ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 மே, 2026

  12 ஆண்டுகளுக்குப் பின் சவுடேஸ்வரி அம்மன் ‘கத்தி போடும் திருவிழா’; “வீசுக்கோ... தீசுக்கோ...” கோஷத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக் கடன் !!!

12 ஆண்டுகளுக்குப் பின் சவுடேஸ்வரி அம்மன் ‘கத்தி போடும் திருவிழா’; “வீசுக்கோ... தீசுக்கோ...” கோஷத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக் கடன் !!!

  கோவையில் 12 ஆண்டுகளுக்குப் பின் சவுடேஸ்வரி அம்மன் ‘கத்தி போடும் திருவிழா’; “வீசுக்கோ... தீசுக்கோ...” கோஷத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக் கடன் !!!

​மார்பிலும், முதுகிலும் கூர்மையான கத்திகளால் காயப்படுத்தி அம்மன் அழைப்பு:  அதிரவைத்த ‘ஆன்மீக’ ஆக்‌ஷன் !!!

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கத்தி போடும் திருவிழா, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக அரங்கேறியது. 

இந்த விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தேவாங்க குலப் பக்தர்கள், தங்களது உடம்பில் ரத்தம் சொட்டச் சொட்டக் கூர்மையான கத்திகளால் மார்பிலும், முதுகிலும் காயப்படுத்திக் கொண்டு அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்த நெஞ்சை உலுக்கும் காட்சிகள் கொங்கு மண்டலத்தையே அதிரவைத்து உள்ளது.

​கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தி போடும் திருவிழா, பல்வேறு காரணங்களால் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தக் கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

 இதன்படி, விழாவின் மிக முக்கிய நிகழ்வான சவுடேஸ்வரி அம்மன் அழைப்பு மற்றும் கத்தி போடும் வைபவம் இன்று அசாத்திய பக்திப் பெருக்குடன் தொடங்கியது.

 நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் (Bus Stop) அருகில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனைப் பாரம்பரிய முறைப்படி அழைத்து வரும் ஊர்வலம் புறப்பட்டது.

​இந்த ஊர்வலத்தின் போது, அம்மனின் குலவழக்கக் காவல்காரர்களாகக் கருதப்படும் வீரக்குமாரர்கள், கைகளில் பளபளக்கும் கூர்மையான கத்திகளை ஏந்தி அனல் பறக்கக் களம் இறங்கினர். அவர்கள் “வீசுக்கோ... தீசுக்கோ...” என்ற தங்களின் குலதெய்வ வீர கோஷங்களை விண் அதிரும் வண்ணம் எழுப்பியவாறு,  காற்றில் கத்திகளைச் சுழற்றித் தங்களது கைகள், மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் ‘டமால் டமால்’ எனக் வெட்டிக் கொண்டனர்.

 கூர்மையான கத்திகள் பட்டு உடம்பில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட, அணுவளவும் வலியைக் காட்டாமல் அம்மனை அவர்கள் பரவசத்துடன் ஊர்வலமாகத் தாங்கி வந்த ஆன்மீகக் காட்சி, அங்கு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

​இந்த அசாத்திய நேர்த்திக்கடன் ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த திருவிழாவைக் காண்பதற்காகக் கோவையின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து அம்மனைத் தரிசனம் செய்தனர். 

விழாவின் நிறைவாக, வந்திருந்த அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அசாத்தியப் பாதுகாப்பு மற்றும் சிறப்பான ஏற்பாடுகளை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்து இருந்தனர். 

12 ஆண்டுகளுக்குப் பின் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அரங்கேறிய இந்த வீரமிக்கக் கத்தி போடும் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.



திருச்செந்தூர் கோயிலில் முகமூடி அணிந்து அமைச்சர் திடீர் ஆய்வு : லஞ்சம் கேட்ட அர்ச்சகர்கள் சிக்கினர் !!!

திருச்செந்தூர் கோயிலில் முகமூடி அணிந்து அமைச்சர் திடீர் ஆய்வு : லஞ்சம் கேட்ட அர்ச்சகர்கள் சிக்கினர் !!!

 திருச்செந்தூர் கோயிலில் முகமூடி அணிந்து அமைச்சர் திடீர் ஆய்வு : லஞ்சம் கேட்ட அர்ச்சகர்கள் சிக்கினர் !!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சாதாரண பக்தரைப் போல முகமூடி அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சிறப்புத் தரிசனத்திற்காக ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களை ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்து உள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பொறுப்பேற்று உள்ளார். இவர் பதவியேற்றது முதல் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசேஷ மற்றும் சிறப்புத் தரிசனங்களுக்காகப் பக்தர்களிடம் அர்ச்சகர்களும், ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

 இப்புகார்களின் உண்மைத் தன்மையை அறிய, இன்று அதிகாலை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோயில் அதிகாரிகள் யாருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், தனது காரைக் கோயில் வளாகத்திற்கு வெளியே தூர நிறுத்தினார். பின்னர், சாதாரண டி-சர்ட் மற்றும் முகமூடி அணிந்து, தனது உதவியாளருடன் ஒரு சாதாரண பக்தரைப் போலக் கோயிலுக்குள் சென்றார்.

அங்கு விரைவாகச் சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்குமாறு தன் உதவியாளரை அர்ச்சகர்களிடம் அனுப்பினார். வந்து இருப்பது அமைச்சர் என்று தெரியாமல், "தலைக்கு தலா ரூ. 1,000 வீதம் நான்கு பேருக்கு மொத்தம் ரூ.4,000 கொடுத்தால் உடனே விஐபி (VIP) தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறோம்" என்று அங்குள்ள அர்ச்சகர்கள் பேரம் பேசி உள்ளனர்.

தன்னிடம் தற்போது கைவசம் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர், அங்கு இருந்த அர்ச்சகரின் கூகுள் பே (G-Pay) எண்ணிற்கு ரூ. 4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பி உள்ளார். பணம் கணக்கில் ஏறியதை அர்ச்சகர்கள் உறுதி செய்த அடுத்த கணமே, தனது முகமூடியைக் கழற்றித் தான் யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ஆதாரத்துடன் அர்ச்சகர்களையும், அதற்குத் துணையாக இருந்த ஊழியர்களையும் அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்ததால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஊழல் அராஜகத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களைக் கோயில் அலுவலகத்திற்கு வரவழைத்த அமைச்சர், அவர்களிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலின் சொத்துக்கள், மாதாந்திர வருவாய் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தற்போது தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த விரிவான ஆய்வுப் பணிகள் நிறைவடைய நாளை பிற்பகல் ஆகும் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலில் பல காலமாக நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து, துறைச் செயலாளருடன் அமைச்சர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 28 மே, 2026

ஈகை பண்பும் தியாகமும் தழைத்தோங்க ‘மாஸ்’ தொழுகை! கரும்புக்கடை பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை ; கோவையில் பக்ரீத் திருநாள் சிறப்பு பிரார்த்தனை!!!

ஈகை பண்பும் தியாகமும் தழைத்தோங்க ‘மாஸ்’ தொழுகை! கரும்புக்கடை பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை ; கோவையில் பக்ரீத் திருநாள் சிறப்பு பிரார்த்தனை!!!

ஈகை பண்பும் தியாகமும் தழைத்தோங்க ‘மாஸ்’ தொழுகை! கரும்புக்கடை பள்ளியில் 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை ; கோவையில் பக்ரீத் திருநாள் சிறப்பு பிரார்த்தனை!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொழுகை ; ஏழை - எளிய மக்களுக்கு ‘குர்பானி’ வழங்கி இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்!

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் ஆட்டிறைச்சிகளை தானமாக வழங்குவார்கள் அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தார் போல் ஏழை எளிய மக்களுக்கு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும். 

அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் அனைவரிடமும் ஈகை பண்பும் மனிதநேயமும் மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 25 மே, 2026

கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

 கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த மர்ம ஆசாமிகள் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

கோவை அடுத்த நீலாம்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று  காலை வழக்கம் போல் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்பொழுது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கொடுத்த தகவலின் பெயரில் நீலாம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் நம்பர் பிளேட் இல்லாத உயர்ரக மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வருவதும் அவர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றிய மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்த நபர்கள் யார் ? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்த சில நாட்களிலேயே கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 18 மே, 2026

தி.மு.க தோல்வியை மறைக்கவே சனாதனப் பேச்சு" ; கோவையில் உதயநிதிக்கு எதிராக ‘இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் !!!

தி.மு.க தோல்வியை மறைக்கவே சனாதனப் பேச்சு" ; கோவையில் உதயநிதிக்கு எதிராக ‘இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் !!!

 தி.மு.க தோல்வியை மறைக்கவே சனாதனப் பேச்சு" ; கோவையில் உதயநிதிக்கு எதிராக ‘இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் !!!

சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் ; எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை - இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் !!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர் வாழ்த்தி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சிவானந்த காலனி, பவர் ஹவுஸ் நடைபெற்ற கண்ணன் ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், பா.ஜ.க தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். சமாதானத்தை ஒழிப்பேன் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் பேசும்போது ;

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்து உள்ளதாகவும், தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஆக இருந்த மு க ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார் என்றும், இந்த தோல்வி மறைப்பதற்காக சட்டமன்றத்தில் பேசுகின்ற போது அந்த கட்சியினுடைய எதிர்க்கட்சியின் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசி உள்ளார். அதை பேச வேண்டிய அவசியம் இல்லை, சட்டசபையில் அடுத்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் மக்களுக்கு என்ன ? செய்ய வேண்டும் என்பதை பேசாமல், பிரச்சனையை கிளப்பி உள்ளதாகவும், காரணம் என்னவென்றால் தோல்வியை மறைப்பதற்காக என்றும், எப்பொழுதெல்லாம் தி.மு.க விற்கு தோல்வி வருகிறதோ, ஒன்று இந்தி எதிர்ப்பு எடுப்பார்கள் அல்லது இந்து எதிர்ப்பு எடுப்பார்கள். ஏற்கனவே உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு உள்ளதாகவும், கர்நாடகா மாநிலத்தில் ஒரு லட்ச ரூபாய் கட்டி ஜாமீனில் வெளியே வந்து உள்ளதாக கூறியவர், அதனால் சட்டசபையில் ஒளிந்து கொண்டு பேசுவதாகவும், மக்கள் மத்தியில் இன்று கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறியவர், நாடு முழுவதும் இந்த பிரச்சனை எழுந்து உள்ளது என்றும், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், உதயநிதி கைது செய்ய வேண்டும் என்றும், எதற்காக வேண்டி இப்பொழுது பேசுகிறார். இந்த ஆட்சி என்ன நடக்கிறது, ஆட்சிக்கு வழி விட வேண்டும் என்றும், தோல்வியை பொறுப்பேற்காமல் அதற்கு மாறாக மக்கள் மத்தியில் ஒரு வன்மத்தை கிளப்ப வேண்டும், மத துர்பிஷரோகம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வதாகவும், உடனடியாக இதை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும், உடனடியாக முதலமைச்சராக அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தவர், இல்லை என்றால் இந்த போராட்டம் தமிழக முழுவதும் விரிவடையும் என்றும், உதயநிதி எங்கே சென்றாலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.


தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் முஸ்தபா விஷயம் தெரியாமல் கூறுகிறார அல்லது கொள்கையா என்பது தெரியவில்லை என்றும், அதற்கு முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர், பின்னர் அனைத்து மதங்களும் தேவை என்று கூறியுள்ளார் எனவே, அதற்கு முதல்வர் விளக்கம் தர வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் எம்.எல்.ஏ மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ என கூறினார்.