புதன், 10 ஜூன், 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்”; தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சகாப்தம் முடிவு ; நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை !!!

SHARE

 இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்”; தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சகாப்தம் முடிவு ; நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை !!!

“மண்ணின் அடிநாதத்தை விதைத்த கலைஞனுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”: டெல்லி புறப்படும் முன் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் உருக்கம் !!!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவரை, மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்து குருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாரதிராஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 84. 

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

முன்னதாக இன்று காலை முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - முதலமைச்சர் விஜய் இரங்கல்

நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் காலையிலேயே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து முதலமைச்சரின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் அவர் கூறியதாவது, ”தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர்.

பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: