரி மாணவர்கள் சாலையில் அதிவேகமாகவும், ஒன்றன் பின் ஒன்றாக ஆபத்தான முறையிலும் பைக் ரேஸ் செல்வது போல அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

​சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இவர்கள் வண்டியை மாற்றி, மாற்றி வளைத்து இயக்கி உள்ளனர்.

மாணவர்களின் இந்த விபரீதச் செயலைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.

​காவல் நிலையம் அமைந்து உள்ள முக்கியப் பகுதியிலேயே கல்லூரி மாணவர்கள் இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் விதிகளை மீறிச் செயல்பட்டு இருப்பது கோவை மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 "மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிச்சல் கொள்ளை" ; கோவையில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 100 கிலோ வெள்ளி கொள்ளை!

"மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிச்சல் கொள்ளை" ; கோவையில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 100 கிலோ வெள்ளி கொள்ளை!

பெங்களூரு சென்றிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை: வெரைட்டி ஹால் போலீசார் தீவிர விசாரணை!

 கோவையின் மிக முக்கிய மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஒப்பனக்கார வீதியில், ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்துச் சுமார் 100 கிலோ எடையிலான வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஒப்பனக்கார வீதி வணிக நிறுவனங்களும், மக்கள் நடமாட்டமும் நிறைந்து 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக் கூடிய மண்டலமாகும். இந்தப் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஆடிட்டர் சேஷகிரி. இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகனைப் பார்ப்பதற்காகக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்று உள்ளார்.

மகன் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு, மீண்டும் கோவை திரும்புவதற்காக இன்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.

வீட்டின் முன் கதவை அணுகிய போது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சேஷகிரி கடும் அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த சுமார் 100 கிலோ எடையிலான வெள்ளிப் பூஜை பொருட்கள் மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வீடு பூட்டப்பட்டு இருந்ததை மோப்பம் பிடித்த கொள்ளையர்கள், திட்டமிட்டு இந்தத் துணிச்சல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

இது குறித்து சேஷகிரி உடனடியாக வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுத் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், ஒப்பனக்கார வீதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, கொள்ளையர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒப்பனக்கார வீதியில், 100 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்ற இச்சம்பவம் கோவை மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது.

"லேப்டாப்புடன் தொலைந்த பெண்ணின் கைப்பை மீட்டுக்கொடுத்த ஸ்வீகி ஊழியர்!" - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நெகிழ்ச்சிப் பகிர்வு செய்த கோவை பெண்!

"லேப்டாப்புடன் தொலைந்த பெண்ணின் கைப்பை மீட்டுக்கொடுத்த ஸ்வீகி ஊழியர்!" - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நெகிழ்ச்சிப் பகிர்வு செய்த கோவை பெண்!


 

​ நேர்மையான டெலிவரி பாயின் உதவியும்: வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது லேப்டாப்புடன் தொலைந்து போன தனது கைப்பையை, சோகத்துடன் தேடிய பெண்ணுக்கு நேர்மையான டெலிவரி ஊழியர் ஒருவரால் அந்தப் பைக்கை மீண்டும் கிடைத்தது குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

கோவையில் இருந்து தனது அக்காவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற இளம் பெண் ஒருவர், தான் வைத்து இருந்த கைப்பையை வழியில் எதிர்பாராத விதமாகத் தவற விட்டு உள்ளார். வீட்டிற்கு சென்ற பின்னர் கைப்பை, குறிப்பாக அதனுள் அலுவலக லேப்டாப் மற்றும் முக்கியமான பொருட்கள் இருந்ததை உணர்ந்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

​உடனே அவர்கள் தாங்கள் வந்த காய்கறிச் சந்தை சாலை முழுவதும் தேடியும் கைப்பை எங்குமே காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள், அருகில் இருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்று உள்ளனர். ஆனால், காவல்துறையினரோ "இந்த இடம் எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கிடையாது; எனவே நீங்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார்ளியுங்கள்" என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி உள்ளனர்.

காவல் நிலையங்களின் அலைக்கழிப்பு மற்றும் லேப்டாப் தொலைந்துவிட்ட சோகத்துடன் அவர்கள் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகச் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் இருந்து அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வந்து உள்ளது. 

 காவல்துறையினர், "நீங்கள் தொலைத்த கைப்பை எங்கள் காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளது, வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்து உள்ளனர்.

உடனடியாகச் சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்ற அந்தப் பெண், தனது பையைத் திறந்து பார்த்த போது ஆச்சரியத்தின் உச்சத்திற்குச் சென்றார். பைக்குள் இருந்த அலுவலக லேப்டாப் மற்றும் அனைத்துப் பொருட்களும் எந்தவொரு சேதமும் இன்றி அப்படியே பத்திரமாக இருந்தன.

​இது எப்படி சாத்தியமானது என்று காவல் துறையினரிடம் கேட்டபோது, 'Zomato / Swiggy' உணவு விநியோக நிறுவனத்தில் பணி புரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், சாலையில் கிடந்த இந்தக் கைப்பையை எடுத்துச் சென்று பாதுகாப்பாகச் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனது தொலைந்த கைப்பைக்குள், இருந்த விலை உயர்ந்த லேப்டாப்புக்கும் உயிர் கொடுத்து உதவிய அந்த நேர்மையான டெலிவரி ஊழியருக்கும், உடனடியாகத் தகவல் தெரிவித்து உதவிய காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்து அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

​"ஒருபுறம் காவல் நிலையங்களின் அலைக்கழிப்பு சோகத்தைத் தந்தாலும், மறுபுறம் துயரத்தில் இருந்த தனக்கு உதவிய அந்த ஸ்வீகி ஊழியரின் நேர்மை மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருவதுடன், அந்த டெலிவரி ஊழியருக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவித்து வருகின்றனர்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

"நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

பெட்டிக்கடை தீ வைப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற போது சிக்கிய சி.சி.டி.வி: துடியலூரில் நள்ளிரவில் பரபரப்பு!

​ கோவை, அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற கஞ்சா போதை ஆசாமியிடம் இருந்து, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் சண்டையிட்டுக் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, அருகே பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாகத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​அப்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் வேறொரு கொடூரச் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இன்று அதிகாலை 2 மணி அளவில், சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை அங்கு இருந்த 2 நாய்கள் இடை விடாது குரைத்துத் தொடர்ந்து சென்று உள்ளன.

​அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், "இது உங்க நாயா பாரு... பின்னாடியே வந்துட்டு இருக்கு!" எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், "கல்லை எடுத்து அடிங்க... நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?" எனக் கூறி உள்ளார்.

 இளைஞரும் கல்லை எடுத்து எறியவே நாய்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே நின்றன.

​அந்தச் சமயத்தில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த இளைஞர், சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திடீரென மானபங்கம் செய்ய முயன்று உள்ளார்.

ஆபத்தை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே, உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட நாய்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கின. குரைத்துக் கொண்டே இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்துப் பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன.

​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், பெண்ணை விட்டு விட்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார்.

 விடாத நாய்களும் அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன.

மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞரிடம் இருந்து நன்றி உள்ள நாய்கள் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய இந்த நெகிழ்ச்சி காட்சி சி.சி.டி.வி யில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

​சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 போதை ஆசாமி இடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

 "ஆட்சியர், கமிஷனர் அலுவலகங்கள் அருகேயே இந்த நிலையா ?" - வாரக்கணக்கில் பழுதடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்!

"ஆட்சியர், கமிஷனர் அலுவலகங்கள் அருகேயே இந்த நிலையா ?" - வாரக்கணக்கில் பழுதடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்!

பாதுகாப்பான பகுதியிலே  கேமராக்கள் செயலிழப்பு : உடனே சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!


 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அருகிலேயே, அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பழுதடைந்து பயன்பாடின்றி தொங்கிக் கொண்டு இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரின் இதயமாகவும், மிக முக்கிய நிர்வாக மையங்களாகவும் விளங்குபவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் அலுவலக வளாகங்கள் ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியிலும், அதனைச் சுற்றி உள்ள சாலைகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறையின் சார்பில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இவ்விரு முக்கிய அலுவலகங்களின் மிக அருகிலேயே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சில, கடந்த ஒரு வார காலமாக ஒயர்கள் அறுந்தும், திருப்பப்பட்ட நிலையிலும் முற்றிலும் பயனற்றுத் தொங்கிக் கொண்டு இருக்கின்றன.

​குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்தைக் கண்காணிக்கவும், விபத்துக்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடக்கும் போது துப்புதுலக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த கேமராக்கள், பாதுகாப்பு மண்டலத்திலேயே பராமரிப்பின்றிச் செயலிழந்து கிடப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

மாநகரின் பிற பகுதிகளில் வழிப்பறி, நகைப் பறிப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடக்கும் போது, சி.சி.டி.வி காட்சிகளை வைதே காவல் துறையினர் குற்றவாளிகளைக் விரைந்து தூக்கி வருகின்றனர். ஆனால், காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு சி.சி.டி.வி கேமராக்கள் இப்படிப் பழுதடைந்து கிடப்பது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


​எனவே, கோவை மாநகரக் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை விரைந்து சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 2 செப்டம்பர், 2026

 "மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

"மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

5 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி பவன்குமார் தீவிர தேடுதல் வேட்டை: மாவட்ட எல்லைகளில் பலத்த சோதனைகள்!

 கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில், மலேசியாவில் இருந்து வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டித் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய நாட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்குச் சுற்றுப் பயணமாக 10 பேர் கொண்ட பயணிகள் குழுவினர் 'ஃபோர்ஸ் அர்பானியா' (Force Urbania) வாடகை வேன் மூலம் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

​கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி. சாவடி அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேனுக்கு எரினாயில் நிரப்ப ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அப்போது வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அங்கு இருந்த கழிவறைக்குச் சென்ற போது, அங்கு நின்று இருந்த இரு நபர்களுடன் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம் முற்றவே, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இரு மர்ம நபர்கள், ஆத்திரம் அடைந்து 10 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இருந்த 'ஃபோர்ஸ் அர்பானியா' வாகனத்திற்கு உள்ளேயே அதிரடியாகப் புகுந்து, தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

​இந்தக் கொடூரத் தாக்குதலில் மலேசியச் சுற்றுலாப் பயணியான லோகநாதன் மற்றும் அவரது மகனான யுகேந்திரன் ஆகிய இருவருக்கும் வயிறு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தாக்குதல் நடத்திய பின், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். அஞ்சிய ஓட்டுநர் காயம் அடைந்தவர்களுடன் வேனை மதுக்கரை நோக்கி விரைவாகச் செலுத்தினார். ஆனால், விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த அந்த மர்ம நபர்கள், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வைத்து வேன் ஓட்டுநரைச் சூழ்ந்து கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.

​பதற்றமடைந்த ஓட்டுநர் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் சிக்கி வாகனத்தை நிறுத்தவே, அப்பகுதி பொதுமக்கள் பெருமளவில் கூடினர்.

 பொதுமக்கள் திரள்வதைக் கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய லோகநாதன் மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

​சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன்குமார், கள ஆய்வு மேற்கொண்டு மதுக்கரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்.

 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் நடத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் தப்பியோடிய அந்த இரு மர்ம நபர்களையும் பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 கோவை மாவட்ட எல்லைப் பகுதிகள் முழுவதிலும் பலத்த வாகனத் தணிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்" - கோவை நவக்கரையில் மலேசியச் சுற்றுலாப் பயணிகளிடம் தகராறு: போலிஸ் தீவிர விசாரணை!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்" - கோவை நவக்கரையில் மலேசியச் சுற்றுலாப் பயணிகளிடம் தகராறு: போலிஸ் தீவிர விசாரணை!

ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ற போது சம்பவம்: அப்பாவின் மகன் காயமடைந்ததால் பரப்பரப்பு!

 கோவை, கே.ஜி. சாவடி மற்றும் மதுக்கரை பகுதியில் மலேசிய நாட்டின் சுற்றுலாப் பயணிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை, மகன் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாகவும், பின் தொடர்ந்து வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (02.09.2026) மாலை சுமார் 5.30 மணி அளவில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி 'ஃபோர்ஸ் அர்பானியா' (Force Urbania) வாடகை வாகனத்தில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பயணித்துக் கொண்டு இருந்தது.

கே.ஜி. சாவடி காவல் எல்லைக்கு உட்பட்ட கொச்சி - சேலம் புறவழிச்சாலையில் உள்ள நவக்கரை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, அந்த வாகனத்தின் ஓட்டுநருக்கும், அங்கு நின்று கொண்டு இருந்த லோகநாதன் (52) மற்றும் அவரது மகன் உகேந்திரன் (21) ஆகிய இரு நபர்களுக்கும் இடையே திடீரெனக் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

 இந்த மோதலில் லோகநாதன் மற்றும் உகேந்திரன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த அந்த வாகனம் அங்கு இருந்து மதுக்கரை நோக்கித் தப்பிச் சென்றுள்ளது. அப்போது, மதுக்கரை சந்தை அருகே அந்த வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி வாகனத்தை மிரட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாகச் சம்பவ இடத்தில் கூட்டமாகத் திரளவே, போலீஸாருக்குத் தகவல் பரவியதை உணர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் மதுக்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 தப்பியோடிய நபர்களை அடையாளம் காணவும், சம்பவத்திற்கான உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறியவும் தீவிர விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 "நடுரோட்டில் வேனை மறித்துத் துப்பாக்கிச் சுட்டுக் கொல்ல முயன்றதால் பரபரப்பு" ; கோவையில் சினிமா பாணி சேஸிங்!

"நடுரோட்டில் வேனை மறித்துத் துப்பாக்கிச் சுட்டுக் கொல்ல முயன்றதால் பரபரப்பு" ; கோவையில் சினிமா பாணி சேஸிங்!

மதுக்கரை மேம்பாலம் அருகே துப்பாக்கியுடன் துரத்திய மர்ம நபர்கள்: தப்பிய 2 பேரைத் தீவிரமாகத் தேடும் போலீஸ்!

 கோவை, மதுக்கரை பகுதியில் டூரிஸ்ட் வேனை வழி மறித்து ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட முயன்று விட்டுத் தப்பியோடிய மர்ம நபர்கள் இருவரைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியில் 'அரேபினியா' (Arabenia) என்ற கறுப்பு நிற டூரிஸ்ட் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென அந்த வேனை வழி மறித்து ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட முயற்சித்து உள்ளனர்.

​அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வேன் ஓட்டுநர் காரை அதிவேகமாகச் செலுத்தி அங்கு இருந்து தப்ப முயன்றார்.

இருப்பினும் விடாமல் துரத்திய அந்த மர்ம நபர்கள், வேனைப் பின்தொடர்ந்து சினிமா பாணியில் விரட்டி வந்தனர். மதுக்கரை மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதி வரை அந்த நபர்கள் வேனைத் துரத்தி வந்தனர்.

​அப்போது மதுக்கரை மேம்பாலம் அருகே அந்த டூரிஸ்ட் வேன் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வேன் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது. உடனடியாகச் சூழலை உணர்ந்த ஓட்டுநரும் அப்பகுதி மக்களும் இது குறித்துக் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குப் போத்தனூர் மற்றும் மதுக்கரை காவல்துறையினர் விரைந்து வந்தனர். போலிசார் வருவதைக் கண்டதும், துப்பாக்கியால் சுட முயன்ற அந்த இரு நபர்களும் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.

​இச்சம்பவம் குறித்து  மதுக்கரை மற்றும் கோவை எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​நடுரோட்டில் டூரிஸ்ட் வேனை மறித்துத் துப்பாக்கியால் சுட முயன்ற இந்தச் அதிர்ச்சி சம்பவம், மதுக்கரை மற்றும் கோவை மக்களிடையே பெரும் பரப்பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.