செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

SHARE

 கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 160 அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடியை ஏந்தி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  பேரணி நடைபெற்றது. 

நீதிமன்ற அனுமதியுடன் நடந்த பிரம்மாண்ட பேரணி:

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசப்பற்றையும் தேசியக் கொடியின் பெருமையையும் வலியுறுத்தும் வகையில் பா.ஜ.க சார்பில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக இந்தப் பேரணிக்குக் கோவை மாநகரக் காவல் துறை தடை விதித்து இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி உத்தரவைப் பெற்ற பின்னரே பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

160 அடி தேசியக் கொடியுடன் அணிவகுத்த தொண்டர்கள்:

சாய்பாபா காலனி பகுதியில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், சுமார் 160 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற அனைவரும் 'பாரத் மாதா கி ஜே' போன்ற உணர்ச்சிமிக்க நாட்டுப்பற்று முழக்கங்களை அதிரடியாக எழுப்பியவாறு  பேரணியில் பங்கேற்றவர்கள் நீண்ட தேசியக் கொடியை கைகளில் பிடித்தபடி, நாட்டுப்பற்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர், கண்ணைக் கவரும் வகையில் அணிவகுத்துச் சென்றனர்.

சிந்தாமணியில் நிறைவு - பலத்த போலிஸ் பாதுகாப்பு:

சாய்பாபா காலனியில் துவங்கிய இந்த  பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வடகோவை சிந்தாமணி பகுதியில் நிறைவடைந்தது. சாலை முழுவதும் 160 அடி நீளக் கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்ற காட்சி அப்பகுதி பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் பெரிதும் கவர்ந்தது.

பேரணி நடைபெற்ற சாய்பாபா காலனி முதல் வடகோவை சிந்தாமணி வரையிலான வழிநெடுகிலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: