மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2026

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை ; மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பலி !!!

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை ; மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பலி !!!

 கோவை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை ; மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பலி !!!

கோவை மாவட்டம், அன்னூர், துடியலூர் பகுதிகளின் கன மழை பெய்தது. அப்பொழுது மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கோவை மாவட்டம், துடியலூர், குப்பநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், கஸ்தூரி பாளையம், கவுண்டம்பாளையம், ஜி.என் மில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் வடமதுரையில் இருந்து பன்னீர்மடை செல்லும் சாலை உட்பட பல முக்கிய சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் குப்பநாயக்கன்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், சுல்தானிபுரம், எஸ்.கே.வி நகர், நால்வர் நகர், கஸ்தூரி நாயக்கன்பாளையம், சோமியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஊராட்சி அலுவலகம் பின்புறம் ஆறு மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதனால் மின் கம்பிகள் அருந்தன. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டதால், அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதே போல் வால்பாறை பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், பத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ராம் வாலி கேவாட். இவர் கோவை அடுத்த காரமடை, அன்னூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் தங்கி பணி புரிந்து வருகிறார். இவருடைய மகன் அஜிட்குமார் வயது 20, இவர் அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி மாசாண்டிபாளையத்தில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில் கடந்த 15 நாட்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 6:00 மணி அளவில் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அப்பொழுது குளிர்பான நிறுவனத்தில் சோடா பாட்டில்களை அஜிட்குமார் கழுவிக் கொண்டு இருந்தார். இதற்கு இடையே திடீரென மின்னல் தாக்கியதில் அஜிட்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அதை பார்த்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அஜிட்குமாரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்து மருத்துவர்கள் அஜிட்குமார் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தை நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை : எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது சரிந்த ராட்சத மரம் - தேர்வு விடைத் தாள்கள் அறைக்குள் நீர் கசிவு !!!

கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தை நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை : எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது சரிந்த ராட்சத மரம் - தேர்வு விடைத் தாள்கள் அறைக்குள் நீர் கசிவு !!!

 கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தை நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை : எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது சரிந்த ராட்சத மரம் - தேர்வு விடைத் தாள்கள் அறைக்குள் நீர் கசிவு !!!

 கோவையில் நேற்று மாலை பெய்த திடீர் பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த ராட்சச மரம் கீழே விழுந்தது, விடைத்தாள் அறைக்குள் நீர் கசிவு ஏற்பட்டது.

 கோவை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் பல்கலைக் கழக வளாகத்தின் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து உள்ளன. குறிப்பாக, பல்கலைக் கழகத்தின் பிரதான நுழைவாயில், சுற்றுச்சூழல் அறிவியல் கட்டிடம் மற்றும் எம்.பி.ஏ (MBA) துறை ஆகிய இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் எம்.பி.ஏ கட்டிடத்தின் முதல் தளத்தின் மீது ஒரு பெரிய மரம் அடியோடு சாய்ந்து விழுந்ததில், அதன் கூரைத் தகடுகள் சுக்குநூறாக உடைந்து, மரத்தின் கிளைகள் துறை மண்டபத்திற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.

​இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு மேல் நடந்ததால், கட்டிடத்திற்குள் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

 இருப்பினும், கட்டிடத்திற்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.

 இதற்கு இடையே, மாணவர்களின் விடைத் தாள்கள் மிகப்பத்திரமாக வைக்கப்பட்டு உள்ள தேர்வுப் பிரிவு கட்டிடத்தின் அறையிலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு உள்ளன. இதனால் விடைத்தாள்கள் ஏதேனும் வேதமடைந்து உள்ளதா ? என்ற அச்சம் மாணவர்கள் இடையே எழுந்து உள்ளது.

​இந்த சூழல் குறித்துப் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆர். ராஜவேல் அவர்களிடம் கேட்டபோது,

 இன்று சனிக்கிழமை காலை முதலே பல்கலைக் கழக வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், விழுந்த மரங்களால் கட்டிடங்களுக்கு ஏற்பட்டு உள்ள கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் தேர்வுத் துறை கசிவுகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, உரிய தற்காப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்து உள்ளார்.

வெள்ளி, 15 மே, 2026

கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - அப்பநாயக்கன்பாளையத்தில் 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம்!

கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - அப்பநாயக்கன்பாளையத்தில் 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம்!

 கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழை - 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம் !!!

​ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெருக்கெடுத்த வெள்ளம்; மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிப்பு !!!

​கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட வேப்பமரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து, 

​தமிழகத்தில் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மாலை சுமார் 4 மணி அளவில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம் மற்றும் இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ‘மெகா’ சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

​சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கு தடையின்றிக் கொட்டித் தீர்த்த மழையினால், முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

200 வருட மரம் விழுந்து விபத்து:

மழையின் போது வீசிய பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்த சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று திடீரென அடியோடு முறிந்து அருகில் இருந்த வீட்டின் மீதும், நிறுத்தப்பட்டு இருந்த கார் மீதும் ‘மளமளவென’ சரிந்தது. இந்த விபத்தில் காரும், வீட்டின் ஒரு பகுதியும் நசுங்கிச் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால், அப்பநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியிலும், மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியிலும்  ஈடுபட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திர வெயிலுக்கு மத்தியில் கோவையில் பெய்த இந்த திடீர் கனமழை வெப்பத்தைத் தணித்தாலும், பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.