வணிக சிலிண்டர் தட்டுப்பாடு : அண்ணாமலையார் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் முற்றிலும் விநியோகம் நிறுத்தம்...
விற்பனைக்காக தயார் செய்யப்படக் கூடிய லட்டு, முறுக்கு, அதிரசம், எள்ளு வடை ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் இன்று மாலையுடன் புளியோதரை, சக்கரை பொங்கல் ஆகிய அனைத்து பிரசாதம் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும்....
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினம்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை மிகவும் குறைக்கப்பட்டு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிலிண்டர் என விநியோகம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவிக்கப்பட்டு உள்ளது,
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலை நகரில் ஏற்கனவே சிறு குறு உணவகங்கள் மற்றும் மெஸ் போன்ற உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பொருத்தவரை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அதுமட்டும் இன்றி வருகின்ற பக்தர்களுக்கு முறுக்கு, எள்ளு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகள் 50 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் புளிசாதம் மற்றும் சக்கரை பொங்கல் போன்றவை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாகவே எண்ணெயில் தயார் செய்யக் கூடிய விற்பனை பிரசாதங்களான முறுக்கு, எள்ளு வடை, லட்டு, அதிரசம் போன்றவை முற்றிலும் விற்பனை நிறுத்தப்பட்டது.
புளி சாதம் மற்றும் சக்கரை பொங்கல் உள்ளிட்டவை மட்டும் விற்பனைக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய லட்டு பிரசாதம் கடந்த இரு தினங்களாகவே நிறுத்தப்பட்டு உள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் கடந்த மூன்று ஆண்டு காலமாக சாமி தரிசனம் முடித்து திருமஞ்சனம் கோபுர வீதி வழியாக வெளியே வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக முற்றிலும் சிலிண்டர்கள் ஏதும் கோவில் நிர்வாகத்திற்கு கேஸ் ஏஜென்சிகள் வழங்கப்படாததால் முன்பதிவு செய்யப்பட முடியாததால் இரண்டு நாட்களாகவே இலவச லட்டு பிரசாதம் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு தரிசனம் பக்தர்கள் இலவச லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளனர்.
ஆகவே வருகின்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக விநாயகம் செய்யக்கூடிய லட்டு பிரசாதத்தை எந்த விதமான தடையும் இன்றி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரித்த போது...,
வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இரு தினங்களுக்கு முன்பே இலவச லட்டு பிரசாதம் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி எண்ணெயில் தயார் செய்யக் கூடிய முறுக்கு, அதிரசம், லட்டு, எள்ளுவடை என விற்பனை செய்யக் கூடிய பிரசாதங்களும் ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், இன்று பிற்பகல் வரை மட்டுமே புளியோதரை மற்றும் சக்கரை பொங்கல் விநியோகம் செய்ய முடியும் எனவும், சிலிண்டர் இல்லாததால் முற்றிலுமாக அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலைக்குள் அனைத்து விதமான விற்பனை மற்றும் இலவச பிரசாதங்கள் எதுவுமே விற்பனை செய்ய முடியாது என தெரிவித்தனர்.
மேலும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைப்பதற்கு இந்து சமய அறநிலைத் துறை நிர்வாகத்திடம் கோவில் ஊழியர்கள் ஒப்புதல் கேட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளிடமிருந்து ன உத்தரவு வந்தால் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

0 கருத்துகள்: