அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

குழந்தைகள் வார்டில் நெகிழ்ச்சி சம்பவம்: பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத் குமாரும் பங்கேற்பு!

 கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது குழந்தைகள் வார்டில் இருந்த சிறுமி ஒருவர் அமைச்சருடன் சுவாரசியமாக உரையாடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் கோவைக்கு வருகை தந்து இருந்தனர்.

இந்நிகழ்வுகளின் இடையே, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்குத் திடீரெனச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு இருந்த வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டை ஆய்வு செய்ய அமைச்சர் சென்ற போது, அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அச்சிறுமி எவ்வித தயக்கமுமின்றி, அமைச்சரிடம் மிகவும் மழலை மொழியில் உற்சாகமாகப் பேசினார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த அமைச்சர், அவருக்கு அளித்துவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அச்சிறுமிக்கு ஆறுதலும் அன்பும் தெரிவித்தார்.

 அமைச்சரும் சிறுமியும் அன்போடு பேசிக்கொண்ட இந்த அழகான தருணம் அங்கு இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது.

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

 "10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

"10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

வால்பாறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு!

​அரசுப் போக்குவரத்து இயக்கக ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற ரேவா சங்க ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களுக்காக ரேவா சங்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA Hike) மற்றும் நிலுவைத் தொகையான அரியர்ஸ் (Arrears) வழங்கிட வேண்டும் என ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கடந்த ஆட்சி காலத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

​இருப்பினும், முந்தைய ஆட்சியாளர்களால் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இழுபறியாகவே நீடித்து வந்ததால், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் சிரமத்திற்கும் ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் பொறுப்பேற்று உள்ள புதிய தமிழக அரசின் கவனத்திற்கு ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் இக்கோரிக்கைகளை நேரில் கொண்டு சென்று தீவிரமாக வலியுறுத்தினர்.

 ஓய்வூதியதாரர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழக அரசு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சுமார் 10 ஆண்டு கால பணப் பலன்களை வழங்க முன்வந்தது.

​இதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் ரேவா சங்கத்தின் வால்பாறை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 வால்பாறை கிளைச் சங்கத் தலைவர் நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு கால நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த தமிழக அரசுக்கும், இதற்குத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு காணத் துணை புரிந்த ரேவா சங்க மாநில நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துச் சிறப்பாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


​இக்கூட்டத்தில் ரேவா சங்கச் செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் கருணாநிதி, துணைத் தலைவர்கள் சந்திரன், கல்யாணராஜ், ராமன், துணைச் செயலாளர்கள் தங்கராஜ், ஜெபக்கனி, செல்வக்குமார், சின்னச்சாமி, மத்திய சங்க நிர்வாகிகள் சின்னப்பன், மாரியப்பன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

முதலமைச்சரின் புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி வைரலாகும் காட்சி!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காலையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேத்துப்பட்டு நகர தவெக சார்பில் நடைபெற்ற விலையில்லா விருந்தகத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.

மூதாட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.