செவ்வாய், 15 செப்டம்பர், 2026

"சாதி, மத பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்" ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் 11 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிவசேனா!

SHARE

5 நாட்கள் இயல், இசை, நாடகம், பட்டிமன்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

​ நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா பக்திச் சிறப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் மா.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிவசேனா அமைப்பின் சார்பில் சுமார் 11 அடி உயரமுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலை கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 சிவசேனா மாநிலச் செயலாளர் மா.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் உள்ளிட்ட அனைத்து வேதகாலப் பூஜைகளும் முறைப்படி நடைபெற்றன.

விழா குறித்து சிவசேனா மாநிலச் செயலாளர் மா.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

​"சிவசேனா அமைப்பின் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் வைக்கப்பட்டு உள்ள இந்த விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடர்ந்து 5 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விழா நாட்களில் இயல், இசை, நாடகம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு கலைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து போட்டிகளில் பங்கேற்பதோடு, விநாயகப் பெருமானின் அருள் பெற்று வாழ்வில் நோயற்ற வாழ்வும் இன்பமும் பெற வேண்டும்," எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "நம்நாட்டில் மனிதர்கள் இடையே சாதி, மத, இன பேதம் எதுவும் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நோக்கமாகும்," என்று சமூக நல்லிணக்கச் செய்தியைத் தெரிவித்தார்.

​இவ்விழாவில் சிவசேனா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: