செவ்வாய், 28 ஏப்ரல், 2026

தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை !!!

SHARE

 தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை !!!

தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்​களில் வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி காலை 8 மணிக்​குத் தொடங்​கும். தபால் வாக்​கு​கள் எண்ணி முடிக்​கப்​பட்ட பிறகே, மின்​னணு இயந்திரங்​களில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இத்​தேர்தலில் மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்கு செலுத்​தி​ உள்​ளனர் என்று தலை​மைத் தேர்தல் அதி​காரி அர்ச்சனா பட்​நாயக் தெரிவித்​து உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. அரசி​யல் கட்சி வேட்பாளர்​கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்​கள் போட்டியிட்​டு உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்​கத் தகுதி பெற்​றிருந்த நிலை​யில், 4.88 கோடி வாக்​காளர்​கள் (85.10 சதவீதம்) வாக்களித்​தனர்.

தமிழக தேர்​தல் வரலாற்​றில் கடந்த 2011 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதிவான 78 சதவீத வாக்குப்​ ப​திவு​ தான் அதிகபட்​ச​மாக இருந்​தது. இந்த நிலை​யில், சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​யின்​ போது, உயிரிழந்​தவர்​கள், முகவரி மாறிய​வர்​கள், இரட்​டைப் பதிவு உள்ளவர்​களின் பெயர்கள் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்கப்​பட்​டதை தொடர்ந்து, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்​தது.

அதி​கபட்​ச​மாக கரூரில் 93.41 சதவீத​மும், வீரபாண்​டி​யில் 93.36 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வாகின. 45 தொகுதிகளில் 90 சதவீதத்​துக்கு மேல், 151 தொகு​தி​களில் 80 சதவீதத்​துக்கு மேல், 37 தொகு​தி​களில் 70 சதவீதத்​துக்கு மேல் வாக்கு​கள் பதி​வாகி​ உள்ளன. பாளையங்கோட்டை தொகு​தி​யில் மட்​டுமே வாக்​குப்​ ப​திவு 70 சதவீதத்​தை​ விட குறைவாக (68.97 சதவீதம்) பதி​வானது.

இத்​தேர்​தலில் 75,064 வாக்​குச்​சாவடிகளில் 1.06 லட்​சம் வாக்​குப்​ பதிவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்திரங்​கள் மற்​றும் விவி​பாடி இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​கள் அனைத்தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாதுகாப்பாக வைக்கப்பட்​டு உள்​ளன.

இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டு உள்​ளது. தேர்​தல் நடத்தும் அலு​வலர்​கள் தின​மும் 2 முறை​யும், மாவட்​டத் தேர்​தல் அதிகாரி​கள் ஒரு​முறையும் நேரில் பார்வை​யிட வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டு உள்​ளது. சி.சி.டி.வி மூல​மாக​வும் பாது​காப்பு அறை​கள் 24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன. சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்தல் அதி​காரி அலுவல​கத்​தில் இருந்தும் கேமரா காட்​சிப் பதிவு​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வருகின்றன.

இந்​நிலை​யில், மே 4-ம் தேதி நடை​பெற உள்ள வாக்கு எண்​ணும் பணி தொடர்​பாக தமிழக தலைமைத் தேர்​தல் அதிகாரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​யில் ஈடுபடுத்​தப்​பட்ட மொத்தம் 3.60 லட்​சம் அலு​வலர்​களில், வாக்காளர்​களாக பதிவு செய்​து, வாக்​களிக்க விண்​ணப்​பித்த 2.88 லட்சம் அலு​வலர்​கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்​து உள்​ளனர்.

தேர்​தல் பணிக்​காக நியமிக்​கப்​பட்ட காவல் துறை சார்ந்த அலுவலர்கள், மற்ற தேர்தல் பிரிவு​களில் பணி புரிந்த அலுவலர்கள், தேர்​தல் கண்​காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்​தம் 3.36 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களாக​வும், 1.10 லட்​சம் அலு​வலர்​கள் தேர்​தல் பணி சான்​றிதழ் பெற்று நேரடி​யாக வாக்குச்​ சாவடி​யிலும் வாக்​களித்​து உள்​ளனர்.

படிவம் 12 - டி விண்ணப்பத்​தின் அடிப்படை​யில், மாற்​றுத் திற​னாளி​கள், 85 வயதுக்கு மேற்​பட்ட முதிய​வர்​கள் என மொத்தம் 1.73 லட்​சம் வாக்​காளர்​கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்​து உள்​ளனர். இதுத​விர, ராணுவத்தினர், பாதுகாப்பு படை​யினர் உள்​ளிட்ட சேவைத் துறையில் உள்ள 18 ஆயிரம் பேர் வாக்களித்து உள்​ளனர். இவர்​களது தபால் வாக்குகள் மே 4-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்​படும். அந்த வகையில், மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​து உள்ளனர்.

இந்​நிலை​யில், வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி, மாநிலம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் சரி​யாக காலை 8 மணிக்கு தொடங்​கும்.

ஒவ்​வொரு மையத்​தி​லும் ஒரு பகு​தி​யில் தபால் வாக்​கு​களும், மற்​றொரு பகு​தி​யில், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதிவான வாக்​கு​களும் அதற்​குரிய மேஜைகளில் எண்​ணப்​படும். இதை மேற்​பார்​வை​யிட உதவி தேர்​தல் நடத்​தும் அலுவலர் நிலை​யில் அதி​காரி​கள் தனித்​தனியே நியமிக்கப்படுவார்​கள். ஒரு மேஜைக்கு 500 வாக்கு​கள் என்ற விகிதத்தில் தபால் வாக்கு​கள் எண்​ணப்​படும்.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்​ணும் பணி தொடங்​கும். மின்னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதிவான வாக்​கு​கள் எண்​ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடை​பெறும். எனினும், இதன் கடைசி சுற்​று வாக்​கு எண்​ணும்​ பணி, தபால்​ வாக்​கு​கள்​ எண்​ணி முடிக்​கப்​பட்​ட பிறகு​ தான்​ தொடங்​கும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: