வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

SHARE

 ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டும், ஆடி மாத வெள்ளிக் கிழமையை முன்னிட்டும், கோவையில் உள்ள பிரபல மாகாளியம்மன் கோவில் காய்கறிகளால் தேசியச் சின்னங்கள் வடிவில் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவை, பெரிய கடை வீதி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. ஆடி மாதம் துவங்கியது முதலே இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் கோவில் வளாகம் முழுவதும் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, நாளைய சுதந்திர தினத்தைக் தாங்கும் வகையில் கோவில் முழுவதும் பிரம்மாண்ட காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.

​இந்திய நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில், காய்கறிகளைக் கொண்டே தேசியக்கொடி, இந்திய நாட்டின் வரைபடம், தேசியப் பறவையான மயில், தேசிய விலங்கான புலி மற்றும் அன்னப்பறவை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கோவில் சுவர் முழுவதும் பிரம்மாண்டமாகப் பொருத்தி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த அற்புத அலங்காரத்திற்காகக் கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட பல வகையான வண்ணக் காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன.

​தேசிய உணர்வையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகக் கலந்து செய்யப்பட்ட இந்த காய்கறி அலங்காரத்தைக் காணக் கோவையின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனைத் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: