பெண் மாவோயிஸ்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - சாட்சி விசாரணை ஒத்திவைப்பு !!!
தமிழக - கேரளா எல்லையான ஆனைகட்டி, அட்டப்பாடியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடி படைக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம் அடைந்த மாவோயிஸ்ட் தீபக் மற்றும் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி ஆகியோர் தப்பினர்.
ஆனைகட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீமதி கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். சாட்சி விசாரணை நடந்தது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: