சனி, 25 ஜூலை, 2026

ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

SHARE

 ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

 எளிமையான தொழிலாளி மகள் நீட் தேர்வில் வெற்றி: தையல் கடைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க மகளிர் அணித் தலைவி வானதி !!!

 கோவையில் கடந்து நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ள எளிமையான குடும்பத்து மாணவி காவியஶ்ரீயை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆரத்தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

கோவை, கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி, பேரூர் காளம்பாளையத்தில் ஒரு சிறிய தையல் கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

 இத்தகைய எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர்களது மகள் காவியஶ்ரீ, சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்குத் தகுதி அடைந்து உள்ளார்.

இச்செய்தி அறிந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காளம்பாளையத்தில் உள்ள உமா மகேஸ்வரியின் தையல் கடைக்கே நேரில் சென்று, மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்.

நீட் தேர்வின் பயன்கள் மற்றும் எதிர்கால மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறித்துப் பெற்றோரைக் கேட்டறிந்தார்.

அப்போது வானதி சீனிவாசனிடம் நெகிழ்ச்சியுடன் பேசிய மாணவியின் தாய் உமா மகேஸ்வரி, "எங்க உறவுக்காரப் பெண் ஒருவர் முன்பு டாக்டர் படிக்க ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சாங்க. ஆனா, இன்னைக்கு நீட் தேர்வு வந்ததால எங்களைப் போன்ற எளிமையான கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளும் பெரிய தொகை செலவில்லாமல், மதிப்பெண் திறமையின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது" எனக் கூறினார். மேலும், தான் நடத்தும் தையல் கடையைப் பிரதமரின் ‘முத்ரா கடன் திட்டம்’ மூலமே தொடங்கியதாகக் குறிப்பிட்டு, பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் பெரும் உறுதுணையாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: