அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

 "தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

"தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

தி.மு.க அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!

​ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை துடியலூரில் திமுக சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர்களின் அடையாளமாகவும், திராவிட இயக்கத்தின் தூணாகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினராலும் பொதுமக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​1909-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் மற்றும் தமிழ்மொழி உயர்வுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 1967-இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 'மதராஸ் மாநிலம்' என்பதற்குப் பெருமையுடன் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை துடியலூர் கிழக்கு பகுதி 2-வது வட்டக் கழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துடியலூரில் உள்ள தி.மு.க கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

​மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டக் கழகச் செயலாளர்கள் சண்முகம், சி.டி.சி. ராஜா, தமிழ்நிதி, குமார் (எ) சண்முகம், கழக நிர்வாகிகள் கேப்டன் பிரபாகரன், நிதியரசு, ஆறுச்சாமி, ராமசாமி, சீனிவாசன், சேகரன், வாசு, டி.எஸ். ராமசாமி, டி.என்.சி. பழனிச்சாமி, டி.ஆர். ராஜேந்திரன், ரவி, அயூப்கான், பீடா கடை ராஜன், ஜீவரத்தினம், சிவநந்தினி, தனபாக்கியம், கோமதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு அண்ணாவின் புகழுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

குழந்தைகள் வார்டில் நெகிழ்ச்சி சம்பவம்: பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத் குமாரும் பங்கேற்பு!

 கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது குழந்தைகள் வார்டில் இருந்த சிறுமி ஒருவர் அமைச்சருடன் சுவாரசியமாக உரையாடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் கோவைக்கு வருகை தந்து இருந்தனர்.

இந்நிகழ்வுகளின் இடையே, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்குத் திடீரெனச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு இருந்த வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டை ஆய்வு செய்ய அமைச்சர் சென்ற போது, அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அச்சிறுமி எவ்வித தயக்கமுமின்றி, அமைச்சரிடம் மிகவும் மழலை மொழியில் உற்சாகமாகப் பேசினார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த அமைச்சர், அவருக்கு அளித்துவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அச்சிறுமிக்கு ஆறுதலும் அன்பும் தெரிவித்தார்.

 அமைச்சரும் சிறுமியும் அன்போடு பேசிக்கொண்ட இந்த அழகான தருணம் அங்கு இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது.

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு: காந்தி சிலை பேருந்து நிலையத்தில் அன்னதானம்!

​ கோவை மாவட்டம், வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகியும் சமூக நீதிப் போராட்ட வீரருமான இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

​விழாவையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் குட்டி என்ற ஆ. சுதாகர், அ.தி.மு.க நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கல்யாணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளர் அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேத்யூ, வெள்ளியங்கிரி, வால்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த குருபூஜை விழாவில், அஞ்சலி செலுத்த வந்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்களும் சமுதாயப் பெரியோர்களும் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காலையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேத்துப்பட்டு நகர தவெக சார்பில் நடைபெற்ற விலையில்லா விருந்தகத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.

மூதாட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

புதன், 9 செப்டம்பர், 2026

"1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்" ; ChatGPT / AI தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

"1980ஸ் ரெட்ரோ லுக்கில் வானதி சீனிவாசன்" ; ChatGPT / AI தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

 ரசிகர்களையும் அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்திய ஏஐ படைப்பு : சமூக வலைதளங்களில் குவியும் லைக்ஸ்!

 பா.ஜ.க தேசிய மகளிர் அணி முன்னாள் தலைவரும் வானதி சீனிவாசனின் புகைப்படங்களை, ஏஐ (ChatGPT / Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1980-களின் ரெட்ரோ (1980s Retro Look) பாணியில் உருவாக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி வைரலாகி வருகின்றன.

இணையத்தைக் கலக்கும் ஏஐ ரெட்ரோ ட்ரெண்ட்:

தற்போது சமூக வலைதளங்களில் ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை வைத்துப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை 1980-கள் மற்றும் 90-களின் சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் பாணியில் ரெட்ரோ லுக்கிற்கு மாற்றிப் பதிவிடும் ட்ரெண்ட் தீவிரமாகப் பரவி வருகிறது.

​அந்த வகையில், கோவை முன்னாள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனை 1980-களின் ரெட்ரோ மாடலாகச் சித்தரித்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு இணையத்தில் வெளியாகி உள்ளது.

1980ஸ் பாணியில் வானதி சீனிவாசன்

இந்தச் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களில், 80-களின் பிரத்யேக ஆடை அலங்காரம், பழைய காலத்துப் புடவைகள், ரெட்ரோ ஹேர் ஸ்டைல் மற்றும் அக்காலப் புகைப்படங்களின் வண்ண அமைப்போடு வானதி சீனிவாசன் காட்சி அளிக்கிறார்.

​அரசியல் களத்தில் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் ஒரு தலைவரை, முற்றிலும் மாறுபட்ட 1980-களின் ரெட்ரோ தோற்றத்தில் கண்ட பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரல்:

இந்த ஏஐ புகைப்படங்கள் எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. "80-களின் திரைப்படக் கதாநாயகி போலவே இருக்கிறார்", "ஏஐ தொழில்நுட்பத்தின் அட்டகாசமான படைப்பு" என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.

சனி, 5 செப்டம்பர், 2026

தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை !

தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை !

சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் முறைகேடு புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள அடையார் மற்றும் திருவான்மியூர் பகுதிகள், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த TVH நிறுவனத்தை கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல, நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை விரிவுபடுத்தியுள்ளது.

காலை முதலே தொடரும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நிறைவடையும் போது கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[9/5, 3:08 PM] ஞானம் மகன்: "கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி" - திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடுகள், டி.வி.எச் (TVH) அலுவலகத்தில் தீவிர சோதனை!

சென்னை, திருச்சி, கோவை என 19 இடங்களில் ரெய்டு: டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு புகார்களில் பாயும் லஞ்ச ஒழிப்புத்துறை!

 தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகக் கே.என். நேரு பொறுப்பு வகித்த காலத்தில், பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு, ஆள் சேர்ப்பு மற்றும் அதிகாரிகள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி மற்றும் கமிஷன் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றதாகச் சுமத்தப்பட்ட புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 6 மணி முதல் திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், சென்னை அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், ஆல்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கோவை என மொத்தம் 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, கோவையில் உள்ள பிரபல டி.வி.எச் (TVH) அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டி.வி.எச் நிறுவனத்தைக் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவாக வந்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

 நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், வங்கி நிதிப் பரிவர்த்தனைப் பதிவேடுகள் மற்றும் சொத்து ஆவணங்களைச் சரிபார்த்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கே.என். நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

காலை முதலே பரவலாக நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான கணிசமான சான்றுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சோதனை நிறைவடையும் தருவாயில், கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

 "கோயிலுக்குள் மொபைல் தடைக்கு எதிர்ப்பு" ; சிவசேனா கட்சி கண்டனம் - அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை!

"கோயிலுக்குள் மொபைல் தடைக்கு எதிர்ப்பு" ; சிவசேனா கட்சி கண்டனம் - அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை!


"நாளை கோயிலுக்கு வராதீர்கள் என்பார்கள்": மேட்டூர் அணை திறப்புச் செலவுக்கும் திருமுருக தினேஷ் கடும் எதிர்ப்பு!

 கோயில்களுக்குள் ஸ்மார்ட்ஃபோன் கொண்டுவரத் தடை விதித்து உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கோயிலுக்கு வருவது பெருமளவு குறையும் என்றும் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் திருமுருக தினேஷ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் திருமுருக தினேஷ் பேசுகையில்:

"இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குள் ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டுவரக் கூடாது என அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று கூறப்படவில்லை, மாறாகச் சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' (Reels) மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே தடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதற்காகவே பிரத்யேக சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் அந்தச் சிறப்பு கண்காணிப்பாளர்களுக்குக் கூட அரசு முறைப்படி சரிவரச் சம்பளம் வழங்குவதில்லை" என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், *"தற்போது பெரும்பாலான கோயில்களில் நன்கொடை செலுத்துவது, அன்னதான நிதி வழங்குவது மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான கட்டணங்களை பக்தர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் 'கியூ ஆர் கோட்' (QR Code) முறையிலேயே செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்தால், பக்தர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது தடைபட்டு அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமான இழப்பு ஏற்படும். எனவே, செல்போன் தடையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்"* என வலியுறுத்தினார்.

"தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்வதாகக் கூறிக் கொண்டு தொடர்ந்து பல்வேறு இடையூறுகளையே ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மேட்டூர் அணையைத் திறப்பதற்குக் கூட மக்களின் வரிப்பணத்தை மிக ஆடம்பரமாகச் செலவு செய்து உள்ளனர். இதற்குச் சிவசேனா சார்பில் மாபெரும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

ஏற்கனவே இருக்கும் திட்டங்களைக் கைவிட்டுவிட்டுப் புதிய திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை முதலில் வழங்க வேண்டும். இன்று கோயிலுக்கு மொபைல் போன் கொண்டு வராதீர்கள் என்பவர்கள், நாளை கோயிலில் வசூல் இல்லை என்று கூறி கோயிலுக்கே வராதீர்கள் என்று சொல்லும் நிலை வந்து விடக் கூடாது" என எச்சரிக்கை விடுத்தார்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

"தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அபாயம்" ; கோவை சாய்பாபா கோயில் அருகே சேற்றில் சிக்கிய பேருந்து!

சூயஸ் குடிநீர்த் திட்டக் குழியால் தொடரும் விபத்துக்கள் : அதிகாரிகளின் அலட்சியத்திற்குப் பொதுமக்கள் கண்டனம்!

 கோவை, சாய்பாபா கோயில் பகுதியில் சூயஸ் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று திடீரெனச் சேற்றுக்குழியில் சிக்கித் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்திற்காகச் சூயஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சாய்பாபா கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர்க் குழாய் பதிப்பதற்காகச் சாலை தோண்டப்பட்டது.  

​பணிகள் முடிந்த பிறகும், தோண்டப்பட்ட குழி முறையான தரத்துடன் மூடப்படாமல் அரைகுறையாக மண் கொட்டி மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், இன்று பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம், எதிர்பாராத விதமாக அந்த அரைகுறை குழியில் இறங்கி ஆழமாகச் சிக்கிக் கொண்டது.  

பேருந்து திடீரென ஒருபக்கமாகச் சாய்ந்து குழிக்குள் சிக்கியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

 ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து கவிழாமல் நின்றதால், பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

இது குறித்து அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையுடன் தெரிவிக்கையில்:

"மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் தோண்டப்படும் சாலைகளைப் உடனடியாகச் சீரமைப்பதில்லை. லேசான மழை பெய்தாலோ ? அல்லது வாகனங்கள் சென்றாலோ ? மண் உள்வாங்கிப் பெரிய குழி உருவாகிறது.  

​குறிப்பாகச் சாய்பாபா கோயில் போன்ற அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பல மாதங்களாக இந்த குழி சரிவர மூடப்படாமல் மண்ணை மட்டும் மூடி விட்டு அலட்சியமாக விடப்பட்டு உள்ளது.

 பெரிய விபத்து ஏதேனும் நடப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதம் அடைந்த சாலைகளை முழுமையாகத் தார்ச் சாலையாகச் சீரமைக்க வேண்டும்"* எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 2 செப்டம்பர், 2026

"2029-ல் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் த.வெ.க தலைவர் முதல்வர் விஜய்" ; கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்!

"2029-ல் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் த.வெ.க தலைவர் முதல்வர் விஜய்" ; கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்!

தேசிய அரசியலில் கவனம் ஈர்க்கும் தமிழக வெற்றிக் கழகம் :  த.வெ.க நிர்வாகி பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!  

வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் அவர்கள் நாட்டின் பாரதப் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் எனத் த.வெ.க வின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

​தேசிய அரசியலை நோக்கிய த.வெ.க:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இக்கருத்தைப் பதிவு செய்தார்.  

​தமிழக அளவில் மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டமன்றத்திற்குள் தடம் பதித்து உள்ள தமிழக வெற்றிக் கழகம், அடுத்து வரும் 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு இயங்கத் தொடங்கி உள்ளது.

​"இந்தியாவின் முதன்மைத் தலைவராக முதல்வர் விஜய்":

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கு ஏற்க சென்ற எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது;

பிரதமர் வேட்பாளர் நமது தலைவர் தளபதி தான் என்றும், இரண்டு நாட்களாக இதைப் பற்றி தான் பேசப்படுவதாகவும், ஏனென்றால் 2025-யில் இதேபோன்று நிகழ்வு தான் ஆனது. இதே போன்று தான் என்னிடம் வந்து கேட்டார்கள், கண்டிப்பாக 2026 என்ன ? நடந்தது என்று இந்த நாடே பார்த்து இருக்கும், 2029 ஆம் ஆண்டு முக்கியமான விஷயம் பிரதமர் யார் ? என்பதை முடிவு பண்ணுவது டெல்லியில் இருந்து கிடையாது. அது வந்து தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு பண்ணி போவதாகவும், ஒரு அதிர்ச்சியான விஷயம் இந்திய அரசியல் பெரிய மாற்றத்தை 2029 இல் கண்டிப்பாக பார்ப்போம் என்றார். 

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றும், இல்லையென்றால் த.வெ.க இருந்து வெளியேறுவதாக கூறியது குறித்தான கேள்விக்கு;

2029 ல் நீங்கள் அந்த விஷயத்தை பார்ப்பீர்கள், அதற்குப் பிறகு அவர்கள் வெளியில் இருப்பார்களா ? அல்லது உள்ளே போவார்களா ? அப்படி என்பதை தளபதி விஜயை முதல்வர் இருக்கையில் அமர வைத்ததே காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி சார் தான் என்றும், அவரே தான் நமது தளபதியின் கையைப் பிடித்து 2029 ல் கூட்டிப் போய் உட்கார வைக்கப் போகிறார் என்றார்.

2025 ஆம் ஆண்டு கணித்ததை அப்பொழுது 2029 ல் இதுதான் நடக்கும் இதை நான் ஆணித்தனமாக சொல்கிறேன் என்றும் கண்டிப்பாக பிரதமர் ஆவார் என்றார்.

தமிழகத்தில் யார் ? முதல்வர் என்று கேள்விக்கு;

அதை அடுத்ததாக பார்க்கலாம் என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "ஒரு பக்கமா சாஞ்சுகிட்டே ஓடும் அரசு பஸ்" - கோவையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட பேருந்தால் பயணிகள் பீதி!

"ஒரு பக்கமா சாஞ்சுகிட்டே ஓடும் அரசு பஸ்" - கோவையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட பேருந்தால் பயணிகள் பீதி!

மலுமிச்சம்பட்டியில் நேராகச் செல்லாமல் சாந்தபடி சென்ற அரசுப் பேருந்து : புதிய பேருந்துகள் வழங்க பொதுமக்கள் கோரிக்கை!

​ கோவை - பொள்ளாச்சி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று நேராகச் செல்லாமல் ஒருபுறமாகச் சாய்ந்தபடி ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பராமரிப்புக் குறைபாட்டைத் தோலுரித்துக் காட்டி உள்ளது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.

​அப்போது, அந்தப் பேருந்து வழக்கம் போல நேராகச் செல்லாமல், வாகனத்தின் ஒருபக்கம் அப்படியே தரையை நோக்கிச் சாய்ந்தபடி (One-sided lean) தள்ளாடியவாறு சென்று கொண்டு இருந்தது. இதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேருந்தின் சஸ்பென்ஷன் (Suspension) அல்லது ஆக்சில் (Axle) கோளாறு காரணமாகவே பேருந்து இப்படி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு செல்வதாகவும், இதில் பயணிக்கும் பயணிகளுக்கும் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் மாபெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​இந்த ஆபத்தான பயணத்தை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் இணையவாசிகளின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

தமிழகத்தில் இயங்கி வரும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றியும், பழமையான நிலையிலும் இயங்கி வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

​"அரசுப் பேருந்துகளின் தற்போதைய பரிதாப நிலைமைக்கு இந்த வீடியோவே சாட்சி! தற்போதைய அரசாவது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழைய மற்றும் பழுதடைந்த பேருந்துகளை அகற்றி விட்டுப் புதிய அரசுப் பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்" எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2026

"மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

"மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

 "மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

​ நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் 'மிஸாத் நபி' திருநாளை முன்னிட்டு, கோவையில் ஊர்வலமாக வந்த அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இனிப்புகள் மற்றும் பழரசங்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

நபிகள் நாயகத்தின் நற்போதனைகளையும் தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிஸாத் நபி திருநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் வர்ணக் கொடிகளாலும், வண்ணமயமான மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளன.

இதன் ஒருபகுதியாக இன்று காலை, கோவை, மைல்கல், சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த அரபிக் பாடசாலையில் பயிலும் இஸ்லாமிய குழந்தைகள் நபிகள் நாயகத்தின் புகழைப் போற்றும் வகையில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

​நீண்ட தூரம் நடந்து வந்த குழந்தைகளின் களைப்பைப் போக்கும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், சுகுணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வருகை தந்தார்.

 ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள், பழரசங்கள், பிஸ்கட், இனிப்புகள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

​அவருடன் அ.தி.மு.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்குத் தங்களது மனமார்ந்த மிஸாத் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

 மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

திருக்கல்யாண உற்சவத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம்: கோவையில் விமரிசையாக நடைபெற்ற திருவிழா!

​ கோவை, மைல்கல், சுகுணாபுரம் பகுதியில் அமைந்து உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடியது பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

கோவை, சுகுணாபுரம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், கல்வியாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

 அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவிழாவின் போது, சக்தி பூ சட்டி ஏந்தி கம்பத்தைச் சுற்றி பூசாரி பக்தி பரவசத்துடன் ஆடிய நிகழ்வை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பக்தியுடன் கண்டு தரிசித்தனர்.

​தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஊர் பொதுமக்களுடனும் அ.தி.மு.க தொண்டர்களுடனும் இணைந்து எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக நடனமாடினார். முன்னாள் அமைச்சர் மக்களுடன் கலந்து நடனமாடியது அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

 "ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

பா.ஜ.க நிர்வாகி இல்லத்தில் களைகட்டிய கொண்டாட்டம்: தொண்டர்களுடன் இணைந்து ஆடி மகிழ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ!

​ ஓணம் திருநாளை முன்னிட்டு கோவை வடவள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில், பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, பாரம்பரிய நடனமாடி ஓணம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கோவை மாநகர, மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர், வடவள்ளிப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ராஜ பிந்து இல்லத்தில் ஓணம் பண்டிகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

​இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார்.

விழாவில் அமைக்கப்பட்டு இருந்த அழகிய அத்தப்பூக் கோலத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு இருந்த பெண்களுடனும் பா.ஜ.க தொண்டர்களுடனும் இணைந்து ஓணம் திருநாளின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தார்.

​தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தமிழகத்திலும் கோவையிலும் வாழும் மலையாளி மக்களின் சகோதரத்துவத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் இந்த விழா அமைந்து இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்.

​முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

18-வது ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான போட்டிகள் தொடக்கம் : கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உற்சாகம்!

​ மது மற்றும் புகையிலையைக் காட்டிலும் தற்காலக் குழந்தைகளுக்கு மொபைல் போன்களின் பயன்பாடே மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது என ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

18-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்:

கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஈஷா சார்பில் 18-வது ஆண்டாக 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்களுக்கு வாலிபால் மற்றும் பெண்களுக்குத் த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேச்சு:

இப்போட்டிகளைக் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முறைப்படி தொடங்கி வைத்துப் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பெண்களின் பெருமை:

 "தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே பேரழகு மற்றும் திறமைமிக்கவர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்."

கிராமப்புறத் திறமைகள்:

 கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

மொபைல் போன் ஆபத்து:

 தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவிற்கு அதிவேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு மக்களின் உடல்நலக் குறைபாடுகளும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய குழந்தைகள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை மொபைல் போன்களிலேயே மூழ்கி இருக்கின்றனர்.

 ஆல்கஹால் மற்றும் புகையிலையைக் காட்டிலும் இந்த மொபைல் போன் அடிமைத்தனம் மிகவும் ஆபத்தானது.

விளையாட்டின் அவசியம்: 

நவீன உலகில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோ விளையாட்டோ கிடைப்பதில்லை. ஈஷா போன்ற அமைப்புகள் இது போன்ற போட்டிகளை ஒருங்கிணைக்கும் போது இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். பள்ளிகளில் தினமும் கட்டாயம் ஒரு மணி நேரம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

​10 மாநிலங்களில் முதற்கட்டப் போட்டிகள் நிறைவடைந்த பின், இதன் பிரம்மாண்ட இறுதிப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஈஷாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 22 ஆகஸ்ட், 2026

 "இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா ?" - கோவையில் த.வெ.க கொடிக் கம்பங்களால் வாகன ஓட்டிகள் ஆவேசம்!

"இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா ?" - கோவையில் த.வெ.க கொடிக் கம்பங்களால் வாகன ஓட்டிகள் ஆவேசம்!

 "இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா ?" - கோவையில் த.வெ.க கொடிக் கம்பங்களால் வாகன ஓட்டிகள் ஆவேசம்!

 விதிமீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள்: குறுகிய சாலையில் விபத்து அச்சத்தில் பயணிகள்!

 கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் சூழலில், திருச்சி பிரதான சாலையின் இருபுறமும் ஆபத்தான முறையில் கட்சிக் கொடிகளும், குழிகள் தோண்டி பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர் பகுதி, எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் முக்கிய வழித்தடமாகும். சாலை விரிவாக்கம் செய்யப்படாமலும், மேம்பாலப் பணிகள் நிறைவடையாமலும் உள்ளதால், இந்த குறுகலான சாலையில் வாகன ஓட்டிகள் ஏற்கனவே தினசரி விபத்து அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கிரிபிரசாத் தலைமையில் உழவர் சந்தை அருகே த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

 இதற்காகத் திருச்சி சாலை முழுவதும் த.வெ.க தொண்டர்கள் இருபுறமும் கொடிக் கம்பங்களை நட்டு வைத்து உள்ளனர்.

சாலையோரங்களில் கட்சிக் கொடிகளை நடுவதால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கொடிக் கம்பங்களோ, பிளக்ஸ் பேனர்களோ வைக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

ஆனால், நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல், சிங்காநல்லூர் சாலையில் ஆபத்தான முறையில் குழிகளைத் தோண்டி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக கோவையில் அ.தி.மு.க வினர் நட்ட கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் சிக்கி நிரந்தர ஊனமுற்ற கசப்பான சம்பவம் நடந்ததை மக்கள் நினைவு கூர்கின்றனர்.

"மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறி விட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பணயம் வைத்துச் சாலையை ஆக்கிரமித்து பேனர்களும் கொடிகளும் வைப்பது தான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா?" எனத் தலையில் அடித்தபடி வாகன ஓட்டிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் உடனடியாக தலையிட்டு ஆபத்தான பேனர்களையும் கொடிக் கம்பங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

பால் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு !!

பால் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு !!

 பால் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு !! 

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.

பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும்.

மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை வரவேற்பதாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும். விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்படுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 19 ஆகஸ்ட், 2026

 "எத்தனை தடவை மனு குடுக்குறது ?" - கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்!

"எத்தனை தடவை மனு குடுக்குறது ?" - கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்!

 "எத்தனை தடவை மனு குடுக்குறது ?" - கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மண்டியிட்டு வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்!

சாரமேடு தெருநாய் தொல்லை, உக்கடம் படகு இல்லம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வினோத போராட்டம்!

 கோவை மாநகராட்சி நிர்வாகம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டியிட்டபடி சென்று மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சாரமேடு பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் மாநகரின் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது, 

 சாரமேடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, மதரசாக்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

 உக்கடம், பைபாஸ் சாலையில் அமைந்து உள்ள படகு இல்லத்தைக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க வேண்டும்.

 உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் செல்லும் சாலையில், புதிய மேம்பாலம் இறங்கும் பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.

 கரும்புக்கடை பகுதியில் போதிய குப்பைத்தொட்டி வசதிகள் இல்லாததால், உடனடியாகப் புதிய குப்பைத்தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டியிட்டுச் சென்று  மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர், மாநகராட்சி ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டியிட்டவாறே சென்று அதிகாரிகளிடம் மனு அளித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

 கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 160 அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடியை ஏந்தி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  பேரணி நடைபெற்றது. 

நீதிமன்ற அனுமதியுடன் நடந்த பிரம்மாண்ட பேரணி:

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசப்பற்றையும் தேசியக் கொடியின் பெருமையையும் வலியுறுத்தும் வகையில் பா.ஜ.க சார்பில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக இந்தப் பேரணிக்குக் கோவை மாநகரக் காவல் துறை தடை விதித்து இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி உத்தரவைப் பெற்ற பின்னரே பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

160 அடி தேசியக் கொடியுடன் அணிவகுத்த தொண்டர்கள்:

சாய்பாபா காலனி பகுதியில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், சுமார் 160 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற அனைவரும் 'பாரத் மாதா கி ஜே' போன்ற உணர்ச்சிமிக்க நாட்டுப்பற்று முழக்கங்களை அதிரடியாக எழுப்பியவாறு  பேரணியில் பங்கேற்றவர்கள் நீண்ட தேசியக் கொடியை கைகளில் பிடித்தபடி, நாட்டுப்பற்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர், கண்ணைக் கவரும் வகையில் அணிவகுத்துச் சென்றனர்.

சிந்தாமணியில் நிறைவு - பலத்த போலிஸ் பாதுகாப்பு:

சாய்பாபா காலனியில் துவங்கிய இந்த  பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வடகோவை சிந்தாமணி பகுதியில் நிறைவடைந்தது. சாலை முழுவதும் 160 அடி நீளக் கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்ற காட்சி அப்பகுதி பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் பெரிதும் கவர்ந்தது.

பேரணி நடைபெற்ற சாய்பாபா காலனி முதல் வடகோவை சிந்தாமணி வரையிலான வழிநெடுகிலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ்

சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ்

 சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ்

எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என கூறுவதை ஏற்க முடியாது.... 

மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.... 

அப்போது, திமுக எம்.எல்.ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.... 

இதைதொடர்ந்து, சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செலவம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.... 

முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.



கே.என்.நேரு:


முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.


எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என அமைச்சர் ரமேஷ் கூறுவதை ஏற்க முடியாது.