இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி ‘ஸ்டிரைக்’ ; பணிப் புறக்கணிப்பால் ஸ்தம்பித்த தூய்மை பணிகள் - மாற்று நிறுவன ஊழியர்கள் மோதலால் நோயாளிகள் கடும் அவதி !!!
அதிக பணிச்சுமை, ஆள் பற்றாக்குறை, பி எஃப் நிதி வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சிங்காநல்லூர் பகுதுயிலுள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி மேற்கொண்டு வரும் கிரிஸ்டல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கப்பட்ட நிலையில் அவர்களை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மற்றும் செய்வதாகவும் அதே வேளையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து 10 வரை அரசு மருத்துவமனைக்கு மாற்ற இருப்பதாகவும் குற்றச்சாட்டு
மீண்டும் பணி வழங்கினால் அவர்களை அங்கேயே பணியமர்த்த வேண்டும் எனவும் அரசு மருத்துவமனையில் இருந்து இ எஸ் ஐ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யக்கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் வலியுறுத்தல்
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியடைந்த நிலையில் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் நோயாளிகள் பாதிப்பு.

0 கருத்துகள்: