வெள்ளி, 26 ஜூன், 2026

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமானநிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் கடத்தி எடுத்துவந்த 146பவுன் தங்ககட்டிகள் சிக்கியது மலப்புறம் பகுதியை சேர்ந்த இளைஞர் கைது !!!

SHARE

 கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் கடத்தி எடுத்துவந்த 146 பவுன் தங்ககட்டிகள் சிக்கியது மலப்புறம் பகுதியை சேர்ந்த இளைஞர் கைது !!!

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமான நிலையத்தின் வாயிலாக தங்கம் கடத்தி வருவதாக மலப்புறம் மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து விமானநிலையத்தில் காவல் துறையினர் சிறப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது மலப்புறம் கிழங்காடி பகுதிரை சேர்ந்த அஸ்லாம் என்ற இளைஞர் சுங்கத் துறை சோதனைகளை கடந்து வெளியே வந்தார். தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர் அஸ்லாமிடம் நடத்திய சோதனையில் எமர்ஜென்சி லைட்டில் 1165 கிராம் எடையிலான 10 தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து கடத்தல் தங்கம் மற்றும் தங்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் அஸ்லாம் ஆகியோரை காவல் துறையினர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் தங்ககட்டிகள் கடத்திவந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: