அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் !!!
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதேசமயம் அடுத்து நான்கு நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
பிப்ரவரி 28 ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 01, 02 ல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 03 முதல் 06 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 01 ல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 28 முதல் மார்ச் 01 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக் கூடும்.
மார்ச் 02 முதல் 04 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.

0 கருத்துகள்: