கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் !!!
கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக தற்காலிகமாக 20 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கோவை சப்-கோர்ட் கூடுதல் ஜி.பி (நிலை எடுப்பு) இளங்கோவன், இ.சி கோர்ட் விஷ்ணு சித்தார்த், சப்-கோர்ட் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜு, சப் - கோர்ட் கூடுதல் ஜி.பி எம் பாண்டீஸ்வரன், மகளிர் கோர்ட் அர்ச்சனா, 4-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் பிரேமலதா, 5-வது கூடுதல் நீதிமன்றம் நிர்மலா, டான்பிட் நீதிமன்றம் பழனிச்சாமி, சிவில் கார்த்திகேயன், கிரிமினல் பிரபு ஸ்ரீகாந்த், கிரிமினல் மற்றும் சிவில் எஸ்.சி /எஸ்.சி கோட் முத்துக்குமார், கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் பாலமுருகன், முனிசிப் கோர்ட் பிளீடர் அரசுப் பணிகள் தமிழ்வாணன், ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொள்ளாச்சி சப்-கோர்ட் கூடுதல் ஜி.பி தன்ராஜ், பொள்ளாச்சி முனிசிப் கோர்ட் பிளீடர் அரசு பணிகள் ரங்கராஜன், சூலூர் முனிசிப் கோர்ட் பிளீடர் விஜய ஆனந்த், மதுக்கரை முனிசிப் கோட்ர் ப்ளீடர் விக்னேஷ், மேட்டுப்பாளையம் முனிசிப் கோர்ட் பிளீடர் வினோத், மேட்டுப்பாளையம் சப்- கோர்ட் கூடுதல் ஜிபி நவீன் குமார், அன்னூர் முனிசிப் கோர்டு லதா மங்கேஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று பொறுபேற்கின்றனர். மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற பப்ளிக் பிராசிகியூட்டர் மற்றும் கவர்மெண்ட் பிளீடர் ஜி பி முதலாவது மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு அரசு வக்கீல்கள் நியமிக்கப்படவில்லை.

0 கருத்துகள்: