கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 செப்டம்பர், 2026

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

2 டன் மலர்களால் பிரம்மாண்ட ராஜ அலங்காரம்; அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலையான கோவை புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் பிரம்மாண்ட காப்பு சாத்தப்பட்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. 

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையைக் கொண்ட ஆன்மீகத் தலமாகத் திகழ்கிறது. ஒரே பாறைக் கல்லால் செதுக்கப்பட்ட இந்த மூலவர் சிலை, சுமார் 19 அடி உயரமும், 10 அடி அகலமும், 190 டன் எடையும் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு முந்தி விநாயகருக்குத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுமார் 50 கிலோ தூய சந்தனத்தைக் கொண்டு விநாயகர் விக்கிரகம் முழுவதற்கும் 'சந்தனக் காப்பு' சாத்தப்பட்டு திவ்விய ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

​மேலும், மல்லிகை, முல்லை, செவ்வந்தி மற்றும் ரோஜா உள்ளிட்ட சுமார் 2 டன் எடை உள்ள வண்ணமயமான மலர்களைக் கொண்டு திருக்கோயில் வளாகமும் விநாயகர் பேரொளியும் கண்கொள்ளாக் காட்சியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே லட்சக் கணக்கான பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். 

பக்தர்கள் அனைவரும் "ஓம் கணபதி" என்ற பக்தி கோஷத்துடன் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அருள்மிகு முந்தி விநாயகரைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

​பக்தர்கள் சிரமமின்றி விரைவாகத் தரிசனம் செய்து செல்ல ஏதுவாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரத்யேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு விசேஷ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2026

மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

 மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

திருக்கல்யாண உற்சவத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம்: கோவையில் விமரிசையாக நடைபெற்ற திருவிழா!

​ கோவை, மைல்கல், சுகுணாபுரம் பகுதியில் அமைந்து உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடியது பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

கோவை, சுகுணாபுரம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், கல்வியாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

 அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவிழாவின் போது, சக்தி பூ சட்டி ஏந்தி கம்பத்தைச் சுற்றி பூசாரி பக்தி பரவசத்துடன் ஆடிய நிகழ்வை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பக்தியுடன் கண்டு தரிசித்தனர்.

​தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஊர் பொதுமக்களுடனும் அ.தி.மு.க தொண்டர்களுடனும் இணைந்து எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக நடனமாடினார். முன்னாள் அமைச்சர் மக்களுடன் கலந்து நடனமாடியது அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

 "தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

"தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

 "தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

அத்தப்பூக் கோலமிட்டு சிறப்புப் பூஜை: ஓண சத்யா விருந்துடன் கோவையில் களைகட்டிய ஓணம் பண்டிகை!

  கேரளாவின் பாரம்பரிய மற்றும் முதன்மைப் பண்டிகையான ஓணம் திருநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழக - கேரளா எல்லையான கோவையில் ஏராளமான மலையாள மொழியைப் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். ஓணம் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே வீடுகளின் முன்பு வண்ணமயமான அத்தப்பூக் கோலமிட்ட மக்கள், புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

கோயிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. அலங்கார தோரணங்களால் மிளிர்ந்த கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில்,

 "ஓணம் பண்டிகை நாளில் காலையிலேயே பூக்கோலமிட்டு ஐயப்பன் கோயிலுக்கு வந்து விடுவோம். இங்கு உள்ள மக்களைக் காணும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பிற்பகலில் அனைத்து வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் காய்கறி பொரியல்களுடன் 'ஓண சத்யா' விருந்து தயார் செய்து, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து உண்போம். தொடர்ந்து முன்னோர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துப் பெறுவோம்" என்றார்.

கேரளாவில் இருந்து கோவைக்கு முதன் முறையாக வந்து உள்ள குடும்பத்தினர் கூறுகையில்,

 "கேரளாவில் அனைவரும் மலையாள மக்கள் மட்டுமே கொண்டாடுவோம். ஆனால் கோவையில் தமிழர்களும் இணைந்து இந்த ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதும், கோயிலில் இவ்வளவு திரளான பக்தர்கள் கூடியிருப்பதும் எங்களுக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இங்கு அளிக்கப்படும் ஆதரவு மிகவும் சிறப்பாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், மாலையில் குடும்பத்துடன் ஒன்று கூடிப் பாட்டு பாடி, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி ஓணம் பண்டிகையைக் கோவையில் உள்ள மலையாள மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

திங்கள், 22 ஜூன், 2026

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது - தமிழக அரசு !!!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது - தமிழக அரசு !!!

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது - தமிழக அரசு !!!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை வெடித்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி, ராம ரவிக்குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதை அடுத்து பல்வேறு விசாரணைகளில், பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதிலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கு முடித்து வைக்கப்படும் எனவும், இந்த நாட்டில் திருப்பரங்குன்றம் வழக்கு மட்டும் தான் உள்ளதா ? நீதிமன்றத்திற்கு வேறு வழக்கே இல்லையா ? என்றும் நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுகளை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில், “உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக” தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “இதை ஏன் ?நிலுவையிலேயே வைத்து இருக்க விரும்புகிறீர்கள் ? உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு என்ன சிக்கல் ? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில், “அது அரசின் நோக்கம் அல்ல. 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை தொடர்வதா ? புதிய முறையை தொடர்வதா ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், “ராம ரவிக்குமார் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பிலும், தர்கா தரப்பிலும், அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.


தொடர்ந்து, “மத நல்லிணக்கம் முக்கியமானது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “அங்கு வாழும் மக்களின் அமைதி முக்கியமானது. அவர்கள் கள நிலவரத்தை முழுமையாக அறிவார்கள். ஆகவே, இரு தரப்பிலும் அமைதியான முறையில் என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுக்க முயற்சிக்கலாம்” என தெரிவித்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

சனி, 4 ஏப்ரல், 2026

கோவையின் 'மகள்' களம் இறங்கினார் : பெற்றோரின் பாதம் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிய பா.ஜ.க வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

கோவையின் 'மகள்' களம் இறங்கினார் : பெற்றோரின் பாதம் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிய பா.ஜ.க வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

 கோவையின் 'மகள்' களம் இறங்கினார் : பெற்றோரின் பாதம் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிய பா.ஜ.க வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

கோவை, ​புலியகுளம் விநாயகர் கோவிலில் வழிபாடு - அ.தி.மு.க தலைமையகம் சென்று அம்மன் அர்ஜுனனிடம் வாழ்த்துப் பெற்றார் !!!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, தனது தேர்தல் பரப்புரையை மிகவும் உணர்வுப் பூர்வமான முறையில் தொடங்கினார்.

 சென்னையில இருந்து கோவை விமான நிலையம் வந்திறங்கிய அவர், நேராகப் புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு இருந்து புறப்பட்ட அவர், அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக கோவை அ.தி.மு.க தலைமையகமான 'இதய தெய்வம் மாளிகை'க்குச் சென்று, அங்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனைச் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

​அரசியல் சந்திப்புகளை முடித்துக் கொண்டு, தனது சொந்த ஊரான தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் கிராமத்திற்கு வானதி சீனிவாசன் சென்றார். 

அங்கு உள்ள தனது இல்லத்தில் சென்ற அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆராத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். பின்னர் வீட்டில் முன்பு இருந்த தந்தை கந்தசாமி மற்றும் தாயார் பூவாத்தாள் ஆகியோரைச் சந்தித்து, அவர்களது கால்களில் விழுந்து வணங்கி நெகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் பெற்றார். 

"எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பெற்றோரின் ஆசியே எனக்குப் பெரிய பலம்" எனத் தெரிவித்த அவர், கிராம மக்களுடனும் சிறிது நேரம் உரையாடினார். 

தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில் நாளை முதல் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது...

சனி, 28 மார்ச், 2026

விஷமிகளின் சூழ்ச்சிகள் முறியடிப்பு ; திருத்தேர் பணிகளை நேரில் பார்வையிட்டு எஸ்.பி. வேலுமணி நெகிழ்ச்சி !!!

விஷமிகளின் சூழ்ச்சிகள் முறியடிப்பு ; திருத்தேர் பணிகளை நேரில் பார்வையிட்டு எஸ்.பி. வேலுமணி நெகிழ்ச்சி !!!

 விஷமிகளின் சூழ்ச்சிகள் முறியடிப்பு ; திருத்தேர் பணிகளை நேரில் பார்வையிட்டு எஸ்.பி. வேலுமணி நெகிழ்ச்சி !!!

சில விஷமிகள் திருத்தேரை முடக்க சூழ்ச்சிகள் மேற்கொண்டதால், பக்தர்களிடையே தேவையில்லாத குழப்பமும், பதட்டமும் ஏற்பட்டது.ஆனால் இறைவனின் அருளால் நாளை திட்டமிட்டபடி திருத்தேர் உலா நடைபெற அனைத்து பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்று கோவையில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில் பலநூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர தேர்திருவிழா நாளை 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் திமுகவினர் இந்த தேரோட்டத்தை முடக்க பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டதால் கடந்த நான்கு நாட்களாக பக்தர்கள் கோவிலை முற்றுகையிட்டு பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை ஆதினம் ஆகியோர் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து அதிகாரிகள் முன்பு திருத்தேர் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

இந்த நிலையில் மக்களின் பதட்டத்தையும், பக்தர்களின் குழப்பத்தையும் போக்கும் விதமாக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேரூர் பட்டீஸ்சரர் ஆலயத்தில் தேரோட்டத்திற்கு தயாராகிவரும் திருத்தேரை பார்வையிட்டு அங்கு பணியில் ஈடுபட்டு வருபவர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதை தொடர்ந்து கோவிலில் சிறப்பு தரிசனமும் மேற்கொண்டார். 

அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவையில் வரலாற்று சிறபுமிக்க பேரூர் பட்டீஸ்வரார் கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் சில விஷமிகள் இந்த திருதேரை முடக்கும் நோக்கில் செயல்பட்டதால், பக்தர்களிடையே குழப்பமும், தேவையற்ற பதட்டமும் தொற்றி கொண்டது. இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் திருத்தேரை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், மற்றும், சிரவை அதீனம் ஆகியோர் வடம் பிடித்து திருத்தேர் சோதனை வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர். திருத்தேர் பட்டீஸ்வரரின் அருளாசியுடன் சிறப்பாக சென்ற நிலையில், மீண்டும் சில விஷமிகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நேற்று இரவு முதல் அதிகாலை வரை பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இறைவனின் அருளால் நாளை திட்டமிட்டபடி திருத்தேர் உலா நடைபெற அனைத்து பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவது மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அரசியல் செய்பவர்கள், ஜாதி, மதத்தை வைத்தும், ஆன்மிகத்தை முன்னிறுத்தியும் அரசியல் செய்யக்கூடாது. மக்களுக்கு தேவையானதை தேவையான நேரத்தில் செய்து கொடுத்து மக்களையும், நாட்டையும் செம்மை படுத்துவதில் அக்கரை செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திங்கள், 23 மார்ச், 2026

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா - இன்று கொடியேற்றம் !!!

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா - இன்று கொடியேற்றம் !!!

 கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா - இன்று கொடியேற்றம் !!!

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கோவையில் பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து இன்று நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது .

பின்னர் கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.

பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு மலர் பல்லாக்கு நடைபெறுகிறது..

இந்த விழாவை தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் பட்டீசுவரர் பச்சை நாயகி அம்மனுக்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

 சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்..

27 ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி, மறுநாள் 28 ம் தேதி சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

29 ம் தேதி மாலை 4 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்ட விழா நடைபெறுகிறது.

 தேரோட்டத்தை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். 31 ஆம் தேதி தெப்ப திருவிழா ஏப்ரல் 1 ந் தேதி நடராஜர் அபிஷேகம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சத்தியவதி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்...