வியாழன், 16 ஜூலை, 2026

கோவையில் ஆட்டிடம் பாலியல் வன்கொடுமை: கையும், களவுமாகச் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி கைது!

SHARE

 கோவையில் ஆட்டிடம் பாலியல் வன்கொடுமை: கையும், களவுமாகச் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி கைது!

சத்தம் கேட்டு ஓடிவந்த உரிமையாளர் மீது கல்வீசி கொலை மிரட்டல்; கவுண்டம்பாளையம் போலீசின் ஆக்ஷனில் கம்பி எண்ணும் வட மாநில நபர் !!!

கோவை, கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மகன் சதீஷ்குமார் (54). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கொட்டகையில் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் கீழே உள்ள முட்புதர் பகுதியில் இருந்து ஆடு ஒன்று விசித்திரமான முறையில் சத்தம் போடுவதைக் கேட்டு சதீஷ்குமார் ஓடிச் சென்று பார்த்து உள்ளார்.

அப்போது, அந்த வீதியில் கட்டிட வேலை செய்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் தாஸ் மகன் கோபிந்தோ தாஸ் (35) என்பவர், சதீஷ்குமாரின் ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சதீஷ்குமார் அதைத் தடுக்க முயன்ற போது, கோபிந்தோ தாஸ் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களை எறிந்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் விலங்கு வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வடமாநில வாலிபர் கோபிந்தோ தாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: