கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!
கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த மர்ம ஆசாமிகள் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
கோவை அடுத்த நீலாம்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்பொழுது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கொடுத்த தகவலின் பெயரில் நீலாம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நம்பர் பிளேட் இல்லாத உயர்ரக மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வருவதும் அவர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றிய மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்த நபர்கள் யார் ? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்த சில நாட்களிலேயே கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: