வெள்ளி, 27 மார்ச், 2026

கோவை மத்திய சிறை கைதிகளுக்கு ஏற்பட்ட மோதல் : தடுக்கச் சென்ற காவலருக்கு மிரட்டல் - கைதி மீது வழக்கு !!!

SHARE

 கோவை மத்திய சிறை கைதிகளுக்கு ஏற்பட்ட மோதல் : தடுக்கச் சென்ற காவலருக்கு மிரட்டல் - கைதி மீது வழக்கு !!!

கோவை மத்திய சிறையில் 2,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் நசீர் என்பவர் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர் கழிவறையை பயன்பாட்டுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கும், மற்றொரு விசாரணை கைதியான முத்துப்பாண்டி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்பொழுது அவர் முத்துப்பாண்டியை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனை கவனித்த காவலர் மகேந்திரன் என்பவர் ஓடிச் சென்று ஏன் ? இப்படி செய்கிறாய் என்று கேட்டு உள்ளார்.

அதற்கு நசீர் காவலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் நசீர் மீது ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: