திங்கள், 2 மார்ச், 2026

விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல், சிந்து !!!

SHARE

 விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல், சிந்து !!!

ஈரான் ஏவு​கணை தாக்குதல் காரண​மாக விமானங்கள் ரத்து செய்யப்​பட்​ட​தால், துபாயில் சிக்​கி​ உள்ள பாலிவுட் நடிகை சோனல் சவு​கான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடி​ உள்​ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்குதல் நடத்​தி​யதை அடுத்​து, ஈரான் பதிலடி தாக்​குதலில் இறங்கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்​தார் உட்பட அண்டை நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் ஏவுகணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. 

இதனால் பல விமான நிறு​வனங்​கள் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு செல்​லும் விமானங் களை ரத்து செய்​தன.

அதிக விமானங்​கள் வந்து செல்​லும் துபாய் விமான நிலை​யத்​தில் பயணி​கள் கூட்​டம் கூட்டமாக காத்​துக் கிடக்கின்றனர். ஜனத் இந்தி படத்​தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவு​கானும், துபாய் சென்று நாடு திரும்ப முடி​யாமல் தவிக்கிறார்.

இந்​நிலை​யில் அவர் இன்ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்​டு​கோள் விடுத்து உள்​ளார். ”வளை​குடா நாடு​களில் ஏற்பட்டு உள்ள பதற்​றத்​தால், விமானங்​கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நான் பாது​காப்​பாக நாடு திரும்ப மத்​திய அரசு உதவி செய்து வழி​காட்ட வேண்​டும்” என கூறி​ உள்ளார்.

ஒலிம்​பிக் போட்​டியில் இரு முறை பதக்​கம் வென்ற பாட்மிண்டன் வீராங்​கனை பி.​வி.சிந்துவும், தனது பயிற்​சி​யாள​ருடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கி உள்ளார்.

அவர் எக்ஸ் தளத்​தில், ”துபாய் விமான நிலையம் பதற்​றத்​துடன் காணப்​படு​கிறது. சில மணி நேரங்​களுக்கு முன்பு துபாய் விமான நிலை​யத்​தில் நாங்​கள் இருந்த இடத்​துக்கு அருகே வெடிச் ​சத்​தம் கேட்​டது. எனது பயிற்சியாளர் அங்கு இருந்து வேக​மாக ஓடி வந்​தார். இங்கு மிக​வும் பதற்​ற​மான சூழல் நிலவுகிறது.

நாங்​கள் பாது​காப்​பான இடத்​தில் உள்​ளோம். எங்களைப் பாதுகாக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டு உள்ள துபாய் விமான நிலைய ஊழியர்​கள் மற்றும் அதி​காரி​களுக்கு நன்​றி. எங்​களுக்கு உதவும்​ இந்​தி​ய தூதரக அதி​காரி​களுக்​கும்​ நன்றி” என கூறி​ உள்ளார்​.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: