ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

அரசு அலுவலகமே பாராக மாறிய அவலம்" – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் கோவையில் பரபரப்பு !!!

SHARE

 கோவையில் அரசு அலுவலகத்தில் 'மது' விருந்து : பறக்கும் படை சோதனையில் மதுபானங்களுடன் சிக்கிய தி.மு.க வினர் - சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகும் வீடியோ !!!

"அரசு அலுவலகமே பாராக மாறிய அவலம்" – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் கோவையில் பரபரப்பு !!!

 கோயம்புத்தூர், துடியலூர் அருகே கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடிகரை பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள், தேர்தல் விதிகளை மீறி தி.மு.க-வினர் மது விநியோகம் செய்த போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

 அரசு அலுவலகத்திலேயே இத்தகைய அத்துமீறல் நடந்து இருப்பது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், இடிகரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒன்று கூடி, வாக்காளர்களுக்கு கட்சிப் பணியாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவில் மதுபானங்களை வைத்து இருந்தனர் மேலும் அங்கு மது அருந்து கொண்டு இருந்து உள்ளனர். தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபான பாட்டில்களை அதிகாரிகள் கையும், களவுமாகப் பிடித்தனர்.

 அதிகாரிகளைக் கண்டதும் அங்கு இருந்த சிலர் தப்பியோடிய நிலையில், எஞ்சியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு மதுபானங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

அரசு அலுவலக வளாகத்திலேயே மதுபானங்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டு இருப்பது.

அதிகாரிகள் மதுபானங்களைக் கைப்பற்றியது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: