கோவை அருகே அதிர்ச்சி சம்பவம் ; சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இருசக்கர வாகனத்தில் தப்பிய வாலிபர் சிக்கினார் !!!
கோவை அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிய வாலிபர் போலீசில் சிக்கினார்.
கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் வேலை முடித்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக சென்ற போது அந்த வழியாக ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அவரை கடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை திருப்பி அந்தப் பெண்ணின் அருகில் வந்து வழி கேட்டார். பின்னர் திடீரென அந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை, இருந்த போதிலும் பயந்து போன அந்த வாலிபர் உடனடியாக அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து அந்த பெண் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுந்தரபுரம் பகுதியில் ரோடு சென்றனர். அப்பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடக்கும்படி விசாரணை நடத்தினர். அதில் அவர் சுந்தராபுரம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் என்பது, மேற்கண்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து யுவராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே நகை பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: