அருணாசல பிரதேசத்தில் தேசிய அளவில் நடைபெற்ற மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டியில் 9 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது...
22-வது தேசிய மலை நிலப்பரப்பு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 12-ந்தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது.4 நாட்கள் நடைபெற்ற இதில் இந்தியாவில் சுமார் 29 மாநிலங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆரம்பம் முதலே தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 9 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்…
இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சவுபர்ணிகா 2 தங்கம் வென்று சிறந்த வீராங்கனையாகவும்,கோவையை சேர்ந்த ஆஸ்ரம் பள்ளி மாணவி ஹாசினி 2 தங்கம் வென்றும் கவனம் ஈர்த்துள்ளனர்…
இந்நிலையில் கோவை இரயில் நிலையம் வந்த வீரர்,வீராங்கனைகளுக்கு மாநில மாவட்ட சைக்கிள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
முன்னதாக வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி மாணவிகள் ரோஜா மலர் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
தொடர்ந்து தமிழ்நாடு மாநில சைக்கிள் சங்க தலைவர் மாணிக்கம் வெற்றி பெற்ற வீர்ர,வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்..

0 கருத்துகள்: