பண்டிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 செப்டம்பர், 2026

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய 19 அடி உயர புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு!

2 டன் மலர்களால் பிரம்மாண்ட ராஜ அலங்காரம்; அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம்!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலையான கோவை புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனத்தால் பிரம்மாண்ட காப்பு சாத்தப்பட்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. 

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையைக் கொண்ட ஆன்மீகத் தலமாகத் திகழ்கிறது. ஒரே பாறைக் கல்லால் செதுக்கப்பட்ட இந்த மூலவர் சிலை, சுமார் 19 அடி உயரமும், 10 அடி அகலமும், 190 டன் எடையும் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

இன்று விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு முந்தி விநாயகருக்குத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுமார் 50 கிலோ தூய சந்தனத்தைக் கொண்டு விநாயகர் விக்கிரகம் முழுவதற்கும் 'சந்தனக் காப்பு' சாத்தப்பட்டு திவ்விய ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

​மேலும், மல்லிகை, முல்லை, செவ்வந்தி மற்றும் ரோஜா உள்ளிட்ட சுமார் 2 டன் எடை உள்ள வண்ணமயமான மலர்களைக் கொண்டு திருக்கோயில் வளாகமும் விநாயகர் பேரொளியும் கண்கொள்ளாக் காட்சியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே லட்சக் கணக்கான பக்தர்கள் கோயிலில் குவியத் தொடங்கினர். 

பக்தர்கள் அனைவரும் "ஓம் கணபதி" என்ற பக்தி கோஷத்துடன் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அருள்மிகு முந்தி விநாயகரைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

​பக்தர்கள் சிரமமின்றி விரைவாகத் தரிசனம் செய்து செல்ல ஏதுவாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரத்யேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு விசேஷ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

ரெட்ரோ டூ மெட்ரோ' தீமில் அசத்திய பாட்டிகள் & இளம் பெண்கள்: ஆர்.எஸ்.புரத்தில் உற்சாகமாகக் கொண்டாட்டம்!

​ கோவையில் நடைபெற்ற 'தீஜ் 2026' விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்த ஃபேஷன் ஷோவில், 'ரெட்ரோ டூ மெட்ரோ' (Retro to Metro) எனும் தலைப்பில் இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

​சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' விழா:

தமிழகத்தில் பெண்களால் வரலட்சுமி விரதப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதைப் போல, சிந்தி சமூகப் பெண்களின் பாரம்பரிய சிறப்பு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ‘தீஜ் 2026’ (Teej 2026) திருவிழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

​இந்த விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிந்தி சமூகப் பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

​'ரெட்ரோ டூ மெட்ரோ' ஃபேஷன் ஷோ கலக்கல்:

விழாவின் உச்சகட்ட அம்சமாக, சிந்தி சமூக பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் வகையிலும் பெண்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் 'ரெட்ரோ டூ மெட்ரோ' என்ற சிறப்பு ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

​இதில் பழங்கால ஆடை அலங்காரம், பாரம்பரிய அணிகலன்கள் மற்றும் ரெட்ரோ காலத் தோற்றத்தை வெளிப்படுத்திய ‘ரெட்ரோ சுற்றும்’ (Retro Round), இன்றைய நவீன பெண்களின் ஸ்டைல் மற்றும் தன்னம்பிக்கையை பறைசாற்றிய ‘மெட்ரோ சுற்றும்’ (Metro Round) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

​வயது தடையில்லை என நிரூபித்த பாட்டிகள்:

இந்த ஆடை வடிவமைப்புக் கண்காட்சிப் போட்டியில், இளம் பெண்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வயதான பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் மேடையில் தோன்றி ஒய்யார நடை (Ramp Walk) நடந்து அசத்தினர்.

​"வயது என்பது தன்னம்பிக்கைக்கும் திறமைக்கும் ஒருபோதும் தடையில்லை" என்பதை உணர்த்தும் வகையில், அனைத்து வயதுப் பெண்களும் ஒரே மேடையில் ஒன்று கூடித் தங்களது திறமையை வெளிப்படுத்தியது இவ்விழாவின் மிக முக்கியச் சிறப்பம்சமாக அமைந்தது.

புதன், 26 ஆகஸ்ட், 2026

"மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

"மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

 "மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!

​ நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் 'மிஸாத் நபி' திருநாளை முன்னிட்டு, கோவையில் ஊர்வலமாக வந்த அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இனிப்புகள் மற்றும் பழரசங்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

நபிகள் நாயகத்தின் நற்போதனைகளையும் தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிஸாத் நபி திருநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் வர்ணக் கொடிகளாலும், வண்ணமயமான மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளன.

இதன் ஒருபகுதியாக இன்று காலை, கோவை, மைல்கல், சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த அரபிக் பாடசாலையில் பயிலும் இஸ்லாமிய குழந்தைகள் நபிகள் நாயகத்தின் புகழைப் போற்றும் வகையில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

​நீண்ட தூரம் நடந்து வந்த குழந்தைகளின் களைப்பைப் போக்கும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், சுகுணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வருகை தந்தார்.

 ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள், பழரசங்கள், பிஸ்கட், இனிப்புகள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

​அவருடன் அ.தி.மு.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்குத் தங்களது மனமார்ந்த மிஸாத் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

 "தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

"தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

 "தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

அத்தப்பூக் கோலமிட்டு சிறப்புப் பூஜை: ஓண சத்யா விருந்துடன் கோவையில் களைகட்டிய ஓணம் பண்டிகை!

  கேரளாவின் பாரம்பரிய மற்றும் முதன்மைப் பண்டிகையான ஓணம் திருநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழக - கேரளா எல்லையான கோவையில் ஏராளமான மலையாள மொழியைப் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். ஓணம் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே வீடுகளின் முன்பு வண்ணமயமான அத்தப்பூக் கோலமிட்ட மக்கள், புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

கோயிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. அலங்கார தோரணங்களால் மிளிர்ந்த கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில்,

 "ஓணம் பண்டிகை நாளில் காலையிலேயே பூக்கோலமிட்டு ஐயப்பன் கோயிலுக்கு வந்து விடுவோம். இங்கு உள்ள மக்களைக் காணும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பிற்பகலில் அனைத்து வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் காய்கறி பொரியல்களுடன் 'ஓண சத்யா' விருந்து தயார் செய்து, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து உண்போம். தொடர்ந்து முன்னோர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துப் பெறுவோம்" என்றார்.

கேரளாவில் இருந்து கோவைக்கு முதன் முறையாக வந்து உள்ள குடும்பத்தினர் கூறுகையில்,

 "கேரளாவில் அனைவரும் மலையாள மக்கள் மட்டுமே கொண்டாடுவோம். ஆனால் கோவையில் தமிழர்களும் இணைந்து இந்த ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதும், கோயிலில் இவ்வளவு திரளான பக்தர்கள் கூடியிருப்பதும் எங்களுக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இங்கு அளிக்கப்படும் ஆதரவு மிகவும் சிறப்பாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், மாலையில் குடும்பத்துடன் ஒன்று கூடிப் பாட்டு பாடி, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி ஓணம் பண்டிகையைக் கோவையில் உள்ள மலையாள மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

 கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன்  கொண்டாட்டம்!

நவஇந்தியாவில் அத்தப்பூக்கோலமிட்டு மாஸ் காட்டிய மாணவ-மாணவிகள்: டிஜே இசையில் கலகலத்த வளாகம்!

மலையாள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மிகக் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. 

பாரம்பரிய ஆடையில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம்:

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடையான முண்டு, செட் புடவைகளை அணிந்து வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். கல்லூரி முகப்பில் அழகிய வண்ண மலர்களால் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலமிட்டு மகாபலி சக்கரவர்த்தியைத் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

செண்டை மேளத்துடன் மகாபலி வருகை – கேரள நடனங்கள்:

தொடர்ந்து, செண்டை மேளம் அதிரடியாக முழங்க, மகாபலி மன்னன் வேடமணிந்த நபருடன் இணைந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். அத்துடன் கேரளாவின் பாரம்பரிய நடனங்களை ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிஜே இசையில் Full Vibe கொண்டாட்டம்:

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சிறப்பு நடன நிகழ்ச்சிகளும், பிரம்மாண்ட டிஜே (DJ) இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. டிஜே இசையின் அதிரடி பீட்ஸிற்கு ஏற்ப அனைத்து மாணவ-மாணவிகளும் ஒன்று கூடி 'Full Vibe'-இல் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கல்லூரி வளாகம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டு, மாணவர்களின் ஆரவாரத்தில் கலகலத்துப் போனது.

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

 "ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

பா.ஜ.க நிர்வாகி இல்லத்தில் களைகட்டிய கொண்டாட்டம்: தொண்டர்களுடன் இணைந்து ஆடி மகிழ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ!

​ ஓணம் திருநாளை முன்னிட்டு கோவை வடவள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில், பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, பாரம்பரிய நடனமாடி ஓணம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கோவை மாநகர, மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர், வடவள்ளிப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ராஜ பிந்து இல்லத்தில் ஓணம் பண்டிகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

​இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார்.

விழாவில் அமைக்கப்பட்டு இருந்த அழகிய அத்தப்பூக் கோலத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு இருந்த பெண்களுடனும் பா.ஜ.க தொண்டர்களுடனும் இணைந்து ஓணம் திருநாளின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தார்.

​தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தமிழகத்திலும் கோவையிலும் வாழும் மலையாளி மக்களின் சகோதரத்துவத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் இந்த விழா அமைந்து இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்.

​முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சனி, 22 ஆகஸ்ட், 2026

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உற்சாகத்துடன் ஓணம் விழா : அத்தப்பூகோலம், செண்டை மேளத்துடன் புல்லட்டில் வந்த மகாபலி!

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உற்சாகத்துடன் ஓணம் விழா : அத்தப்பூகோலம், செண்டை மேளத்துடன் புல்லட்டில் வந்த மகாபலி!

 கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உற்சாகத்துடன் ஓணம் விழா : அத்தப்பூகோலம், செண்டை மேளத்துடன் புல்லட்டில் வந்த மகாபலி!

கேரள பாரம்பரிய ஆடையில் மாணவ-மாணவிகள் கலக்கல்; சிலம்பம், சுருள்வாள் வீசித் வீரக்கலை சாகசங்கள்!

கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா கல்லூரி வளாகத்தையே அதிரவைக்கும் வகையில் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. 

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஓணம் விழாவிற்குற்றக் கல்லூரி முதல்வர் முனைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கி, விழாவினை முறைப்படி தொடங்கி வைத்தார் [cite: கல்லூரி முதல்வர் முனைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்த விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய முறையிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து கல்லூரி வளாகத்திற்கு ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பொலிவூட்டினர்.

​கல்லூரி முன்றிலில் வண்ணமயமான பூக்களால் பிரம்மாண்ட அத்தப்பூகோலம் வரைந்து அசத்தினர். 

இதைதொடர்ந்து, அதிரடி செண்டை மேள முழங்க, மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்த நபரைப் கம்பீரமாக புல்லட் வாகனத்தில் கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து வந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளின் அதிரடி இசை நிகழ்ச்சியும், கண்கள் கவரும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், கேரள பாரம்பரியத்திற்கு மத்தியில் தமிழர்களின் வீரம் செறிந்த பாரம்பரிய தற்காப்புக் கலைகளான வேல், ஈட்டி, சிலம்பக்கம்பு, வாள், கத்தி, சுருள் வாள் மற்றும் மான் கொம்பு வீச்சு உள்ளிட்ட சாகசங்களை மாணவ-மாணவிகள் தத்ரூபமாகச் செய்து காட்டி பார்வையாளர்களைச் சிலிர்க்க வைத்தனர்.

​கல்லூரி வளாகமே ஆட்டம் பாட்டத்துடன் கலகலத்துப் போக, ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மிகக் கோலாகலமாக நிறைவடைந்தன.

திங்கள், 22 ஜூன், 2026

 த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் !!!

த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் !!!

 த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த முதலமைச்சர் விஜய் !!!

திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியின் குழந்தைக்கு 'தமிழ் வெற்றிக் கொண்டான்' என முதலமைச்சர் விஜய் பெயர் சூட்டினார்.

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து முதல்வரின் பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த முதல்வர் விஜய் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வரின் பெற்றோர்களான ஷோபா சந்திரசேகர் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் தங்களின் மகனை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றப் பணிகளை முடித்து விட்டு தலைமைச் செயலகத்தில் இருந்து இல்லத்திற்கு புறப்பட்ட முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தனது குழந்தையுடன் சென்றார். அப்போது, தனது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு முதல்வரிடம் பல்லவி கேட்டுக் கொண்டார். குழந்தையை கையில் வாங்கிய முதல்வர் விஜய், குழந்தையை உச்சி முகர்ந்து 'தமிழ் வெற்றி கொண்டான்' என்று பெயர் சூட்டினார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி கூறும்போது: 

"எனது குழந்தைக்கு தமிழக முதல்வர் விஜய் ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என்று பெயர் சூட்டி உள்ளார். முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்து இருந்தேன். அப்போது அவரது வாயால் ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என்ற பெயர் கூறப்பட்டது" என்றார்.

அனைத்து நிகழ்ச்சிக்கும் குழந்தை அழைத்து வருகின்றீர்களே ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பல்லவி, "நம்மை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளனர். எனவே, குழந்தையுடன் சட்டமன்றத்திற்கு வருகிறேன்" என்றார்.

மேலும் பேசிய அவர், "ஜனநாயகம் திரைப்படத்தில் 'தளபதி விஜய் வெற்றி கொண்டான்' என பெயர் இருப்பதைப் போல ‘தமிழ் வெற்றி கொண்டான்’ என தனது குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இனி என்னுடைய குழந்தையை TVK (தமிழ் வெற்றி கொண்டான்) என்றே கூப்பிடுவோம். என்னுடைய குழந்தைக்கு முதல்வர் பெயர் சூட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு இன்று நனவாகி உள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

 த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை அசைவ விருந்துடன் கொண்டாட்டம் ; முதியோர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, அரிசி மூட்டைகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் - 'பசியில்லா உலகம் படைப்போம்' என இளம் பெண் தொழிலதிபர் !!!

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை அசைவ விருந்துடன் கொண்டாட்டம் ; முதியோர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, அரிசி மூட்டைகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் - 'பசியில்லா உலகம் படைப்போம்' என இளம் பெண் தொழிலதிபர் !!!

 த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை அசைவ விருந்துடன் கொண்டாட்டம் ; முதியோர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, அரிசி மூட்டைகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் - 'பசியில்லா உலகம் படைப்போம்' என இளம் பெண் தொழிலதிபர் !!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் ஏழை-எளிய பொதுமக்களுக்கு பிரம்மாண்ட அசைவ விருந்து, இலவச அரிசி மூட்டைகள் மற்றும் முதியோர்களுக்கு அவசர மருத்துவ உதவித் தொகை ஆகியவற்றை வாரி வழங்கி கோவை தன்னார்வலர் உமா மகேஷ்வரி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்களும், பல்வேறு முற்போக்கு தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கி ஏழை - எளிய மக்களுக்கு அடுக்கடுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையில் புகழ்பெற்ற தன்னார்வலரும் இளம் பெண் தொழிலதிபருமான உமா மகேஷ்வரி, கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

 இந்த மக்கள் நல நிகழ்வின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி, 

த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கித் தாம் மிக விமரிசையாகக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஆண்டு, தங்களது தலைவர் அரசியல் களத்தில் தீவிரமாகப் பயணிக்கும் சூழலில் வரும் பிறந்தநாள் என்பதால், இது தங்களுக்குக் கூடுதல் சிறப்புக்கும் உத்வேகத்திற்கும் உரியது எனத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சிறப்பான நாளில் ஏழை - எளிய மக்களுக்குத் தரமான அன்னதானமும், அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசி மூட்டைகளும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் முதியோர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் மருத்துவ நிதியுதவியும் வழங்கியது தமக்கு மட்டற்ற மனநிறைவைத் தருகிறது என்றார். 

பசியில்லா உலகம் படைப்பதில் தங்களது தலைவர் விஜய் அவர்கள் பல்வேறு ஆக்கப் பூர்வமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார் என்றும், அதன் ஒரு பகுதியாகவே தாம் அன்னதானம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதற்குத் முக்கியத்துவம் தந்து வருவதாகவும் பகிர்ந்தார். இதன் மூலம் பயன்பெற்ற அடித்தட்டு பொதுமக்களது வாழ்த்துகளும் தூய ஆசிர்வாதமுமே தங்களது தலைவர் அவர்களுக்குத் தாங்கள் வழங்கும் உண்மையான பிறந்தநாள் பரிசு என்று உருகிய அவர், அவரது அரசியல் வெற்றிப் பயணம் அடுத்தடுத்து சிறப்பாக அமைய மனதார வாழ்த்துவதாக கூறினார்.

ஞாயிறு, 21 ஜூன், 2026

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கையில் விளக்கேந்தி போராட்டம் ; நூற்றுக் கணக்கானோர் திரண்டு முழக்கம் !!!

 இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரியும், தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தும் கோவை காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக நேரில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

 இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளிலும், ஆன்மீக மரபுகளிலும் தமிழக அரசு தேவையின்றித் தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையுமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மட்டுமன்றி, தமிழகத்தில் நிலவும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சினைகள், ஆன்மீகக் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், மகளிர் அணியைச் சேர்ந்த தாய்மார்கள் என 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வியாழன், 28 மே, 2026

ஈகை பண்பும் தியாகமும் தழைத்தோங்க ‘மாஸ்’ தொழுகை! கரும்புக்கடை பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை ; கோவையில் பக்ரீத் திருநாள் சிறப்பு பிரார்த்தனை!!!

ஈகை பண்பும் தியாகமும் தழைத்தோங்க ‘மாஸ்’ தொழுகை! கரும்புக்கடை பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை ; கோவையில் பக்ரீத் திருநாள் சிறப்பு பிரார்த்தனை!!!

ஈகை பண்பும் தியாகமும் தழைத்தோங்க ‘மாஸ்’ தொழுகை! கரும்புக்கடை பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை ; கோவையில் பக்ரீத் திருநாள் சிறப்பு பிரார்த்தனை!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொழுகை ; ஏழை - எளிய மக்களுக்கு ‘குர்பானி’ வழங்கி இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்!

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் ஆட்டிறைச்சிகளை தானமாக வழங்குவார்கள் அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தார் போல் ஏழை எளிய மக்களுக்கு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும். 

அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் அனைவரிடமும் ஈகை பண்பும் மனிதநேயமும் மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 19 மே, 2026

பொது விடுமுறை அறிவிப்பு: மே 28 பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - அரசு தலைமை காஜி !!!

பொது விடுமுறை அறிவிப்பு: மே 28 பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - அரசு தலைமை காஜி !!!

 பொது விடுமுறை அறிவிப்பு: மே 28 பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - அரசு தலைமை காஜி !!!

தமிழ்நாட்டில் மே 28 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி மௌலானா முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி அறிவித்து உள்ளார்.

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் எனப்படும் ஈகை திருநாள் பண்டிகை. இந்த பண்டிகை நாளன்று அதிகாலையிலே எழுந்து, புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று, குர்பானி பலி செலுத்தி, அண்டை அயலகத்தாருடன் உணவுகளை பகிர்ந்து இஸ்லாமியர்கள் உண்டு மகிழ்வர். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்றதை ஏழை, எளியவர்களுக்கு தானமாக வழங்குவர்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், “மே மாதம் ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் தேதி மாலை துல் ஹஜ் மாதத்துக்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லா மே மாதம் செவ்வாய்க்கிழமை 19 ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய ஷரியத் முறைப்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் வரும் 28 ஆம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்ரீத் பண்டிகையன்று தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த பண்டிகைக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இப்ராஹிம் நபி என்பவர், இறைவரிடம் தொடர் பிரார்த்தனை மேற்கொண்டார். பிரார்த்தனைக்கு பலனாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டார். குழந்தை வளர்ந்து வந்த சமயத்தில் இப்ராஹிம் நபியின் கனவில் தோன்றிய இறைவன், அந்த குழந்தையை அறுத்து பலியிட வேண்டுமென கட்டளையிட்டு உள்ளார்

நீண்ட காலம் தவம் இருந்து பிறந்த குழந்தை என்பதால், அதன்மீது மிகுந்த பாசம் வைத்திருந்த போதிலும், இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென தியாக மனப்பான்மையுடன் தனது மகனை வெட்டி பலியிட இப்ராஹிம் நபி முயன்றார். அப்போது இறைவன் அங்கு தோன்றி, அவரது மகனை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதற்கு பதிலாக ஆட்டை வைத்ததாகக் கூறப்படுகிறது.


தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையை இறைவனுக்காக பலி கொடுக்கச் சென்ற இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் துல் ஹஜ் மாதத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மே 28 அன்று தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திங்கள், 27 ஏப்ரல், 2026

விழுப்புரத்தில் கூவாகம் திருவிழா: 2026 மிஸ் திருநங்கையாக சென்னை ஓமனா தேர்வு !!!

விழுப்புரத்தில் கூவாகம் திருவிழா: 2026 மிஸ் திருநங்கையாக சென்னை ஓமனா தேர்வு !!!

 விழுப்புரத்தில் கூவாகம் திருவிழா: 2026 மிஸ் திருநங்கையாக சென்னை ஓமனா தேர்வு !!!

விழுப்புரத்தில் நடைபெற்ற கூவாகம் திருவிழாவில் நடைபெற்ற போட்டியில் மிஸ் திருநங்கையாக சென்னையை சேர்ந்த ஓமனா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை சென்னையை சேர்ந்த சாய்ஸ்ரீ என்பவரும், மூன்றாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த சுகி என்பவரும் பிடித்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திருநங்கைகள் அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சென்னை தொண்டு நிறுவனங்கள் இணைந்து, “கூவாகம் திருவிழா 2026” விழாவை நடத்தினர்.

அதன்படி, (ஏப்ரல் 26) மாலை 6 மணி அளவில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் “கூவாகம் திருவிழா 2026” நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் திருநங்கைகளின் அணிவகுப்பு, “மிஸ் திருநங்கை 2026” தேர்வு, நடன மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில், “மூன்றாம் பாலினம் என அழைக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி “திருநங்கைகள்” என்ற மரியாதையான பெயரை வழங்கினார். அத்துடன் 2008-ஆம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியத்தையும் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திருநங்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக சமத்துவத்துடன் வாழ வேண்டியவர்கள்" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மிஸ் திருநங்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஆடை அலங்காரத்துடன் திருநங்கைகள் அணி வகுத்தனர்.

பல சுற்றுகளாக நடத்தப்பட்டி நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த ஓமனா 2026 ஆம் ஆண்டின் மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை சென்னையை சேர்ந்த சாய்ஸ்ரீ என்பவரும், மூன்றாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த சுகி என்பவரும் பிடித்தனர். இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

சனி, 28 மார்ச், 2026

கோவை பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி உத்திர திருவிழா : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வரும் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சிவ பக்தர்களால் பரபரப்பு - பட்டீஸ்வரர் தேரோட்டம் நடக்குமா ? என போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் !!!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி உத்திர திருவிழா : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வரும் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சிவ பக்தர்களால் பரபரப்பு - பட்டீஸ்வரர் தேரோட்டம் நடக்குமா ? என போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் !!!

 கோவை பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி உத்திர திருவிழா : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வரும் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சிவ பக்தர்களால் பரபரப்பு - பட்டீஸ்வரர் தேரோட்டம் நடக்குமா ? என போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் !!!

பராமரிப்பு பணிகள் முடிந்தும் நீடிக்கும் மர்மம் : அதிகாரிகளின் மௌனத்தால் ஆத்திரம் அடைந்த சிவ பக்தர்கள் - போராட்டக் களமாக மாறிய கோவில் வாசல் !!!

தென்கயிலாயம் என்று போற்றப்படும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறுமா ? என்ற இழுபறி நீடிப்பது பக்தர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, தேரின் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, பக்தர்கள் வெள்ளத்தில் 'வெள்ளோட்டம்' வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் தேரின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரும், வரும் 29-ஆம் தேதி நடைபெற வேண்டிய பிரம்மாண்ட திருத்தேர் திருவீதி உலா குறித்து கோவில் நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப் பூர்வ அறிவிப்பும் தராதது சிவன் அடிகளார், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

​கோவில் நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் கோவில் வாசலில் திரண்டு திடீர் 'தர்ணா' போராட்டத்தில் குதித்தனர். 

நள்ளிரவில் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா முடிந்து உற்சவ மூர்த்திகள் மீண்டும் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாமியை வழிமறித்து உள்ளே விடாமல் தடுத்ததால் அந்த இடமே பரபரப்பான சூழல் நிலவியது. 

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் பாரம்பரிய தேரோட்டம் நடைபெறுமா ? இல்லையா ?" என்ற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து பக்தர்கள் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். 

நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவனடியார்கள் மற்றும் போராட்டக்காரர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

தேரோட்டம் தொடர்பான இழுபறியால் பேரூர் பகுதியில் தற்போது வரை ஒருவித பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 19 மார்ச், 2026

மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி !!!

மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி !!!

 மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி !!!

குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல் சபா உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

புனித ரமலான் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்த மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் கேட்டு அறிந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவில்  கூறும்போது:

''மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். மேலும், சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் பகிர்ந்து கொண்டோம்.

குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

பிராந்திய அமைதி மற்றும் நிலைத் தன்மைக்கு, நீடித்த ராஜதந்திர ஈடுபாடு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் அவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்தேன்'' என பிரதமர் பதிவிட்டு உள்ளார்.

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் !!!

இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் !!!

 இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் !!!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று நோன்பு துறந்தனர். பிறகு நடைபெற்ற தொழுகையிலும் விஜய் கலந்து கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 1000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நபர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புதன், 4 மார்ச், 2026

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் திருத்தேர் !!!

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் திருத்தேர் !!!

கோவையின் காவல் தெய்வத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து மரியாதை !!!

கோவையின் காவல் தெய்வமான அருள்மிகு கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் சக்தி, பராசக்தி" என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி, ராஜவீதி பகுதியை ஒரு கடல் போல் காட்சி அளிக்கச் செய்தது.

​இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:

  • அம்மன் எழுந்தருளல்: அதிகாலையிலேயே உற்சவர் கோனியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி, ராஜவீதியில் உள்ள தேர்நிலைத் திடலுக்குக் கொண்டு வரப்பட்டார்.
  • தேரோட்டம் தொடக்கம்: இன்று பிற்பகல் சரியாக 2:05 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்துத் தேரைத் தொடங்கி வைத்தனர்.
  • திருவீதி உலா: தேரானது ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி மற்றும் கருப்பகவுண்டர் வீதி வழியாகப் பயணித்தது. வழியெங்கும் பக்தர்கள் உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைத் தேரின் மீது தூவித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
  • சமூக நல்லிணக்கம்: திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்குச் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், கோவை அத்தார் ஜமாத் மசூதி சார்பில் குடிநீர் மற்றும் பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள்: சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, தேரோட்டம் எவ்வித இடையூறுமின்றி நடைபெற உறுதி செய்யப்பட்டது.

​கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கிய இந்த ஆண்டுத் திருவிழா, இன்று தேரோட்டத்துடன் அதன் சிகரத்தை எட்டியுள்ளது. வரும் மார்ச் 6-ஆம் தேதி தெப்ப உற்சவமும், மார்ச் 7-ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


செவ்வாய், 3 மார்ச், 2026

கோவை, ஆர்.எஸ் புரம் ராஜஸ்தானி சங்ம் : கொண்டாடிய ஹோலி பண்டிகை - வடமாநிலத்தவர் ஆடல் பாடல் காண்போரை கண் கவர செய்தது !!!

கோவை, ஆர்.எஸ் புரம் ராஜஸ்தானி சங்ம் : கொண்டாடிய ஹோலி பண்டிகை - வடமாநிலத்தவர் ஆடல் பாடல் காண்போரை கண் கவர செய்தது !!!

 கோவை, ஆர்.எஸ் புரம் ராஜஸ்தானி சங்ம் : கொண்டாடிய ஹோலி பண்டிகை - வடமாநிலத்தவர் ஆடல் பாடல் காண்போரை கண் கவர செய்தது !!!

26 நண்பர்கள் கொண்ட 32 வயதான சஹேலி மண்டல், மரபுகள் சமூகப் பொறுப்புடன் இணைந்தால், அவர்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. மேலும் அனைத்து நண்பர்களும் ஒன்றாகிறார்கள். ஹோலியின் புனிதமான சந்தர்ப்பத்தில், சஹேலி மண்டல், கோயம்புத்தூரில் உள்ள உரிமை கோரப்படாத மற்றும் அனாதை உடல்களை கண்ணியமாக தகனம் செய்வதற்குப் பொறுப்பான ஒரு அமைப்புக்கு 51,000 ரூபாய் நன்கொடைக்கான காசோலையை வழங்கினார். ஏழைகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ரேஷன் கிட்களை விநியோகிப்பதன் மூலம் அவர்கள் நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் உண்மையான வண்ணங்களைப் பரப்பினர்.

இந்த பிரமாண்டமான நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைத்து பெண்களும் பாரம்பரிய, வண்ணமயமான ராஜஸ்தானி உடையில் அணிந்திருந்தனர். மும்பையைச் சேர்ந்த ராதா கிருஷ்ணா குழுவின் துடிப்பான நிகழ்ச்சியுடன் நிகழ்வு தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒரு அற்புதமான தாம்போலா, பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்த ஆண்டு ஹோலி "பூல் கி ஹோலி" என்று கொண்டாடப்பட்டது - செயற்கை வண்ணங்களுக்கு பதிலாக நடனம், இசை மற்றும் பூக்கள் மழையுடன். இந்த சுற்றுச்சூழல் நட்பு முயற்சி அனைவராலும் மகிழ்ச்சியுடனும் பாராட்டுடனும் வரவேற்கப்பட்டது.

இந்த நிகழ்வு வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, மொழி, மதம் அல்லது சாதியைக் கடந்து மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வது உண்மையான கொண்டாட்டம் என்ற சக்திவாய்ந்த செய்தியையும் தெரிவித்தது.

சஹேலி மண்டலத்தின் இந்த ஹோலி கொண்டாட்டம் உண்மையிலேயே பண்டிகைகளை இதயம், பாரம்பரியம் மற்றும் மனிதநேயத்துடன் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கு சமூக ரீதியாக பாராட்டத்தக்க உதாரணமாக அமைந்தது. 🌸✨

வியாழன், 26 பிப்ரவரி, 2026

கோவையில் கொண்டாடிய ஹோலி பண்டிகை !!!

கோவையில் கொண்டாடிய ஹோலி பண்டிகை !!!

 வண்ணங்களோடு மனிதாபிமானமும் ; கோவையில் 'சஹேலி' மகளிர் குழுவின் நெகிழ்ச்சியான ஹோலி கொண்டாட்டம் - நலத்திட்ட உதவிகள் வழங்கி, பூக்களால் ஹோலி கொண்டாடி சாதனைப் பெண்கள் அசத்தல் !!!


கோவையின் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டம், வெறும் வண்ணத் திருவிழாவாக மட்டுமின்றி, ஒரு மகத்தான சேவைத் திருவிழாவாகவும் மலர்ந்தது. 


கோவையைச் சேர்ந்த 'சஹேலி' (Saheli) மகளிர் சமூகக் குழுவினர் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு, சமூகப் பொறுப்புணர்வோடு பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.

​இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தேவை உள்ளவர்களுக்குச் சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

 உரிமை கோரப்படாத மற்றும் அநாதை உடல்களைக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக முறையாகத் தகனம் செய்வதற்குச் சஹேலி குழுவினர் செய்து வரும், தன்னலமற்ற சேவை குறித்து இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

​மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும், பாதுகாப்பான கொண்டாட்டத்தை உறுதி செய்யவும், செயற்கை வண்ணங்களுக்குப் பதிலாக மலர்களைத் தூவி (Phoolon ki Holi) ஹோலி கொண்டாடப்பட்டது.

 16 வயது முதல் 60 வயது வரையிலான பெண்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். மொழி, மதம், சாதி என எவ்வித பாகுபாடும் இன்றி, மகிழ்ச்சியும் உதவியும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அவர்கள் பறைசாற்றினர்.

 சஹேலி மண்டலத்தைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் ஒருங்கிணைத்த இந்த விழாவில், சுமார் 600-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.