வியாழன், 9 ஜூலை, 2026

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி !!!

SHARE

 கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி !!!

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பாக "பெண்களும் தொழில் முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஆர்.எழிலி அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பிரபல் தொழில் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்பு (CSR) பிரிவின் தலைவரான வித்யா செந்தில் குமார் கலந்து கொண்டார்.

 பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு வரலாறு காணாத வாய்ப்புகள் தற்பொழுது உள்ளன என்று சிறப்பு விருந்தினர் வித்யா செந்தில் குமார் கூறினார்.

 மாணவிகள் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் பார்க்க வேண்டும் சவால்களையும் இன்னல்களையும் நேர்மறை சிந்தனை உடன் சந்திக்க வேண்டும் மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் வருங்காலத்தில் தொழில் முனைவரானால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். தற்பொழுது உலகம் முழுவதும் பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கையிலும் தாக்கத்திலும் வரலாறு காணாத வகையில் உருவாகி உள்ளனர். தொழில் முனைவராக மாணவிகள் வெற்றி பெற்றால் சமூகத்தில் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். எந்த துறையை சேர்ந்தாலும் பேச்சாற்றலையும் தகவல் தொடர்பு திறன்களையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெற்று விடலாம். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சாற்றல் மிக மிக இன்றியமையாதது ஆகும்.

 பெண்களுக்கு என்று சவால்கள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கே உரிய சிறப்பு குணங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். இன்னல் நம்மை சூழும் பொழுது நாம் கோபப்படாமல் பயப்படாமல் சமயோகித புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றி பெற்று விடலாம். தொழில்துறையில் வெற்றி பெற வேண்டும் என்றால் புதிய கருத்துகளும் புதுப்பிக்கும் குணாதிசயமும் தேவையாக உள்ளது. வெற்றி பெற்றவுடன் நாம் நமது சமூக முன்னேற்றத்திற்குபங்களிக்க வேண்டும். வாழ்வில் நன்றி உணர்வு மிக மிக முக்கியமானது. நாம் செய் நன்றி மறவாமல் இருக்க வேண்டும். நமது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்க முயல்வது தவறு. மற்றவர்களில் கருத்துக்களையும் அறிந்து நாம் செயல்பட வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் வித்யா செந்தில்குமார் அவர்கள் கூறினார். 

இந்நிகழ்ச்சியை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறையின் தலைவர் ஆன முனைவர் கனகராஜ் ஏற்பாடு செய்து இருந்தார். மாணவிகளுக்கு தற்பொழுது பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு அதிக அளவில் இளம் பெண்கள் தற்பொழுது வருகிறார்கள். கணினி புரட்சி தோன்றிய பிறகு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து வருகின்றன. தொழில் முனைவோர் ஆவதன் மூலம் மாணவிகள் வருங்காலத்தில் தங்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் செல்வத்தையும் சேவையையும் சேர்க்க முடியும் என்று முனைவர் கனகராஜ் கூறினார் இந்த நிகழ்வில் அரசு கலைக் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் மாலதி முனைவர் சித்ரா மற்றும் அரசு கலைக் கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் முனைவர் ஷீலா பிரியதர்ஷினி ஆகியோர் பேசினார் இந்த நிகழ்வில் ஏராளமான முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: