விஜய்க்காகத் தளர்ந்ததா விதிகள்? டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் இருந்து மாஸாக வெளியேறிய த.வெ.க தலைவர் !!!
சன் ரூஃப் வழியாகக் கையசைத்த விஜய்; இரவு 8 மணிக்கும் பறக்க அனுமதி கிடைத்த தனி விமானம்!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள வேளையில், த.வெ.க தலைவர் விஜய் நேற்று டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரான விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பி உள்ளது.
குறிப்பாக, சி.பி.ஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக வரும் வி.ஐ.பி-களுக்குக் கூடக் கிடைக்காத சில 'ஸ்பெஷல்' சலுகைகள் விஜய்க்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் 'ஹாட் டாபிக்' ஆக மாறி உள்ளன.
நேற்று மாலை 4.30 மணி அளவில் இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த அதே வேளையில், சி.பி.ஐ அலுவலகத்தில் விஜய்யிடம் கரூர் சம்பவம் தொடர்பாக 3-வது கட்ட விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய், வழக்கமாகப் பாதுகாப்பு காரணங்களுக்காக வி.ஐ.பி-கள் பயன்படுத்தும் மூடிய கார்களுக்குப் பதில், தனது காரின் சன் ரூஃப் (Sun Roof) வழியாக வெளியே வந்து ரசிகர்களுக்குக் கையசைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "சி.பி.ஐ தலைமை அலுவலக வாயிலில் இது போன்ற 'ஓப்பன்' மாஸ் எண்ட்ரி இதற்கு முன் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை" என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமானப் பயணத்தில் கிடைத்த 'ட்விஸ்ட்':
இதைவிட முக்கியமாக, விஜய்யின் தனி விமானப் பயணம் குறித்த தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு மற்றும் இரவு நேரப் பறக்கும் விதிகளின்படி இரவு 7 மணிக்கு மேல் தனி விமானம் டெல்லியில் இருந்து கிளம்ப அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விஜய் மறுநாள் காலையில்தான் சென்னை திரும்ப முடிந்தது. ஆனால், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய்யின் தனி விமானம் இரவு 8 மணிக்கும் சென்னை நோக்கிப் பறக்க விமான போக்குவரத்துத் துறை (ATC) அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த அன்றே, விஜய்க்கு வழங்கப்பட்ட இந்தத் தளர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கோணங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், "இது ஒரு சாதாரண விமானப் போக்குவரத்து அனுமதிதான், இதில் விதிகள் மீறப்படவில்லை" என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எது எப்படியோ, தேர்தல் அறிவிக்கப்பட்ட அதே நாளில் விஜய்யின் இந்த டெல்லி பயணம் 'மாஸ்' மற்றும் 'சர்ச்சை' என இரண்டுக்கும் பஞ்சமில்லாமல் முடிந்து உள்ளது.

0 கருத்துகள்: