வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

SHARE

 கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

அமெரிக்காவில் உள்ள கூகுள் டீப்மைண்ட் – கேகிள் உலகளாவிய போட்டியில் முதலிடம் பெற்று 24 லட்சம் பரிசு வென்ற கோவையைச் சேர்ந்த ஏ ஐ ஆராய்ச்சியாளர் சென்னை ஐ ஐ டி மாணவர் அர்ஜுன் திலக் மற்றும் இணை ஆசிரியர் ராம்குமார் ஆகியோரை வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட, சென்னையில் இயங்கி வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளரும், ஐஐடி சென்னை மாணவருமான அர்ஜுன் திலக் மற்றும் ஈராஸ் இன்னோவேஷன் ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் ஆகியோர் உருவாக்கிய கேஜ் என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டு கருவி, கூகுள் டீப் மைண்ட் ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காகுள் இணைந்து நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு அமெரிக்க டாலர் 25,000 (சுமார் ரூ.24 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஏஜிஐ-ஐ நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல் : அறிவாற்றல் திறன்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஹேக்கத்தானை உலகின் மிகப்பெரிய ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான கூகுல் டீப் மைண்ட், மற்றும் போட்டித் தளமான காகிள் மூலம் நடத்தியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) பரிசுத் தொகைக்காக போட்டியிட்டனர். இதனை 20 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

மாணவர் அர்ஜின் திலக்கின் கண்டுபிடிப்பான கேஜ் என்ற இந்த மதிப்பீட்டு முறை, ஒரு ஏஐ மாடலுக்கு "தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ளும் திறன் உள்ளதா? அதற்கேற்ப மனித உதவியை நாடுகிறதா?" என்பதை சோதிக்கிறது.

இந்த நிலையில் மாணவரின் சாதனைகளைக் கேள்விப்பட்டு வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்தில் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம், அவர்கள் உருவாக்கிய ஏஐ பென்ச்மார்க் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்து, மடிக்கணினியில் அதன் தொழில்நுட்ப செயல்முறைகளையும் பொறுமையாகக் கேட்டு புரிந்துகொண்டார். இளைஞர்களின் சாதனையை மனதாரப் பாராட்டிய அண்ணாமலை, இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   


இந்த ஆராய்ச்சி ஐஐடி பாட்னாவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: