செவ்வாய், 16 ஜூன், 2026

கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கொலை வழக்கு கைதி பலி ; ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை !!!

SHARE

 கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கொலை வழக்கு கைதி பலி ; ரேஸ்கோர்ஸ் போலீஸார்  விசாரணை !!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடை காவஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.மணி என்கிற மணிகண்டன் (வயது 55), தந்தை பெயர் சிவசுப்பிரமணியன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஈரோடு பெருந்துறை காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற ஒரு  கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். இவ்வழக்கை விசாரித்த ஈரோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம், மணிக்கு கடந்த 05.10.2016 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இதை அடுத்து மணி கோவை மத்திய சிறையில் கைதி ஆக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 2-ந் தேதி மணிக்கு சிறைக்குள் திடீரென கடுமையான நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனை  வளாகத்தில் உள்ள கைதிகள் சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம்  மதியம் மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் டி.தாமரைக்கனி அளித்த தகவலின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: