கோவை சுங்கத்தில் அதிரடி: ஹெல்மெட் அணியாத இளைஞரைத் தாக்கிய போலீஸ் - கபடி வீரர் மருத்துவமனையில் அனுமதி !!!
வாகனச் சோதனையில் நேர்ந்த விபரீதம் - தாடை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த வாலிபர் !!!
ஹெல்மெட் அணியாததால் போலீசாரை பார்த்து பைக்கை திருப்பிய இளைஞரை துரத்தி தாக்கிய போலீசார்; இளைஞர் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதி
கோவை புலியகுளம் ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் அஸ்வின் (24). கபடி பிளேயர். இவர் நேற்று இரவு புலியகுளம் பகுதியில் இருந்து சுங்கம் நோக்கி நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுங்கம் சிக்னலுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். தொடர்ந்து இளைஞர் ஹெல்மெட் அணியாததால் போலீசாரை பார்த்து தனது இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது இருட்டில் மறைந்திருந்த காவலர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைபால் இளைஞரை தாக்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து பைப்பால் தாக்கியதில் அவரது தாடை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவரது பெற்றோரால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இளைஞருக்கு தாடையில் மருத்துவர்கள் 5 தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக தாக்கிய டி.1 காவலர் மீது இளைஞர் புகார் அளித்து உள்ளார்.

0 கருத்துகள்: