வியாழன், 28 மே, 2026

முடி முக்கியமல்ல; மூளைதான் முக்கியம்!’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ஜுகல்பந்தி; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு!” என அதிரடிப் பேட்டி !!!

SHARE

 முடி முக்கியமல்ல; மூளை தான் முக்கியம்’ கோவை மேடையில் சிவகுமார் - சத்யராஜ் கலக்கல் ; “மாற்றம் உலக நியதி; விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு” என அதிரடிப் பேட்டி !!!

​“தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகே மற்ற பாடல்கள்”: த.வெ.க ஆட்சி குறித்து சிவகுமார் !!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கேஜி (தனியார்) மருத்துவமனையில் நிகழ்ச்சில் நடிகர் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் ஆகிய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மேடையில் உரையாற்றிய நடிகர் சத்யராஜ், சிவகுமார் டை அடிக்காமல் வந்திருக்கலாம் அல்லவா?. நாமெல்லாம் தலைக்கு மேல் உள்ளதை நம்பி வாழ்பவர்கள் அல்ல தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று முடியையும் மூளையையும் சுட்டிக்காட்டினார். சிவக்குமார் இருந்த தைரியத்தில் தான் நாம் சென்னைக்கு சென்றேன் அங்கு சென்ற பிறகு தற்பொழுது ஓரளவு ஒழுக்கமானவனாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் சிவகுமார் தான். பெரியாரின் தொண்டன் எம்ஜிஆரின் ரசிகன் என்ற இரண்டு விஷயமும் என்னை பொறுத்தவரை எனக்கு ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக உள்ளது. எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும் தெளிவாக ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க முடியும் அதற்கு முக்கியமான துணை தந்தை பெரியார் தான். அதேபோல் உற்சாகமாக இருப்பதற்கு புரட்சித்தலைவி எம்ஜிஆர் அவரது பாடல்கள் தற்பொழுது வரை உறங்குவதற்கு முன்பு கடவுள் வாழ்த்து பாட மாட்டேன் வாத்தியாரின் பாடல்களை தான் கேட்பேன் என்று கூறிய அவர் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடலை கேட்டு விட்டு படுத்தால் தெம்பாத தெளிவாக இருக்கலாம் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் வந்தே மாதரம் பாடல்க்கு பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது குறித்து பேசிய அவர் இனிமேல் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை பாடுங்கள் என்று வேண்டுகோளாக விடுகிறேன் அதன் பிறகு எந்த பாடலை வேண்டுமானாலும் பாடுங்கள் என்று தமிழ் மண்ணை சாப்பிட்டு வளர்ந்தவன் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பின்னர் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் சிவகுமார் பேசும்போது

நான் பிறந்த ஊரில் அப்பொழுது அடிப்படை வசதிகள் கிடையாது. மாட்டு சாணத்தை முழுகிய தரையில் அமர்ந்து தான் படிப்போம். இன்னொரு பிறவி எடுத்தாலும் ஓவியனாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நான் நான்கு முதல்வர்களுடன் நடித்துள்ளேன் என்று எம்ஜிஆர் ஜெயலலிதா கலைஞர் விஜய் ஆகியோர் உடன் நடித்த படங்களை நினைவுகூர்ந்து நடிகர் விஜயுடன் நான் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் 200 நாட்கள் ஓடியது என்றும் தெரிவித்தார்.மேலும் மேடையில் கம்பராமாயணம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றை பாடி விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்த நடிகர் சிவக்குமார், அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட ஊர் கோவை என்றும் நான் கோவை சூலூர் அருகே உள்ள சிறிய கிராமத்தில் தான் பிறந்தேன் நான் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது சிறுவயதில் கீழே விழுந்து அடிபட்டால் மாட்டு சாணத்தை தான் புண் மீது போடுவார்கள் ஒரு வாரத்தில் அது குணமாகிவிடும் நான் நாட்டு வைத்தியங்களில் வளர்ந்த ஆள்.

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு நம்முடைய உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உடலை நல்லபடியாக வைத்துக் கொண்டால் தானம் என்ற நடைமுறைக்கு செல்ல தேவையில்லை என்று கூறி பல்வேறு யோகா பயிற்சிகளையும் செய்தியாளர் சந்திப்பின்பொழுது செய்து காட்டினார்.

காபி டீ எல்லாம் சாப்பிட்டு 65 வருடங்கள் மேல் ஆகிறது, தினமும் யோகா செய்கிறேன்

சத்யராஜ் எம்.ஜி.ஆர் அவருடைய சிஷ்யன் கரலாகட்டையை சுத்தி கொண்டு இன்னும் உடலை கட்டுமானமாக வைத்துள்ளார். யாரும் பெரிய ஆள் என்று நினைக்காமல் அனைவரிடமும் நன்கு பழகினால் மன அழுத்தம் என்பது வராது, செல்போன்கள் எல்லாம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் யாரும் தனியாக வாழாதீர்கள் நெருக்கமான நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள் நானும் சத்தியராஜ்யம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம்.

எனக்கு தற்பொழுது 85 வயது ஆகிறது உலகம் முழுவதும் 20 நண்பர்கள் எனக்கு உள்ளன நாள்தோறும் ஒரு மணி நேரமாவது அவர்களிடம் பேசுவேன், மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் தனிமை தான் எனவே அனைவரும் நண்பர்களுடன் இருங்கள்.உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மருத்துவர்களே தேவை இல்லை.

பிராமணர்கள் 75 என்பது வயதிலும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஏனென்றால் அவர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை சத்யராஜ் போன்றவர்கள் பெரியார் கூறியதைப் போல 95 வயதிலும் ஆடு மாடு கோழி எல்லாம் சாப்பிட்டு ஜீரணம் செய்ய முடியாமல் இருக்கிறார் என்று கிண்டல் அடித்தார. அப்போது குறுக்கிட்ட சத்தியராஜ் பெரியார் சமூக நீதியை தான் கூறினார். மேலும் மருத்துவரிடமே கேளுங்கள் அசைவத்தில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்றார். அப்பொழுது சிவக்குமார் நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன் 45 வயது வரை அசைவம் சாப்பிடலாம் 45 வயதுக்கு மேல் அது தேவை இல்லை குறைத்துக் கொள்ளலாம். தற்பொழுது உள்ள போதைப் பொருட்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஏதேதோ பெயர் எல்லாம் கூறுகிறார்கள். 

விஜய் நினைத்து சந்தோசம் பட வேண்டும் அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார்கள் என்று தான் மக்கள் வாக்களித்து உள்ளவர்கள் என்றார்.

மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம், காமராஜரை போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா? அவர் இருக்கும் பொழுது அவருக்கு சொத்து என்பதை 140 ரூபாய் பணம் 4, 5 துணிமணிகள், புத்தகங்கள் தான் அப்படிப்பட்ட காமராஜரயே தோற்கடித்தார்கள் காமராஜர் வேண்டாம் மாற்றம் வேண்டும் என்று அப்பொழுது மக்கள் நினைத்தார்கள், திமுகவும் 50 ஆண்டுகள் ஆண்டது தற்பொழுது அதுவும் வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள்.

யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள் மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள் மக்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 95 சதவிகிதம் காசு வாங்காமல் ஓட்டு போட்டு உள்ளார்கள் பெண்கள் அதிகமானோர் ஓட்டு போட்டு உள்ளார்கள், அடுத்த தலைமுறை எங்களுக்கு ஒரு சரியான தலைவன் வேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது அதனை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார்?. 

சினிமாவை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியலில் அதிகம் இருந்துள்ளார்கள் என்ற கருத்து தொடர்பான கேள்விக்கு காந்தி காலத்திற்கு முன்பு அரசியல் தலைவர்களின் தாக்கம் அதிகம் இருந்தது மக்களை அதிகம் இருப்பவர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள் தான்

சினிமா துறையின் படம் மூலம் கூறுவது மக்களுக்கு நெருக்கமாக ஆகிவிடுகிறது என்றார். சினிமா துறையை சார்ந்த அரசியல் என்பது கேரளாவில் எடுபடவில்லை என்ற கேள்விக்கு அங்கு அனைவரும் படித்தவர்களாக உள்ளார்கள் மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும் சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள் மக்களுக்கு அறிவு வந்தால் எதற்கு படம் பார்க்கிறார்கள்?. அப்பொழுது குறுக்கிட்ட மருத்துவர் பக்தவச்சலம் அறியாமை இருந்தால் மருத்துவத்துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேட்டி அளிக்கும் போது 

நான் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வேன் நான் உடற்பயிற்சியையும் வாழ்க்கையும் தனித்தனியாக பிரித்துக் கொள்வது இல்லை இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை முடிந்தவரை மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வது குறித்து பேசும் பொழுது நம்முடைய ஆட்கள் அங்கு அதிகம் பேர் உள்ளார்கள் அங்கு வேலை செய்வதற்கு யாரும் இல்லை, அமெரிக்க காரர்கள் யாரும் வேலை செய்வது இல்லை ட்ரம்ப் தலையில் அடித்துக் கொள்கிறார் என நகைச்சுவையாக.

எம்.ஜி.ஆர் பாடியதைப் போல் அவரர்களே திருந்தாவிட்டால் போதையை ஒழிக்க முடியாது தற்பொழுது உள்ள அரசு பள்ளிகள் அருகில் உள்ள மதுபான கடைகளை மூடியது நல்ல விஷயம் தான் என்றார்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: