சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை நம்பிக்கை !!!
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்தது முடிவுக்காக காத்து இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் சாதனை, சாதனை என ட்வீட் செய்து வருகிறார்.
ஆனால் மக்கள் வேதனை, வேதனை எனக் கூறி வருகின்றனர். இன்று கரூர் அருகே நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பெண்களின் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாக இருந்து கொண்டு இருக்கிறது. மக்களுக்கு சுதந்திரம்,பாதுகாப்பு கிடைக்க வேண்டும்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சி குறித்து ட்வீட் செய்து உள்ளார். ஆனால் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு கொண்டு வந்து உள்ள அடிப்படை வசதிகள் சேர்ந்து தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் விமான நிலையம், துறைமுகம், சாலைகளை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முதலீடுகளை செய்து உள்ளது.
ஏற்கனவே தி.மு.க ஆட்சி செய்த போது எவ்வளவு இலக்கை இங்கு கொண்டு வந்தீர்களா ? என்பதை சிந்திக்க வேண்டும். தி.மு.க அரசு வாங்கிய கடன் குறித்து ஏன் பேசவில்லை. வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி கடனை வாங்கி விட்டு பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியாவுடன் போட்டி போடுகிறேன் என கூறினால் எப்படி ? மற்ற மாநிலங்களும் வளர்ந்து வருகிறது. அதை புறந்தள்ளி விட்டு செல்வது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் குழந்தைகளை அவரின் பெற்றோரிடம் அடம் பிடித்து வாக்களிக்க வேண்டும் என கூறுவதெல்லாம் தவறு. குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு விதியாக இருக்கும் பொழுது அவர் கூறியது குழந்தைகள் மனதில் ஒரு தவறான கருத்தை விதைக்கும். குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். தனது பேச்சால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை தம்பி விஜய் உணர வேண்டும். இது அனைத்தும் சுயநல அரசியலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறதோ என பயமாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்னால் நான் எந்த அடையாளத்தையும் காண்பிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தேர்தலுக்கு பிறகு சில அடையாளங்களை காண்பிக்கிறார். மற்றவர்களை சாமி கும்பிட வைத்து அதன் பலனை அனுபவிக்கலாம் என்று நினைக்காமல், விஜய் நேரடியாக சாமி கும்பிடுகிறார். அதை அந்த வகையில் நான் அவரை பாராட்டுகிறேன். தற்போது விஜய் ஆன்மீக தேடலுக்கு செல்கிறார். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திரைப்பட சூட்டிங் இருக்கு இடம் தேட போவாரா ? என்பது சந்தேகமாக உள்ளது" என்றார்.

0 கருத்துகள்: