கோவை சூலூர் அருகே தொழிலாளி கொலை வழக்கு ; மனைவி கள்ளக்காதலன் உட்பட நான்கு பேர் சிறையில் அடைப்பு - சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைப்பு !!!
தொழிலாளி கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பெரிய நெகமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். வயது 40 தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா காதலித்து திருமணம் செய்த, இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.
சரண்யா குழந்தைகளுடன் சுல்தான் பேட்டை அருகே குமாரபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்பொழுது சரண்யாவுக்கும் அவரது உறவினரான சுல்தான்பேட்டை வீ. வடுகபாளையத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சதீஷ் என்கின்ற முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த சரண்யாவின் கணவர் சதீஷ்குமார் இரண்டு பேரையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா மற்றும் அவரது கள்ளக் காதலன் முருகன் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சதீஷ்குமாரை கடந்த மூன்றாம் தேதி திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத், சிவலிங்கம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிக் கொன்று உடலை பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் வீசி சென்றனர். இதற்கு இடையே ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய சதீஷ்குமார் மாயமாகி விட்டதாக சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பொங்கலூர் அருகே நாதேகவுண்டன் பாளையத்தில் சதீஷ்குமார் இறந்த நிலையில் உடல் காயங்களுடன் போலீசாரால் மீட்கப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சதீஷ்குமார், அவரது மனைவி சரண்யா கள்ளக்காதலன் முருகன் உட்பட நான்கு பேர் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் முருகன், கோபிநாத், சிவலிங்கம் ஆகியோரே கைது செய்தனர். தொடர்ந்து சரண்யா 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி சூலூர் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சரண்யா உட்பட நான்கு பேரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவன் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

0 கருத்துகள்: