மே 4-ம் தேதி நாடே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் கேட்கும் - செங்கோட்டையன் பேட்டி !!!
மே 4 ஆம் தேதி நாடே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் இருக்கும் என்று தவெக உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 85.15% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாக இருக்கிறது.
எப்போதும் தேர்தல் நடந்து முடிந்த நாளன்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது வெளியாகி விடும். ஆனால் இம்முறை மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவானது. நேற்று முன் தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.
பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த முறையும் தி.மு.க கூட்டணி தான் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஒரு சில கருத்துக்கணிப்புகள் முதன்முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறியிருக்கின்றன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக உயர்மட்ட நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மே 4 ஆம் தேதி இந்தியாவே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் கேட்கும் என்று கூறியிருக்கிறார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவரிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் விசில் சத்தம் ஓரளவுக்குத் தான் இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “விசில் சத்தம் இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு இருக்கும். இது ஒரு மிராக்கிள். உலக வரலாற்றில் இது போன்று விசில் சத்தம் கேட்க இருப்பது இதுவே முதல் முறையாகும். விசில் சத்தத்தை 4 ஆம் தேதி பாருங்கள்” என்றார்.
விசில் சத்தம் பாம் சத்தம் போன்று இருப்பதாக சிலர் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, “சிலருக்கு பாம் வைத்தே பழக்கம். நக்சைலைட் ஏரியாவில்” என்று சிரித்துக் கொண்டே சென்றார்.

0 கருத்துகள்: