வியாழன், 26 மார்ச், 2026

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !!!

SHARE

 டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !!!

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இன்று கூட அமெரிக்கா ஈரானின் நம்பகத்தன்மை வாய்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அறிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்து பங்குச் சந்தை உயர தொடங்கி விட்டன, தங்கம் , வெள்ளி விலைகளும் உயர்ந்தன. ஒருவழியாக ஈரான் போர் முடிவை நோக்கி செல்கிறது என பல்வேறு நாடுகளின் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் ஈரான் நாட்டு ராணுவம் இதில் குண்டை தூக்கி போட்டு உள்ளது.

டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறும் நிலையில் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என ஈரான் ராணுவம் திட்ட வட்டமாக மறுத்து உள்ளது. இது உலக அளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்ப் கூறுவது உண்மையா அல்லது ஈரான் சொல்வது உண்மையா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து இருக்கிறது.

திங்கட்கிழமை அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது, இதன்படி ஈரான் மீது ஐந்து நாட்கள் தாக்குதலை நிறுத்தப் போகிறோம் என டிரம்ப் கூறியிருந்தார் உடனடியாக ஈரான் அப்படி எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் நடக்கவில்லை என அறிவிப்பு வெளியிட்டது. இத்தகைய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, ஈரான் மேற்கொண்ட அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டோம் என வாக்குறுதி தந்திருக்கிறது என கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: