சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை... நான் சந்திரா தான்" – 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்!

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை... நான் சந்திரா தான்" – 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்!

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை... நான் சந்திரா தான்" – 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்!


 “இப்பலாம் ஹெவி இருக்கிறது யாருக்குமே பிடிக்காது” ; அழகா இருக்கணும், லைட்டா இருக்கணும் ” - நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக் !


"இப்போதெல்லாம் யாருக்குமே அதிக எடைகொண்ட ஹெவி ஜுவல்லரி (Heavy Jewels) பிடிப்பதில்லை; பாக்குறதுக்கு அழகாகவும், போடுவதற்கு லேசாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு" என நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார்.

​பிரபல நடிகையும், பின்னணிப் பாடகியுமான ஆண்ட்ரியா, கோவையில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது ரிப்பன் வெட்டி நகைக் கடையைத் திறந்து வைத்த அவர், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல்வேறு நவீன மற்றும் பாரம்பரிய ரக நகைகளைப் பார்வையிட்டார்.

​அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரியா பேசியதாவது:

​"முன்பெல்லாம் அடுக்கடுக்காகப் பாரமான நகைகளை அணிவது தான் ஃபேஷனாக இருந்தது. ஆனால், இப்போது ட்ரெண்ட் முற்றிலும் மாறி விட்டது. இப்பலாம் ஹெவி ஜுவல்ஸ் யாருக்குமே பிடிக்காது... நகைகள் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கணும், அதேசமயத்தில் போடுவதற்கு ரொம்ப லைட்டாகவும் (Lightweight), உண்மையாகவும் இருக்கணும்னு தான் எல்லாரும் விரும்புறாங்க.​என்று நகை தேர்வு மற்றும் இன்றைய ட்ரெண்ட் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வட சென்னை' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ள 'அரசன்' (வடசென்னை 2) திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "நான் சிம்புவோட அம்மா இல்லை... நான் சந்திரா தான்" என நடிகை ஆண்ட்ரியா நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதில் அளித்தார். 

​நகைக்கடை திறப்பு விழாவில் ஆண்ட்ரியாவின் இந்த கலகலப்பான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திங்கள், 27 ஜூலை, 2026

திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி !!!

திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி !!!

 திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி !!!

 பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோவையில் உள்ள 'கங்கா மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவும் உடன் இருக்கவும் அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவைக்கு வருகை தந்து உள்ளனர்.

நடிகர் ராம் சரண் தனது புதிய திரைப்படப் படப்பிடிப்பில் நடித்து வந்த போது, எதிர்பாராத விதமாக அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், எலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காகக் நேற்று கோவை வந்தடைந்த ராம் சரணைக் கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

 அறுவை சிகிச்சையின் போது உடன் இருப்பதற்காகத் தந்தை சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் கோவை வந்து உள்ளனர்.

வியாழன், 23 ஜூலை, 2026

கோவையில் திரையரங்குகளில் அதிகாலை முதலே திருவிழா கோலம்; ஆட்டம் பாட்டத்துடன் நெகிழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் !!!

கோவையில் திரையரங்குகளில் அதிகாலை முதலே திருவிழா கோலம்; ஆட்டம் பாட்டத்துடன் நெகிழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் !!!

கோவையில் திரையரங்குகளில் அதிகாலை முதலே திருவிழா கோலம்; ஆட்டம் பாட்டத்துடன் நெகிழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் !!!

 ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு – 15 அடி பேனர்கள், மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..

 தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில், இயக்குநர் வினோத் இயக்கி உள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து திரைப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியும் நிலவுகிறது.

கோவை, போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் அதிகாலை முதலே திரண்ட ரசிகர்கள், 15 அடி உயர பேனர்கள் அமைத்து, வாழைத் தோரணங்கள் கட்டி, மேளதாள இசையுடன் ஆட்டம், பாட்டம் நடத்தி திரைப்படத்தை வரவேற்றனர்.

மூதாட்டிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் நடனமாடி, கோஷங்களை எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர். இதனால் திரையரங்கு வளாகம் முழுவதும் திருவிழா போன்று காட்சியளித்தது.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

இசை உலகை உலுக்கிய மாபெரும் சோகம்: கானக்குயில் எஸ்.ஜானகி காலமானார்; மைசூரில் இன்று இறுதிச் சடங்கு !!!

இசை உலகை உலுக்கிய மாபெரும் சோகம்: கானக்குயில் எஸ்.ஜானகி காலமானார்; மைசூரில் இன்று இறுதிச் சடங்கு !!!

 இசை உலகை உலுக்கிய மாபெரும் சோகம்: கானக்குயில் எஸ்.ஜானகி காலமானார்; மைசூரில் இன்று இறுதிச் சடங்கு !!!


தீவிர சிகிச்சைப் பிரிவில் நேர்ந்த திடீர் மாரடைப்பு; லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் விடை பெற்றார்!!!

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ்.ஜானகி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், ஜானகியின் இறுதி சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது குறித்து குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "ஜானகி மறைந்த நேரத்தில் அவருடன் மருமகள் உமா முரளி, பேத்தி அப்சரா வைத்யுலா, பேத்தியின் கணவர் கணேஷ் சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர்.

ஜானகியின் இறுதி சடங்கு, இன்று மைசூரில் நடைபெறும். இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் திரை துறையினர் அஞ்சலி செலுத்தவதற்காக வைக்கப்படும். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, மாலை 5 மணி அளவில் மைசூரில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் குடும்ப முறைப்படி இறுதி சடங்கு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஜானகியின் உடல்நிலை குறித்தும் அவரது மறைவு குறித்தும் மைசூர் அப்பல்லோ பி.ஜி.எஸ் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில், 

"ஜானகி நேற்று மதியம் 12.49 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியு-க்கு மாற்றப்பட்டார்.

பல்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டு இருந்த போதும்.. சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ நெறிமுறைகளின்படி உடனடியாக அவருக்கு சி.பி.ஆர் போன்ற அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் உயிர் காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது.

மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், தொடர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இதனால் அவர் இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பாடகி சுஜாதா அளித்த பேட்டியில்,

 "அன்று ஜானகி அம்மா போட்ட பாதையில் தான் நாங்கள் எல்லாரும் இன்று போய்க் கொண்டு இருக்கிறோம்; எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தவரே அவர் தான்" நெகிழ்ந்து கூறி இருக்கிறார்.. 

அதே போல டைரக்டர் டி.ராஜேந்தர் வெளியிட்டு உள்ள இரங்கலில், "பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டு விட்டது" என்று உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் தனித்துவமான குரல் வளம், துல்லியமான மொழி உச்சரிப்பு, நளினமான உணர்வுகளை தனது குரலிலேயே கடத்தும் வித்தையில் அனைத்தும் நிகர் அவரே தான்.

சோகம், மகிழ்ச்சி, கிராமியம், துள்ளல் இசை என அனைத்து பாணிகளிலும் தனித்து நின்று முத்திரை பதித்த இவர், எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார்.

திரையுலகில் பெரும் செலிபிரிட்டியாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எளிய குணத்தோடும், புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பண்போடும் வாழ்ந்து மறைந்து உள்ளார் இந்த இசைக்குயில்.. 

அதனால் தான் தங்களின் சொந்தக் குடும்ப உறுப்பினர் என்றே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களாலும் கண்ணீருடன் நினைவுகூரப்படுகிறார்.

ஜானகியின் மறைவுக்கு பல்வேறு கலைஞர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து வருகிறார்கள்.. அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 4 முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கி குவித்த தென்றல் இசை பாடகி, தேன் குரல் தேவதை எஸ்.ஜானகி மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகிறது.

நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னை தேடுதே என்று நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம் தந்து விட்டாரே.. நீங்காத சோகம்... வசந்தம் பாடி வர.. வைகை ஓடி வர... இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர் பாட்டுக்கு அமுதூட்டியவர்.

சம்சார சங்கீதம் படத்தில் என் மகன் சிலம்பரனுக்காக 'ஐ அம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...' என்று பாட்டு படித்தாயே... முத்திரை பதித்தாயே... இன்று நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயே... என்று என் நெஞ்சம் நீங்காத சோகத்தை கொண்டு விட்டது..

அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தினருக்கும். இந்திய கலை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலையும் இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்" என்று தெரிவித்து உள்ளார்.

அதேபோல பாடகி சுஜாதா அளித்த பேட்டியில், 

"அன்று ஜானகி அம்மா போட்ட பாதையில் தான் நாங்கள் எல்லாரும் இன்று போய்க் கொண்டு இருக்கிறோம்; எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தவரே அவர் தான்.

நாங்கள் மைசூருவிற்கும், ஹைதராபாத்திற்கும் நேரில் போய் ஜானகி அம்மாவை பார்த்தோம். 2 மாதங்களுக்கு முன்னாடி தான் ஜானகி அம்மாவைப் பார்த்தேன்.. அப்போ நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.. நாம் அங்கே போனால் நம்மைச் சாப்பிட வைக்காமல் விடவே மாட்டார். தன் கையாலேயே சாதத்தை உருண்டை உருண்டையாகப் பிடித்து நமக்கு ஊட்டி விடுவார். அவ்வளவு பாசம், அவ்வளவு சிநேகம் அவரிடம் இருந்தது.. அதுதான் ஜானகி அம்மா.


அவர்களுடைய பாட்டு நமக்குத் தெரியும், அது வேறு லெவல், அவர்கள் ஒரு நடமாடும் சரஸ்வதி. ஆனால், ஒரு சிறந்த மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்.. ஒரு உண்மையான கலைஞர் இப்படித் தான் இருக்க வேண்டும்" என்று விக்கி விக்கி அழுதவாறே கூறினார்.

வியாழன், 2 ஜூலை, 2026

நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பை எதிர்த்த வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு !!!

நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பை எதிர்த்த வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு !!!

 நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பை எதிர்த்த வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு !!!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை தேர்தல் நடத்தாமல் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கச் சட்ட விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதன் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 2025 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டது.

இதை அடுத்து, நிர்வாகிகள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து 2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக காரணங்களால் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, பொதுக்குழு தீர்மானத்தைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு ஆகியவை சங்கம் தொடர்பாக முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பதவிக் காலத்தை நீட்டித்த தீர்மானத்தை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி, சங்க உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரியா கிளாட், நிர்வாகிகள் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து நம்பிராஜன் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க மறுத்த நீதிபதி, எஸ்.ஆர்.சேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம் நீட்டிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்யும் பட்சத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதியை நியமித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 27 ஜூன், 2026

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்” ; குரு பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் சிஷ்யனும் அஞ்சலி !!!

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்” ; குரு பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் சிஷ்யனும் அஞ்சலி !!!

 திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்” ; குரு பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் சிஷ்யனும் அஞ்சலி !!!

முதல்வர் விஜய் முதல் திருமாவளவன் வரை தலைவர்கள் உருக்கமாக இரங்கல் - முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு !!!

“இந்தியத் திரையுலகின் மாபெரும் பல்கலைக் கழகம் அஸ்தமனமானது”: ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் நேரில் ‘லைவ்’ அஞ்சலி; கதறி அழுத சீடர் ஆர்.பார்த்திபனால் நுங்கம்பாக்கத்தில் உறைந்த அலாதி சோகம்!

"இந்தியத் திரையுலகின் அசைக்க முடியாத ‘திரைக்கதை மன்னன்’, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் கலை உலக வாரிசு என்று அழைக்கப்பட்ட மாபெரும் ஆளுமை கே.பாக்யராஜ் (வயது 73) இன்று சென்னையில் மாரடைப்பால் திடீரெனக் காலமானார். அவரது குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்த 17 நாட்களிலேயே சிஷ்யன் பாக்யராஜும் மறைந்த இந்த மெகா துயரம், ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும், ரசிகர்களையும் பலத்த ‘ஹார்ட் அட்டாக்’ அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது அலாதிப் பங்களிப்பைப் போற்றும் வகையில் முழு அரசு மரியாதையுடன் (State Honors) இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்."

ஒட்டுமொத்தத் தமிழ் உள்கட்டமைப்பையும் உலுக்கிப் போடும் வகையில் ‘திரைக்கதை மேதை’ கே.பாக்யராஜின் இந்த திடீர் மறைவு செய்தி  வெளியாகி ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் சோகக் கடலில் மூழ்கடித்து உள்ளது.

வள்ளுவர் கோட்ட இல்லத்தில் மாரடைப்பு - கிரீம்ஸ் சாலை மருத்துவமனையில் துயரம்:

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள தனது இல்லத்தில் இன்று இயக்குநர் பாக்யராஜுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு  மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு உள்ளது.

சிகிச்சை பலனின்றி மரணம்: 

பதறிப்போன அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரைச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல அப்பல்லோ தனியார் மருத்துவமனைக்கு அவசர, அவசரமாகக் கூட்டிச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை உள்கட்டமைப்புகள் வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை  பலனளிக்காமல் அவர் உயிர் துறந்தார்.

கண்களைத் தானம் செய்த உன்னதம்: 

தான் மறைந்தாலும் தனது கண்கள் உலகைக் காண வேண்டும் என்ற அசாத்திய நோக்கில், மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் ஸ்ட்ரிக்ட்டாகக் கண்தானம் (Eye Donation) செய்துள்ளார். அதற்கென வந்த சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது கண்களைப் பெற்றுச் சென்று உள்ளனர்.

50 ஆண்டுகால ஆளுமை - திரையுலகின் பிதாமகன்:

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுமையாகக் திகழ்ந்த கே.பாக்யராஜின் அசல் வரலாற்றுப் பின்னணி இதோ ....

குரு - சிஷ்யன்  பந்தம்: 

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குநராகச் சேர்ந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். 24 தமிழ் திரைப்படங்களையும், 3 ஹிந்தி திரைப்படங்களையும் இயக்கி, 75-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துப் பாராட்டு பெற்ற மெகா சாதனையாளர்.

தாவணி கனவுகள் மெகா சாதனை: தமிழ் திரையுலகில் முதன் முதலாக இவரின் ‘தாவணி கனவுகள்’ திரைப்படம் தான் அசுரத்தனமாக 1 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என இயக்குநர் பேரரசு விபரங்களை உடைத்து உள்ளார். இவருக்கு நடிகை பூர்ணிமா என்ற மனைவியும், சாந்தனு, சரண்யா என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.

முதலமைச்சர் விஜய் நெரில் ஆறுதல் - முழு அரசு மரியாதை பிரகடனம்:

பாக்யராஜின்  உடல் பொதுமக்களின்  அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் (Chief Minister Vijay) இன்று நண்பகல் 12 மணியளவில் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அரசியல் மற்றும் இறுதிச் சடங்கு விபரங்கள் பின்வருமாறு:

முதலமைச்சரின் கட்டிப்பிடித்த ஆறுதல்:

அஞ்சலி செலுத்திய பின்னர், முதலமைச்சர் விஜய் பாக்யராஜின் மகன் சாந்தனுவை ஸ்ட்ரிக்ட்டாகக் கட்டி அணைத்த ஆறுதல் கூறினார். அப்போது இயக்குநர் பார்த்திபன் உடனிருந்தார். மேலும் எக்ஸ் தளத்தில், "அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்" என தெரிவித்து உள்ளார்.

பெசன்ட் நகரில் நாளை தகனம்: 

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடல் நாளை பிற்பகல் 1.30 மணிக்குச் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் (Besant Nagar Crematorium) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் ஸ்ட்ரிக்ட்டாகத் தெரிவித்து உள்ளனர்.

கதறி அழுத பார்த்திபன் - அஞ்சலி:

பாக்யராஜின் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சினிமா துறையினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்:

ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் அஞ்சலி: 

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில், "ஐம்பது ஆண்டுகளாகத் தனது அபாரத் திறமையால் அழியாத இடத்தைப் பெற்ற நண்பர்" என உருகி உள்ளார்.

சீடர் பார்த்திபனின் அழுகை: 

நடிகை சுஹாசினி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது, அருகில் நின்ற பாக்யராஜின் முதன்மைச் சீடரான ஆர்.பார்த்திபன் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை உலுக்கியது.

அரசியல் தலைவர்கள் இரங்கல்: 

விசிக தலைவர் திருமாவளவன், பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன், நாம் தமிழர் கட்சியின் சீமான், எடப்பாடி பழனிசாமி, கனிமொழி எம்பி, டிடிவி தினகரன், சசிகலா மற்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து உள்ளனர்.

 'இது நம்ம ஆளு' போன்ற முற்போக்குக் கதைகளைத் தந்த 'திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜின் அசுர மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி, 26 ஜூன், 2026

‘சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும் ; தனிப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது - கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி !!!

‘சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும் ; தனிப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது - கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி !!!

 ‘சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும் ; தனிப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது - கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி !!!

​'கட்டா குஸ்தி-2' வெற்றி இயக்குநர் செல்லாவுக்கு முக்கியம்; முதல்வர் விஜய் அதிகாலை மாரத்தானில் பங்கேற்றது ஆரோக்கியமான முன்னுதாரணம் !!!

கோவை அவிநாசி சாலையில் உள்ள திரையரங்கில் நடைபெற்ற 'கட்டா குஸ்தி-2' திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில்,

சமூக வலைதளங்களில் தாம் பதிவிட்ட கருத்து யாரையும் குறிப்பிட்டோ, ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்ல என்றும், சமூக வலைதளங்களில் நடிகர்களுக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். 

கருத்து வேறுபாடுகளை தெரிவிக்கலாம்; ஆனால் தனிப்பட்ட தாக்குதலும் தரக்குறைவான விமர்சனங்களும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு பிறகு தனக்கு Autoimmune பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், அதற்கு நிரந்தர சிகிச்சை இல்லாததால் அதை கட்டுப்பாட்டில் வைத்தே வாழ வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார். சமூக வலைதளங்கள் மூலம் பலர் ஆலோசனைகள் வழங்கியது தனக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தனது படங்களுக்கு கோவையில் எப்போதும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், கோவைக்கு வந்து பட விளம்பரம் செய்தால் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

முதல்வர் விஜய் அதிகாலை மாரத்தானில் பங்கேற்றது ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல முன்னுதாரணம் என்றும், திரைப்படத் துறையில் தேவையான மாற்றங்கள் படிப்படியாக நடைபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும் கூறினார்.

மேலும், 'கட்டா குஸ்தி-2' படத்தில் நடித்த சேலத்தைச் சேர்ந்த குஸ்தி கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளதாகவும், 11 ஆண்டுகளாக தன்னுடன் பயணிக்கும் இயக்குநர் செல்லாவுக்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். 'ராட்சசன்-2' திரைப்படம் விரைவில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம் என்றார்.

புதன், 24 ஜூன், 2026

த்ரிஷா படம் எங்கே ? காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்த சுயேச்சை கவுன்சிலர்; அதிர்ந்த மாமன்றம் !!!

த்ரிஷா படம் எங்கே ? காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்த சுயேச்சை கவுன்சிலர்; அதிர்ந்த மாமன்றம் !!!

 த்ரிஷா படம் எங்கே ? காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்த சுயேச்சை கவுன்சிலர்; அதிர்ந்த மாமன்றம் !!!

காரைக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் நடிகை த்ரிஷாவின் படத்தை வைக்கக் கோரிய சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடி மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று பொறுப்பு மேயர் குணசேகரன் தலைமையில், ஆணையாளர் பாலு முன்னிலையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடனே மாநகராட்சியில் எந்தவொரு வார்டிலும் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.

அப்போது மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் படம் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், தி.மு.க கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தையும் வைக்க வேண்டும் என மாறி மாறி கோஷமிட்டனர்.

இதை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வேறு வழியின்றி கூட்ட அரங்கில் முதலில் எடப்பாடி பழனிசாமியின் படமும், அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் வரிசையாக வைக்கப்பட்டன.

இதற்கு இடையே, தங்களது வார்டு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, அ.தி.மு.க வைச் சேர்ந்த 27-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ், பொறுப்பு மேயரின் இருக்கை முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு கூடியது.

இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, அவையில் பங்கேற்ற சுயேச்சை மாமன்ற உறுப்பினர் மெய்யர் என்பவர் திடீரென எழுந்து, 'மாமன்ற கூட்ட அரங்கில் வருங்கால முதலமைச்சர் த்ரிஷாவின் படத்தை வைக்க வேண்டும்' என விநோத கோரிக்கையை முன் வைத்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தை வைக்காமல் இருப்பது ஏன்? என்றும் அங்கு இருந்த அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பினார். அடுத்த முதல்வராக இருக்கும் அவரின் புகைப்படத்தை வைக்காமல் மற்ற தலைவர்களின் புகைப்படத்தை வைப்பதை ஏற்க முடியாது என்றும், த்ரிஷாவின் போட்டோ கண்டிப்பாக மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்கப்பட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் இந்த மூத்த சுயேச்சை கவுன்சிலர்.


தலைவர்கள் பட விவகாரத்தில் ஏற்கனவே சூடாக இருந்த அவையில், கவுன்சிலர் மெய்யரின் இந்த பிடிவாதமான கோரிக்கை அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பையும், அதேசமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

செவ்வாய், 16 ஜூன், 2026

கோவையில் தியேட்டரில் இளம்பெண்ணுக்குப் பின் சீட்டில் அமர்ந்து சில்மிஷம் செய்த வாலிபர்; அலறல் சத்தத்தைக் கேட்டுப் பொதுமக்கள் கொடுத்த ‘தர்ம அடி’ - வாலிபரை கைது செய்து காவல்துறை விசாரணை !!!

கோவையில் தியேட்டரில் இளம்பெண்ணுக்குப் பின் சீட்டில் அமர்ந்து சில்மிஷம் செய்த வாலிபர்; அலறல் சத்தத்தைக் கேட்டுப் பொதுமக்கள் கொடுத்த ‘தர்ம அடி’ - வாலிபரை கைது செய்து காவல்துறை விசாரணை !!!

  கோவையில் தியேட்டரில் இளம்பெண்ணுக்குப் பின் சீட்டில் அமர்ந்து சில்மிஷம் செய்த வாலிபர்; அலறல் சத்தத்தைக் கேட்டுப் பொதுமக்கள் கொடுத்த ‘தர்ம அடி’ - வாலிபரை கைது செய்து காவல்துறை விசாரணை !!!

கோவை, காளப்பட்டி அருகே உள்ள அலாவுதீன் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், கடந்த 15-ந் தேதி மதியம் 1.45 மணி அளவில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கிற்குத் தனது உறவினரான 25 வயது வாலிபருடன் படம் பார்க்கச் சென்று உள்ளார்.

படம் ஓடிக்கொண்டு இருந்த போது, அந்த பெண்ணின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபர் ஒருவர், இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு இளம்பெண்ணின் தோள் மற்றும் பின்புறத்தில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே இருக்கையை விட்டு எழுந்து சத்தம் போட்டார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தியேட்டரில் இருந்த பொதுமக்கள் விளக்குகளைப் போட்டு, சில்மிஷம் செய்த வாலிபரை வளைத்துப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கோவை கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த சஞ்சய் (வயது 22) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, சஞ்சயை  கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

சனி, 13 ஜூன், 2026

வீட்டுச் சாப்பாடு என்பது அன்பும் ஆரோக்கியமும் கலந்தது”: பிடிச்ச உணவை நிறுத்தாதீங்க - கீர்த்தி சுரேஷின் அட்வைஸ் !!!

வீட்டுச் சாப்பாடு என்பது அன்பும் ஆரோக்கியமும் கலந்தது”: பிடிச்ச உணவை நிறுத்தாதீங்க - கீர்த்தி சுரேஷின் அட்வைஸ் !!!

வீட்டுச் சாப்பாடு என்பது அன்பும் ஆரோக்கியமும் கலந்தது”: பிடிச்ச உணவை நிறுத்தாதீங்க - கீர்த்தி சுரேஷின் அட்வைஸ் !!!

கோவையில் ஃபியோனா (Fiona) சூரிய காந்தி சமையல் எண்ணெய் அறிமுக நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு.....

கோவையில் ஃபியோனா (Fiona) எனும் சன்பிளவர் ஆயில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது..

(Choose Better, Eat Better”) நல்லதை தேர்ந்தெடுங்கள்,ஆரோக்கிய உணவை உண்ணுங்கள் என்ற விழிப்புணர்வு செய்தியை கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இதில்,தேசிய விருது பெற்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வணிகப் பங்குதாரர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கு உணவுத் தேர்வுகளுடன் சமையல் எண்ணெய் தேர்விலும் விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கீர்த்தி சுரேஷ், தாம் இந்த சமையல் எண்ணெயின் விளம்பர தூதுராக ஆனதன் முக்கிய காரணம் இதன் தரம் என குறிப்பிட்ட அவர், ஃபியோனா சமையல் எண்ணெய் தயாரிப்பில் விட்டோ (Vito Protect Formula’) எனும் தொழில்நுட்பம், சாதாரண சூரியகாந்தி எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் உணவிற்கு வைட்டமின்கள் கடத்தப்படுவதை 50 சதவீதம் வரை அதிகரிக்க உதவுவதாக அவர் தெரிவித்தார்…

குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளப்படும் வீட்டுச் சாப்பாடு என்பது அன்பும் ஆரோக்கியமும் நிறைந்த ஒன்று என்றும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் வீட்டில் எடுக்கப்படும் சிறிய ஆனால் முக்கியமான முடிவுகளிலிருந்தே தொடங்குகின்றன என்றும் தெரிவித்தார். 

மேலும், மக்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்காமல், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்..

இந்த சந்திப்பின் போது பங் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் சிங் உடனிருந்தார்.

வியாழன், 11 ஜூன், 2026

பிரியாவிடை பெற்றார் 'பாசத்திற்குரிய பாரதிராஜா' - முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் !!!

பிரியாவிடை பெற்றார் 'பாசத்திற்குரிய பாரதிராஜா' - முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் !!!

 பிரியாவிடை பெற்றார் 'பாசத்திற்குரிய பாரதிராஜா' - முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் !!!

காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இயக்குநர் இமயம் என்றழைக்கப்படும் பாரதிராஜா (வயது 84) நேற்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா, நடிகர்கள் சூர்யா, கார்த்திக், சிவக்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரமுகர்கள் கண்ணீர் மல்க பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி திரை உலகினரும் பெருந்திரளாக பங்கேற்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கில் திரைப்பட இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், பார்த்திபன், நடிகர் வடிவேலு, நடிகைகள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊர் பொதுமக்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தார் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தபின் நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு அவரின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு தமிழக அரசு சார்பில் 24 காவலர்கள் தலா மூன்று குண்டுகள் வீதம் 72 குண்டுகள் வானை நோக்கி சுட்டு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை ராதிகா உள்ளிட்டோர் காலை முதல் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யும் வரை அவரது இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் பாரதிராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

புதன், 10 ஜூன், 2026

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் பாரதிராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி !!!

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் பாரதிராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி !!!

 மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் பாரதிராஜா - நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி !!!

பாரதிராஜா குழந்தையை போன்றவர் என்றும், அவர் மனதில் என்ன நினைத்தாலும் வெளிப்படையாக பேசுவார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்து உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்படும் பாரதிராஜா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் பாரதிராஜா உடலுக்கு திரைத்துறையினர் பலர் நேரில் சென்று அஞ்சலி 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 

“பாரதிராஜா என்னுடைய 50 ஆண்டு கால நண்பர். அவரது திறமை, சாதனைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். திரைத்துறையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி அவர்களை திரையுலகத்தில் வாழ வைத்தவர். அதுமட்டுமின்றி திரைத்துறையினருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து போராடியவர். அவருடைய பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

தனிப்பட்ட முறையில் குழந்தையை போன்றவர் பாரதிராஜா. அவர் மனதில் என்ன நினைத்தாலும் அதை வெளிப்படையாக பேசுவார். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்களை முன் வைத்து உள்ளார். உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உனது நடிப்பை எனக்கு பிடிக்காது என்று கூறி உள்ளார்.

அவருடன் இருந்தாலே மகிழ்ச்சியாக இருக்கும். அவரது வெளிப்படைத் தன்மையான குணத்தாலேயே எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி கணேசன் போன்றோருடன் நட்பாக இருந்தார். அவர் உயிருடன் இருக்கும் போது, அவரை பார்க்க வேண்டும் என கேட்ட போது, அவர் குணம் அடைந்து விடுவார்; அப்போது வாருங்கள் என கூறினார்கள். ஆனால் இப்போது அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை. அவர் என்றென்றும் எனது நினைவில் இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என தெரிவித்தார். 

ரஜினியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் அவர்களது திரை வாழ்வில், அடுத்த கட்டத்திற்கு செல்ல முக்கிய பங்காற்றின. பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் வில்லத்தனம் கலந்த சைக்கோ கதாபாத்திரம் அவரது திரை வாழ்க்கையில் முக்கியமானதாக அமைந்தது. அதேபோல் ‘16 வயதினிலே’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரம் அவரது திரை வாழ்வில் மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் உடல் மொழி இன்றளவும் பேசப்படுகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்”; தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சகாப்தம் முடிவு ; நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை !!!

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்”; தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சகாப்தம் முடிவு ; நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை !!!

 இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்”; தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சகாப்தம் முடிவு ; நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை !!!

“மண்ணின் அடிநாதத்தை விதைத்த கலைஞனுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”: டெல்லி புறப்படும் முன் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் உருக்கம் !!!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவரை, மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்து குருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாரதிராஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 84. 

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

முன்னதாக இன்று காலை முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - முதலமைச்சர் விஜய் இரங்கல்

நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் காலையிலேயே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து முதலமைச்சரின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் அவர் கூறியதாவது, ”தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர்.

பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.


புதன், 3 ஜூன், 2026

பிரபல நடிகை தீபாவின் தந்தை மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது !!!

பிரபல நடிகை தீபாவின் தந்தை மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது !!!

 பிரபல நடிகை தீபாவின் தந்தை மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது !!!

பிரபல திரைப்பட நடிகை தீபாவின் தந்தை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் புலவர் கணேசன் (72). இவர் பிரபல சினிமா மற்றும் டிவி சீரியல் நடிகை தீபாவின் தந்தை ஆவார். இவர் தூத்துக்குடி மாநகர் 57 வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரம் பகுதியில் பத்ரகாளி அம்மன் கோயில் தர்மகர்த்தாகவும் இருந்து வருகிறார். மேலும் இந்த கோயிலில் சிறந்த நிர்வாகத்தை வழங்கியதற்காக பாராட்டும் பெற்றவர்.

மேலும் கோயில் அருகே காமராஜருக்கு சிலை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கோயில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை முன்பாக புலவர் கணேசன் நின்று கொண்டு இருந்த போது, திடீரென்று அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிலர், கைகளில் அரிவாளுடன் பாய்ந்து வந்து புலவர் கணேசனை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சிலர் ஓடி வந்து அந்த கும்பலை பிடிக்க முற்பட்ட போது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர். தொடர்ந்து, தலை, கால் உட்பட பல்வேறு இடங்களில், வெட்டுக் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த புலவர் கணேசனை மீட்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சார்ந்த முத்துராஜ், கார்த்தி, இசக்கி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை தீபா சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான தீபா, கடைக்குட்டி சிங்கம், மண்டேலா, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

வியாழன், 28 மே, 2026

முடி முக்கியமல்ல; மூளைதான் முக்கியம்!’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ஜுகல்பந்தி; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு!” என அதிரடிப் பேட்டி !!!

முடி முக்கியமல்ல; மூளைதான் முக்கியம்!’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ஜுகல்பந்தி; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு!” என அதிரடிப் பேட்டி !!!

 முடி முக்கியமல்ல; மூளை தான் முக்கியம்’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு” என அதிரடிப் பேட்டி !!!

​“தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகே மற்ற பாடல்கள்”: த.வெ.க ஆட்சி குறித்து சிவகுமார் !!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கேஜி (தனியார்) மருத்துவமனையில் நிகழ்ச்சில் நடிகர் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் ஆகிய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேடையில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ், சிவகுமார் டை அடிக்காமல் வந்திருக்கலாம் அல்லவா?. நாமெல்லாம் தலைக்கு மேல் உள்ளதை நம்பி வாழ்பவர்கள் அல்ல தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று முடியையும் மூளையையும் சுட்டிக்காட்டினார். சிவக்குமார் இருந்த தைரியத்தில் தான் நாம் சென்னைக்கு சென்றேன் அங்கு சென்ற பிறகு தற்பொழுது ஓரளவு ஒழுக்கமானவனாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் சிவகுமார் தான். பெரியாரின் தொண்டன் எம்ஜிஆரின் ரசிகன் என்ற இரண்டு விஷயமும் என்னை பொறுத்தவரை எனக்கு ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும் தெளிவாக ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க முடியும் அதற்கு முக்கியமான துணை தந்தை பெரியார் தான். அதேபோல் உற்சாகமாக இருப்பதற்கு புரட்சித்தலைவி எம்ஜிஆர் அவரது பாடல்கள் தற்பொழுது வரை உறங்குவதற்கு முன்பு கடவுள் வாழ்த்து பாட மாட்டேன் வாத்தியாரின் பாடல்களை தான் கேட்பேன் என்று கூறிய அவர் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடலை கேட்டு விட்டு படுத்தால் தெம்பாத தெளிவாக இருக்கலாம் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் வந்தே மாதரம் பாடல்க்கு பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து பேசிய அவர் இனிமேல் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை பாடுங்கள் என்று வேண்டுகோளாக விடுகிறேன் அதன் பிறகு எந்த பாடலை வேண்டுமானாலும் பாடுங்கள் என்று தமிழ் மண்ணை சாப்பிட்டு வளர்ந்தவன் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சிவகுமார் பேசும்போது

நான் பிறந்த ஊரில் அப்பொழுது அடிப்படை வசதிகள் கிடையாது. மாட்டு சாணத்தை முழுகிய தரையில் அமர்ந்து தான் படிப்போம். இன்னொரு பிறவி எடுத்தாலும் ஓவியனாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நான் நான்கு முதல்வர்களுடன் நடித்துள்ளேன் என்று எம்ஜிஆர் ஜெயலலிதா கலைஞர் விஜய் ஆகியோர் உடன் நடித்த படங்களை நினைவுகூர்ந்து நடிகர் விஜயுடன் நான் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் 200 நாட்கள் ஓடியது என்றும் தெரிவித்தார்.மேலும் மேடையில் கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றை பாடி விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்த நடிகர் சிவக்குமார், அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட ஊர் கோவை என்றும் நான் கோவை சூலூர் அருகே உள்ள சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன் நான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது சிறுவயதில் கீழே விழுந்து அடிபட்டால் மாட்டு சாணத்தை தான் புண் மீது போடுவார்கள் ஒரு வாரத்தில் அது குணமாகிவிடும் நான் நாட்டு வைத்தியங்களில் வளர்ந்த ஆள்.

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு நம்முடைய உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உடலை நல்லபடியாக வைத்துக் கொண்டால் தானம் என்ற நடைமுறைக்கு செல்ல தேவையில்லை என்று கூறி பல்வேறு யோகா பயிற்சிகளையும் செய்தியாளர் சந்திப்பின்பொழுது செய்து காட்டினார்.

காபி டீ எல்லாம் சாப்பிட்டு 65 வருடங்கள் மேல் ஆகிறது, தினமும் யோகா செய்கிறேன்

சத்யராஜ் எம்.ஜி.ஆர் அவருடைய சிஷ்யன் கரலாகட்டையை சுத்தி கொண்டு இன்னும் உடலை கட்டுமானமாக வைத்துள்ளார். யாரும் பெரிய ஆள் என்று நினைக்காமல் அனைவரிடமும் நன்கு பழகினால் மன அழுத்தம் என்பது வராது, செல்போன்கள் எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் யாரும் தனியாக வாழாதீர்கள் நெருக்கமான நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள் நானும் சத்தியராஜ்யம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம்.

எனக்கு தற்பொழுது 85 வயது ஆகிறது உலகம் முழுவதும் 20 நண்பர்கள் எனக்கு உள்ளன நாள்தோறும் ஒரு மணி நேரமாவது அவர்களிடம் பேசுவேன், மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் தனிமை தான் எனவே அனைவரும் நண்பர்களுடன் இருங்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மருத்துவர்களே தேவை இல்லை.

பிராமணர்கள் 75 என்பது வயதிலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஏனென்றால் அவர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை சத்யராஜ் போன்றவர்கள் பெரியார் கூறியதைப் போல 95 வயதிலும் ஆடு மாடு கோழி எல்லாம் சாப்பிட்டு ஜீரணம் செய்ய முடியாமல் இருக்கிறார் என்று கிண்டல் அடித்தார. அப்போது குறுக்கிட்ட சத்தியராஜ் பெரியார் சமூக நீதியை தான் கூறினார். மேலும் மருத்துவரிடமே கேளுங்கள் அசைவத்தில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்றார். அப்பொழுது சிவக்குமார் நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன் 45 வயது வரை அசைவம் சாப்பிடலாம் 45 வயதுக்கு மேல் அது தேவை இல்லை குறைத்துக் கொள்ளலாம். தற்பொழுது உள்ள போதைப் பொருட்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஏதேதோ பெயர் எல்லாம் கூறுகிறார்கள். 

விஜய் நினைத்து சந்தோசம் பட வேண்டும் அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் என்று தான் மக்கள் வாக்களித்து உள்ளவர்கள் என்றார்.

மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம், காமராஜரை போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா? அவர் இருக்கும் பொழுது அவருக்கு சொத்து என்பதை 140 ரூபாய் பணம் 4, 5 துணிமணிகள், புத்தகங்கள் தான் அப்படிப்பட்ட காமராஜரயே தோற்கடித்தார்கள் காமராஜர் வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று அப்பொழுது மக்கள் நினைத்தார்கள், திமுகவும் 50 ஆண்டுகள் ஆண்டது தற்பொழுது அதுவும் வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள்.

யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள் மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள் மக்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 95 சதவிகிதம் காசு வாங்காமல் ஓட்டு போட்டு உள்ளார்கள் பெண்கள் அதிகமானோர் ஓட்டு போட்டு உள்ளார்கள், அடுத்த தலைமுறை எங்களுக்கு ஒரு சரியான தலைவன் வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது அதனை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார்?. 

சினிமாவை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியலில் அதிகம் இருந்துள்ளார்கள் என்ற கருத்து தொடர்பான கேள்விக்கு காந்தி காலத்திற்கு முன்பு அரசியல் தலைவர்களின் தாக்கம் அதிகம் இருந்தது மக்களை அதிகம் இருப்பவர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள் தான்

சினிமா துறையின் படம் மூலம் கூறுவது மக்களுக்கு நெருக்கமாக ஆகிவிடுகிறது என்றார். சினிமா துறையை சார்ந்த அரசியல் என்பது கேரளாவில் எடுபடவில்லை என்ற கேள்விக்கு அங்கு அனைவரும் படித்தவர்களாக உள்ளார்கள் மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும் சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள் மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?. அப்பொழுது குறுக்கிட்ட மருத்துவர் பக்தவச்சலம் அறியாமை இருந்தால் மருத்துவத்துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேட்டி அளிக்கும் போது 

நான் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வேன் நான் உடற்பயிற்சியையும் வாழ்க்கையும் தனித்தனியாக பிரித்துக் கொள்வது இல்லை இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை முடிந்தவரை மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வது குறித்து பேசும் பொழுது நம்முடைய ஆட்கள் அங்கு அதிகம் பேர் உள்ளார்கள் அங்கு வேலை செய்வதற்கு யாரும் இல்லை, அமெரிக்க காரர்கள் யாரும் வேலை செய்வது இல்லை ட்ரம்ப் தலையில் அடித்துக் கொள்கிறார் என நகைச்சுவையாக.

எம்.ஜி.ஆர் பாடியதைப் போல் அவரர்களே திருந்தாவிட்டால் போதையை ஒழிக்க முடியாது தற்பொழுது உள்ள அரசு பள்ளிகள் அருகில் உள்ள மதுபான கடைகளை மூடியது நல்ல விஷயம் தான் என்றார்.


வெள்ளி, 22 மே, 2026

சாமி வரம் கொடுத்திருச்சு ; சங்கிலி கருப்பராயனுக்கு ‘அரிவாள்’ நேர்த்திக் கடன் செலுத்திய ஆர்.ஜே.பாலாஜி !!!

சாமி வரம் கொடுத்திருச்சு ; சங்கிலி கருப்பராயனுக்கு ‘அரிவாள்’ நேர்த்திக் கடன் செலுத்திய ஆர்.ஜே.பாலாஜி !!!

 சாமி வரம் கொடுத்திருச்சு ; சங்கிலி கருப்பராயனுக்கு ‘அரிவாள்’ நேர்த்திக் கடன் செலுத்திய ஆர்.ஜே.பாலாஜி !!!

​‘கருப்பா’ பட வெற்றிக்காக கோவையில் உருகிய இயக்குநர்: அக்ரி யுனிவர்சிட்டி சூட்டிங் சென்டிமென்ட் பலித்தது !!!

கோவை, தடாகம் சாலை லாலி ரோடு சந்திப்பில் உள்ள பழமை வாய்ந்த காவல் தெய்வமான சங்கிலி கருப்பராயன் கோயிலில் கருப்பா திரைப்பட இயக்குநர் ஆர் ஜே பாலாஜி கருப்பா திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுதல் வைத்து இருந்தார்...

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கருப்பா படத்தின் சூட்டிங் நடைபெற்ற போது தினமும் வந்து இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்து இருந்தார் ..

இந்த  நிலையில் கருப்பா படம் வெளிவந்து வெற்றி பெற்றது. இதை அடுத்து நேற்று கோவை வந்த அவர் லாலி ரோடு கருப்பராயன் கோவிலுக்கு வந்தார்.சங்கிலி கருப்பராயரை மனமுருகி வேண்டி கோவில் நிர்வாகிகளிடம் அரிவாள் நேர்த்திக்கடனாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்தார்...

ஞாயிறு, 17 மே, 2026

ஊடகங்களில் பொய் சொல்கிறார் ரவிமோகன் - மாமியார் சுஜாதா விஜயகுமார் விளக்கம் !!!

ஊடகங்களில் பொய் சொல்கிறார் ரவிமோகன் - மாமியார் சுஜாதா விஜயகுமார் விளக்கம் !!!

 குழந்தைகளைக் கூட பார்க்க முடியவில்லை ; என்று நடிகர் ரவிமோகன் குற்றச்சாட்டு - மாமியார் சுஜாதா விஜயகுமார் மறுப்பு !!! 

தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியவில்லை என்று நடிகர் ரவிமோகன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

‎திரைப்பட ‎தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ஆர்.பி. சௌத்ரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆர்.பி.சௌத்ரியின் மகன்களான ஜீவா, ஜித்தன் ரமேஷ், நடிகர் நாசர், இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், கதிரேசன், காட்டக்கார பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு ரவிமோகனின் மாமியாரும், திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "ரவிமோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அவர் இவ்வாறு பேசக் கூடாது. அவர் தரப்பு தான் நியாயம் என்பது போல மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார்.

நான் இதை சட்டத்தின் வழி நின்று உண்மை எதுவென அனைவருக்கும் உணர்த்துவேன். இதனை நான் பெரிது படுத்தாததற்கு காரணமே என் பேரன் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, இந்த பிரச்சனையால் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறான். இளம் வயதிலேயே பார்க்கக் கூடாததை எல்லாம் பார்த்து விட்டான். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான்" என்றார்.

கேள்வி: தனது பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை என ரவிமோகன் தெரிவித்து உள்ளார். உங்கள் பதில் என்ன?

சுஜாதா விஜயகுமார்: இது, முற்றிலும் பொய்யானது. ரவிமோகன் உண்மைக்கு மாறான தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்.‎

கேள்வி: ரவிமோகன் - ஆர்த்தி திருமணமே, ஆர்த்தியின் பிளாக் மெயில் மூலமாக நடைபெற்றது ரவி தெரிவித்து உள்ளாரே?

சுஜாதா விஜயகுமார்: 2008 காலகட்டத்தில் வந்த விகடன் இதழில் இது தொடர்பாக விளக்கமான ஒரு நேர்காணல் வந்தது. அதில் யார் கையை யார் அறுத்துக் கொண்டு திருமணம் செய்தார்கள் என்று உள்ளது. அந்த இதழை தேடிக் கொண்டு இருக்கிறேன். அது கிடைத்தால் உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் கிடைக்கும்.

கேள்வி: ரவி மோகன் தான் சம்பாதிக்கும் பணத்தைக் கூட செலவு செய்யவில்லை முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறாரே ?

சுஜாதா விஜயகுமார்: ஒரு குடும்பமாக இருக்கும் பொழுது கணவன், மனைவி இருவரும் சம்பாதிப்பது குடும்பத்திற்காகத் தான். இது தொடர்பாக நீதிமன்றத்தில் கூட இதையே தெரிவித்தோம்.

கேள்வி: ‎உங்கள் மருத்துவ செலவிற்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ரவி மோகன் தெரிவித்து இருக்கிறாரே?

சுஜாதா விஜயகுமார்:‎ அவர் அப்படி தரவில்லை. ஒருவேளை தந்து இருந்தால் கூட ஒரு மாப்பிள்ளையாக அவர் தனது கடமையை செய்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.

கேள்வி: ‎உங்கள் இரண்டாவது மகளின் கணவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு தப்பித்து விட்டது போல் நானும் விரைவில் விவாகரத்து வாங்கி விடுவேன் என ரவி மோகன் தெரிவித்து இருப்பது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சுஜாதா விஜயகுமார்:‎ விவாகரத்து பெற்றுச் சென்றவர் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் வேறு ஒரு குடும்பத்தை தேடிச் சென்று விட்டார். அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. அதைப் பற்றி இந்த நேரத்தில் பேசுவது சரியாக இருக்காது.

கேள்வி: 25 பேர் தொடர்ந்து அவதூறு பரப்பியதால் கெனிஷா பிரிந்து சென்று விட்டார் என ரவிமோகன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு என்ன சொல்கிறீர்கள்?

‎சுஜாதா விஜயகுமார்:‎ விரைவில் அதனை நாங்கள் கண்டுபிடிக்க போகிறோம். இணையத்தில் அவதூறு பரப்பிய நபர் யார் ?என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும்.

கேள்வி: தனது மகன்களுக்காக மட்டுமே தான் உயிர் வாழ்வதாக ரவிமோகன் உருக்கத்தோடு தெரிவித்து உள்ளார். உங்கள் கருத்து என்ன?

சுஜாதா விஜயகுமார்:‎ அவரவர் பெற்ற குழந்தையை அவரவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் என் மகள்களுக்காக வாழ்கிறேன். அதேபோல அனைத்து பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும்.

கேள்வி: நடிகர் ரவிமோகன் தனது குழந்தைகளை கடைசியாக எப்போது பார்த்தார்?

‎சுஜாதா விஜயகுமார்: கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை ரவி மோகன் தனது குழந்தைகளை பார்த்து விட்டு சென்று உள்ளார்.

கேள்வி: ஆர்த்திக்கு ஆதரவாக மூன்றெழுத்து இட்லி நடிகை பேசி வருகிறார். அவருக்கு என்னை பற்றி பேச அருகதை இல்லை என ரவி மோகன் பேசி இருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?

‎சுஜாதா விஜயகுமார்: ‎தமிழ்நாட்டில், பெண்களுக்கு அநீதி நடக்கும் பொழுது அனைவரும் குரல் கொடுப்பார்கள். ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவிற்கு மில்லியன் கணக்கானோர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது சாதாரண நிகழ்வு தான். இதில் எந்த விதமான உள்ள அர்த்தமும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் நான் பேசவில்லை. ஏனெனில் அது நீதிமன்றத்திற்கு எதிரானது" என்று பதில் அளித்தார்.

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன் - நடிகர் ரவி மோகன் !!!

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன் - நடிகர் ரவி மோகன் !!!

 விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன் - நடிகர் ரவி மோகன் !!!

விவாகரத்து கிடைக்கும் வரை புதிய திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரவி மோகன் அவரின் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவகாரத்து கோரி கடந்த 2024 செப்டம்பரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளதால், இருதரப்பினரும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பாக, ரவி மோகனின் தோழியான கெனிஷா, ஆர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறாக பேசக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுபோன்ற சூழலில், ரவி மோகன் - ஆர்த்தி தம்பதி விவகாரத்திற்கு கெனிஷா தான் காரணம் என பலரும் வீடியோ பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கெனிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், 'ரவி ஒன்றும் குழந்தை கிடையாது. அதேபோல நானும் பாலியல் தொழிலாளி கிடையாது' என ஆவேசமாக பதிவிட்டு இருந்தார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்கு உள்ளேயே, கெனிஷா மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அதில், 'நான் சென்னையை விட்டும், இறுக்கமான பிடியை விட்டும் செல்கிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டு இருந்தார்.

அதைப் பார்த்த பலரும் ரவி மோகன், கெனிஷா இருவரும் பிரிந்து விட்டனரா ? என சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ரவி மோகன் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ரவி என்றாலே மிகவும் சாதுவானவர், எது சொன்னாலும் கேட்டுப்பாரு, புரிஞ்சுப்பாரு என்பார்கள். ஆனால், சாது மிரண்டால், காடு கொள்ளாது. அதுபோல, சாதுவாக இருந்த என்னை நிறைய பேர் ஏமாற்ற நினைக்கிறார்கள்.

எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை, நான் இனி மேல் புதுப் படங்களில் நடிக்கப் போவதில்லை. அதே போல, நான் யாரையும் தனிப்பட்டு சொல்ல விரும்பவில்லை. மூன்று எழுத்து இட்லி நடிகை தான் எனது வாழ்க்கையை அழித்து விட்டார். எனது சொந்த வாழ்க்கையை பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

எனது வாழ்க்கையில் 23 ஆண்டுகள் இரவுப் பகல் பாராமல் உழைத்து உள்ளேன். ஆனால், இந்த 23 வருடத்தில் பெண்கள் பின்னால் போனேன்னு சொல்லி, என்னை கேவலப்படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். என்னைப் போன்ற ஒருவரை திரையுலகில் காட்டுங்கள் பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு எனது மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்தினார்கள். அதை வெளியில் சொன்னால் எனது இமேஜ் போய்விடும், அதனால் சொல்ல மாட்டேன் என நம்பினார்கள். இனி மேலும் நான் என்னுடைய இமேஜ்க்காக இருக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. எப்போதும் பாதுகாவலர்கள் உடனே வருகிறார்கள்.

எனக்கு தனியாக ஒரு வங்கிக் கணக்கு கூட கிடையாது. ஆர்த்தியும் நானும் இணைந்த வங்கிக் கணக்கு தான் இருந்தது. அந்த சமயத்தில் எந்த செலவு செய்தாலும், எதற்காக செலவு செய்தீர்கள் என பலவித கேள்விகளை என்னிடம் ஆர்த்தி எழுப்புவார். எனக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்து உள்ளது. என்னை மிரட்டி தான் கல்யாணம் செய்ய வைத்தார்கள்” என கண்ணீர் மல்க பேசினார்.

தொடர்ந்து ஆர்த்தி தங்கையின் முன்னாள் கணவர் பிரசாத்துடன் இணைந்து பேசிய ரவி மோகன், “எனக்கும், இவருக்கும் நிறைய கொடுமைகள் நடந்து இருக்கிறது. ஆனால், எனக்கு முன்பாகவே அவர் தப்பித்து விட்டார். ‎பிரசாத்தை அவர்கள் காலில் விழ வைத்தார்கள். என்னால் காலையில் எழுந்து வேலை பார்க்க முடியவில்லை. இதற்கு மேல் என்னால் முடியாது. என் குழந்தைகளுக்காக தான் நான் உயிரோடே உள்ளேன். எப்போது விவாகரத்து கிடைக்கிறதோ, அப்போது தான் எல்லாம் சரியாகும்” என்றார்.

இதற்கு ஆர்த்தி அவரது எக்ஸ் பக்கத்தில், “தூங்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக் கூடாது. அதுவும் அவள் ஒரு தாய் சிங்கமாக இருந்தால், கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான, அமைதியை ஒருபோதும் பலவீனம் என்று தவறாக எண்ணவோ, அதைத் தவறாக பயன்படுத்தவோ கூடாது. தேவைப்பட்டால், எனது கண்ணியத்தை பாதுகாக்கவும், குழந்தைகளுக்காகவும் உலகை எதிர்கொள்வேன். ஏனென்றால், உண்மை எப்போதும் வெல்லும்” என பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவிற்கு நடிகை குஷ்பு, “ஒரு தாயுடன் எப்போதும் மோதாதீர்கள். நீ சிங்கக் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்கம்” என கமெண்ட் பதிவிட்டு உள்ளார்.

வெள்ளி, 15 மே, 2026

ஒருநாள் தாமதமாக வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ - கோவையில் திருநீறு பூசி, கையில் பட்டாசு சுழற்றி ரசிகர்கள் ‘வெறித்தனம்’ கொண்டாட்டம் !!!

ஒருநாள் தாமதமாக வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ - கோவையில் திருநீறு பூசி, கையில் பட்டாசு சுழற்றி ரசிகர்கள் ‘வெறித்தனம்’ கொண்டாட்டம் !!!

 ஒருநாள் தாமதமாக வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ - கோவையில் திருநீறு பூசி, கையில் பட்டாசு சுழற்றி ரசிகர்கள் ‘வெறித்தனம்’ கொண்டாட்டம் !!!

​பால் அபிஷேகம்; கறுப்பு சட்டை அணிந்து முழக்கமிட்ட ரசிகர்கள் - ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு !!!

 பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து, கோவை துடியலூர் பகுதியில் சூர்யா ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பேனர்களுக்குப் பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

​ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான சூர்யா, த்ரிஷா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில், சாய் அபயங்கர் இசை அமைப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘கருப்பு’. இத்திரைப்படம் நேற்று (மே 14) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதியில் ‘திடீர்’ தடை ஏற்பட்டது. 

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், தடைகள் நீங்கி இன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர்.

​அதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற முருகன் திரையரங்கில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று மாலை பிரம்மாண்ட கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சூர்யாவின் மெகா பேனருக்குப் பால் அபிஷேகம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

அதில் வித்தியாசமான முறையில் பலரும் கறுப்பு நிறச் சட்டை அணிந்து வந்து, ஒருவருக்கொருவர் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு, "கருப்பா... கருப்பா..." என்று தியேட்டரே அதிரும் வகையில் முழக்கமிட்டு ‘மாஸ்’ காட்டினர். தொடர்ந்து, தியேட்டர் வாசலில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடிய போது, ரசிகர் ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் எரியும் பட்டாசைத் தனது கையில் பிடித்தவாறே நாலாபுறமும் சுழற்றி ரகளையில் ஈடுபட்டார். இதனால் ‘பயம்’ கலந்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் சக ரசிகர்கள் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

​இதனைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் ‘மெகா’ கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நேற்று ஏமாற்றமடைந்த சூர்யா ரசிகர்கள் இன்று ‘கருப்பு’ ரிலீஸை திருவிழா போலக் கொண்டாடி தீர்த்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திங்கள், 27 ஏப்ரல், 2026

ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு; சமூக வலைதளத்தில் ஆவேச பதிவு !!!

ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு; சமூக வலைதளத்தில் ஆவேச பதிவு !!!

 ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு; சமூக வலைதளத்தில் ஆவேச பதிவு !!!

குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்று இருந்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். அதற்கு முன்பு சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் இருந்து வந்தார்.

சுப்பிரமணியபுரம்' வெற்றிக்கு பிறகு ஜேம்ஸ் வசந்தனுக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது முழு நேர இசைமைப்பாளராக அவர் பணி புரிந்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்தில் இருந்தே ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் கூட, .த.வெ.க வினர் மற்றும் விஜய் ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதில், விஜய்யையும், அவரது அரசியல் நிலைப்பாட்டையும் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக சாடி பேசி இருக்கிறார். இதனால் த.வெ.க தொண்டர்கள் அவரை மோசமாக பேசி கமெண்ட் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான், தனது குடும்பத்துடன் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் சென்று இருக்கிறார்.

அங்கு உணவு அருந்தி விட்டு வெளியே வந்த அவர் காரை எடுப்பதற்காக பார்க்கிங் பகுதிக்கு வந்து உள்ளார். அப்போது தனது காரின் பின்பக்க இருக்கையின் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார், உணவகத்தை சுற்றி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் இடையே, தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ள அவர், அதற்கு கீழே காட்டமான பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

அதில், "தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது" என ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில் கூறி உள்ளார்.

முன்னதாக, த.வெ.க தொண்டர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன். த.வெ.க தூய சக்தி என விஜய் கூறியதை விமர்சிக்கும் விதமாக, அவர் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லையா? வருமான வரியை ஒழுங்காக செலுத்தியவரா? இவர் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்ய மாட்டாரா? என ஜேம்ஸ் வசந்தன் கேள்வியெழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.