வியாழன், 19 மார்ச், 2026

டிஜிட்டல் கைது என்று கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் இடம் ரூபாய் 40 லட்சம் மோசடி !!!

SHARE

 டிஜிட்டல் கைது என்று கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் இடம் ரூபாய் 40 லட்சம் மோசடி !!!

கோவையில் டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறி ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூபாய் 40 லட்சம் மோசடி நடந்து உள்ளது. இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்றதாசில்தார் 70 வயதான இவரது செல்போனுக்கு கடந்த 7 ஆம் தேதி ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மும்பையில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறினார். தொடர்ந்து அந்த நபர் முதியவரிடம் வங்கி கணக்கு மூலம் சட்டவிரோதமாக ரூபாய் 2 கோடி 50 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்து உள்ளதாகவும், அதனால் டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக கூறி மிரட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து முதியவரின் வங்கி கணக்கில் தற்பொழுது எவ்வளவு ? தொகை இருப்பில் உள்ளது என விசாரித்து உள்ளார். மர்ம நபரின் மிரட்டலுக்கு பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கின் ரூபாய் 40 லட்சம் பணம் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து தான் கூறும் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுமாறு மர்ம நபர் கூறி உள்ளார். இதை அடுத்து அந்த முதியவர் தனது வங்கிக்கு சென்று தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 40 லட்சம் பணத்தை எடுத்தார். தொடர்ந்து மர்ம நபர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை விடுவித்து விட்டதாக கூறி உள்ளனர். அதை தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி அந்த முதியவர் விசாரித்து உள்ளார். அப்பொழுது தான் மோசடி செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: