திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் காலையில் விலையில்லா விருந்தகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேத்துப்பட்டு நகர தவெக சார்பில் நடைபெற்ற விலையில்லா விருந்தகத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டி ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தியுள்ளார்.
மூதாட்டியின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

0 கருத்துகள்: