வியாழன், 28 மே, 2026

குடியை நிறுத்தியதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு: வாலிபர் திடீர் மரணம் !!!

SHARE

 குடியை நிறுத்தியதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு: வாலிபர் திடீர் மரணம் !!!

கோவை செல்வபுரம், தெற்கு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (32), ராமகிருஷ்ணன் மகன். இவருக்கு அனிதா (28) என்ற மனைவி உள்ளார். அசோக் குமாருக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி பலமுறை கண்டித்தார். இதை அடுத்து கடந்த ஒரு வாரமாக குடிக்காமல், வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளார்.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மனைவி கஞ்சி பரிமாறும்போது, திடீரென அசோக் குமாருக்கு கழுத்து வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: