ஞாயிறு, 26 ஜூலை, 2026

9 வயதில் உலகை வியக்க வைத்த கோவை சிறுவன்... 'ரியோ மியா' சிறார் நாவல் எழுதி அசத்தல் : 320 திருக்குறள் மனப்பாடம், புத்தக வாசிப்பால் சாதித்த கவின் சொற்கோ !!!

SHARE

9 வயதில் உலகை வியக்க வைத்த கோவை சிறுவன்... 'ரியோ மியா' சிறார் நாவல் எழுதி அசத்தல் : 320 திருக்குறள் மனப்பாடம், புத்தக வாசிப்பால் சாதித்த கவின் சொற்கோ !!!

கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகி மெகா வரவேற்பைப் பெற்ற நாவல்; வீட்டில் வளர்த்த பூனை, நாயைக் கதாபாத்திரமாக்கி பிரம்மாண்ட படைப்பு!

கோவை, வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், ஜீவிதா தம்பதியின் 9 வயது மகன் கவின் சொற்கோ. பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறான். கவின் சொற்கோவிற்கு திருக்குறள் மற்றும் கதை புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தற்போது 320 திருக்குறள்களை அகர வரிசைப்படியும், அதிகாரம் அல்லது வரிசை எண் கூறினாலும் பிழையில்லாமல் ஒப்புவித்து அசத்தி வருகிறான்.

இதேபோல கதை மற்றும் பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் வாசிப்பதிலும் இருந்த ஆர்வம், அவனை ஒன்பது வயதிலேயே எழுத்தாளராக மாற்றியுள்ளது. கவின் சொற்கோ எழுதிய 'ரியோ மியா' என்ற சிறார் நாவல் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தனது வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக உள்ள நாய் மற்றும் பூனையை வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக கூறும் கவின் சொற்கோ, அறிவை வளர்க்க புத்தக வாசிப்பு அவசியம் தேவை என வலியுறுத்துகிறான்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: