ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்" ; ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

SHARE

 "கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்பு உள்ள மெத்தம்பெட்டமைன்" ;  ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

பெங்களூரு-எர்ணாகுளம் ஏர்பஸ் பேருந்தில் அதிரடி சோதனை : திருச்சூர் வாலிபர் கோவை வாளையார் சோதனைச் சாவடியில் கைது!

​ பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் தண்டர்' (Operation Thunder) என்ற சிறப்பு கலால் வரி அதிரடி சோதனையின் போது, தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

 ஓணம் பண்டிகைக் முன்னிட்டு தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் இரு மாநில காவல்துறையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்காகக் கலால் துறை சார்பில் 'ஆபரேஷன் தண்டர்' எனும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டது.

​இதன் ஒரு பகுதியாக, கேரள எல்லைப் பகுதியான வாளையார் கலால் சோதனைச் சாவடியில் கலால் ஆய்வாளர் ஜிது கிரண் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்த ஏர் பஸ் தனியார் சொகுசுப் பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அவர் உடற்பயிற்சி செய்பவர்கள் பயன்படுத்தும் 'கிரியேட்டின்' (Creatine) டப்பாவிற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள போதைப் பொருட்களைப் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து இருந்தது அம்பலமானது.

​அவரிடம் இருந்து சுமார் 142 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

இதை அடுத்து, போதைப்பொருளைப் பார்சலாகக் கடத்தி வந்த திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் கடங்கோடு வெள்ளார்க்காடு அம்பலவட்டம் கரையைச் சேர்ந்த அய்யால கட்டில் தமாலு என்பவரின் மகன் ஜிதின் (35) என்பவரைக் கலால் துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

​கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி வந்து கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் விற்பனை செய்யத் திட்டமிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய நெட்வொர்க் குறித்துக் கலால் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: