வியாழன், 2 ஜூலை, 2026

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த புதிய முதலீடுகள்: ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி உறுதி !!!

SHARE

 இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த புதிய முதலீடுகள்: ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி உறுதி !!!

டகாய்ச்சி இந்தியாவிற்கு வருகை புரிந்து உள்ள புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ள பிரதமர் மோடி, “முதன் முறையாக இந்தியாவிற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தியா - ஜப்பான் இடையேயான உலகளாவிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் உரையாடல்கள் நடத்த ஆவலாக இருக்கிறேன். நம் இருநாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்தோ - பசிபிக் மற்றும் அதனை தாண்டிய பகுதிகளில் செழிப்பும் அமைதியும் நிலவுகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியை வரவேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது. அந்த பதிவில், “இரு நாடுகள் இடையேயான கூட்டுறவை முன்னெடுத்து செல்வதில் இந்த சந்திப்பு முக்கியமானதாக அமையும்” என்று தெரிவித்து இருக்கிறது.

இந்தியா வருவதற்கு முன்பு புதன்கிழமை (ஜூலை 1) டோக்கியோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சானோ டகாய்ச்சி, இந்த பயணமானது மூன்று முக்கிய துறைகளில் இந்திய பிரதமர் மோடியின் ஒத்துழைப்பை பெற்றுத்தரும் என நம்புவதாக கூறி இருந்தார்.

அதுகுறித்து விளக்குகையில், தற்போது நிலவிவரும் உலகளாவிய சூழ்நிலையை கருத்தில்கொண்டு, “இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துதல், பொருளாதார பாதுகாப்பு மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீடுகளில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை எங்கள் பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சங்களாக இடம்பெறும்” என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜப்பான் - இந்தியா கூட்டு பொருளாதார கூட்டம் நடைபெறும் என்றும், தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றினால் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தி வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் கூறி இருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்து உள்ள டகாய்ச்சி, வர்த்தக கருத்தரங்கு ஒன்றிலும் பங்கேற்க உள்ளார். ஜப்பானின் பிரதமராக சானே டகாய்ச்சி பதவியேற்ற பிறகு அவர் முதன்முறையாக இந்தியா வந்திருக்கிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: