லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2026

திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்களா? மாவட்ட ஆட்சியர் பதில் !!!

திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்களா? மாவட்ட ஆட்சியர் பதில் !!!

 திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிந்த தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்களா? மாவட்ட ஆட்சியர் பதில் !!!

தற்காலிகமாக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் தொழிலாளர்களை அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அம்மோனியா வாயு கசிந்தது. இந்த விபத்தில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில், 15 வயது சிறுமிகள் இருவரும் அடங்குவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 24) திருவள்ளூர் ஆட்சியர் கவிதா, விபத்து நடைபெற்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். இறால் ஏற்றுமதி செய்யும் பகுதி உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு கூட்டம் நடத்தினார். அத்துடன், தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் கவிதா அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொழிற்சாலையில் உள்ள 200 டன் இறால்களை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதில், 15 வயது சிறுமிகள் இருவரும் அடங்குவர் என்றும் தகவல் கிடைத்து உள்ளது. இதுகுறித்து ஆதார் கார்டு அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும், தற்போது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுவரை அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு தரப்பிலேயே செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை என கூறுவது தவறான கருத்து. இதேபோல், ஆட்சியரை சந்திக்க விடவில்லை என கூறுவதும் தவறானது" என தெரிவித்தார்.

அரசு தரப்பில் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தயக்கம் காட்டுவதாகவும், இங்கேயே மாற்று வேலை ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திங்கள், 15 ஜூன், 2026

 15 நிமிடம் 2 வினாடிகள் இடைவிடாத பாரம்பரிய இசைப் நிகழ்ச்சி” ;  88 நாதஸ்வர, தவில் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘யுவா உலக சாதனை’- “கும்மி, கோலாட்டத்துடன் நடனம் !!!

15 நிமிடம் 2 வினாடிகள் இடைவிடாத பாரம்பரிய இசைப் நிகழ்ச்சி” ; 88 நாதஸ்வர, தவில் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘யுவா உலக சாதனை’- “கும்மி, கோலாட்டத்துடன் நடனம் !!!

 15 நிமிடம் 2 வினாடிகள் இடைவிடாத பாரம்பரிய இசைப் நிகழ்ச்சி” ;  88 நாதஸ்வர, தவில் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘யுவா உலக சாதனை’- “கும்மி, கோலாட்டத்துடன் நடனம் !!!

நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடன் நாட்டுப்புறக் கலைகளை இணைத்து 15 நிமிடம் 2 வினாடிகள் தொடர்ச்சியாக இசை வாசித்து நடனமாடி புதிய உலக சாதனை படைத்துள்ளனர் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தினர்.

சூலூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில், 88 நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் இடைவிடாது 15 நிமிடம் 2 வினாடிகள் இசை வாசித்தனர். அதே நேரத்தில் கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் சோர்வின்றி தொடர்ந்து நடனமாடி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.

யுவா  உலக சாதனை நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இந்த உலக சாதனை முயற்சி, தமிழரின் பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் மகத்துவத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தது. இசையின் இனிமை, கலையின் கம்பீரம் மற்றும் பண்பாட்டுப் பெருமை ஆகியவை ஒன்றிணைந்து தமிழர் பண்பாட்டின் வளத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய நிகழ்வாக அமைந்தது.

நாதஸ்வரம் – தவில் இசை நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ஆண்டவன் இந்நிகழ்வை சிறப்பாக முன்னின்று வழிநடத்தினார். கோவை குணசித்திர நடிகை (இந்தியன் 2, கள்வன் ...)மீனா துணைத் தலைவராகப் பொறுப்பேற்று நிகழ்வின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு வழங்கினார்.

யுவா உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் ஆர். சுரேஷ் மற்றும் பால்பாண்டி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.