ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சுதந்திர தினக் கொண்டாட்டம் : குழந்தைகளைக் கவர சோட்டா பீம் கார்ட்டூன் மூவர்ணப் பொருட்கள் - ஆர்வம் காட்டும் மாணவர்கள் & ஆசிரியர்கள் !!!

SHARE

 சுதந்திர தினக் கொண்டாட்டம் : குழந்தைகளைக் கவர சோட்டா பீம் கார்ட்டூன் மூவர்ணப் பொருட்கள் - ஆர்வம் காட்டும் மாணவர்கள் & ஆசிரியர்கள் !!!

கோவை, டவுன்ஹால் கடைகளில் குவியும் சுதந்திர தின அலங்காரப் பொருட்கள் : தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் பெருமிதம் !!!

 நாட்டின் 80-வது சுதந்திர தின விழா விரைவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் குழந்தைகளைக் கவரும் வகையில் 'சோட்டா பீம்' போன்ற பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. இவற்றை ஆசிரியர்களும், குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகரின் முதன்மை வர்த்தகப் பகுதியான டவுன்ஹால் கடைகளில், தேசியக் கொடியின் மூவர்ணத்தில் வண்ணமயமான தோரணங்கள், பேட்ஜ்கள், குடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனைக்காகப் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, இந்த ஆண்டு புதுமையாகக் குழந்தைகள் அதிகம் விரும்பும் 'சோட்டா பீம்' போன்ற முன்னணி கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தேசியக் கொடியை ஏந்தி நிற்பது போன்ற படங்களும், தோரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. 

"எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவை மிகக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அதற்காகப் பொருட்கள் வாங்க கோவை டவுன்ஹால் பகுதிக்கு வந்தோம். இந்த ஆண்டு தோரணங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் மிகவும் புதுமையாகவும், நவீனமாகவும் வந்து உள்ளன.

சிறார்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும் போது, குழந்தைகள் மிக எளிதாகத் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தையும், அதன் பெருமையையும் புரிந்து கொள்வார்கள். கடைகள் முழுவதும் மூவர்ணத்தில் காட்சி அளிப்பது காண்போரைக் பரவசப்படுத்துகிறது.

 பள்ளிகளிலும் மூவர்ணக் கொடியின் வண்ணங்களுக்கான அர்த்தங்களை மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறோம்.

 தற்போதைய தலைமுறைச் சிறுவர்கள் தேசப்பற்றையும், கொடியின் பெருமையையும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர்" எனக் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களை அலங்கரிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் டவுன்ஹால் பகுதியில் திரண்டு வந்து பொருட்களை உற்சாகமாக வாங்கிச் செல்வதால் வியாபாரம் சுடர்பிடித்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: