“சினிமா முகம் இல்லாத ஒரு மாஸ் லீடர்” ; தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் மாற்றம் நிச்சயம் - கோவை ஏர்போர்ட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி !!!
“அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்துப் புத்தகத்திலேயே எழுதி விட்டேன்”: பெங்களூரில் இருந்து கோவை வந்த துக்ளக் ஆசிரியர் பேட்டி !!!
சினிமா துறையில் இல்லாமல் ஒரு பெரிய தலைவர் உருவாகி இருக்கின்றார் தமிழகத்தில் மாற்றம் வரும் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூருவில் இருந்து கோவைக்கு துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், அண்ணாமலை துவங்கி இருக்கும் புதிய இயக்கம் குறித்த கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,
சினிமா துறையில் இல்லாமல் ஒரு பெரிய தலைவர் உருவாகி இருக்கின்றார் எனவும் ,
தமிழகத்தில் மாற்றம் வரும் என சிந்தனை செய்து இருக்கிறேன் , அதை புத்தகத்திலும் எழுதி இருக்கின்றேன் இதற்கு மேல் சொல்ல முடியாது என குருமூர்த்தி பதில் அளித்தார்.

0 கருத்துகள்: