புதன், 26 ஆகஸ்ட், 2026

மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

SHARE

 மக்களுடன் இணைந்து ஆடிய முன்னாள் அமைச்சர்" ; கோவையில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்!

திருக்கல்யாண உற்சவத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம்: கோவையில் விமரிசையாக நடைபெற்ற திருவிழா!

​ கோவை, மைல்கல், சுகுணாபுரம் பகுதியில் அமைந்து உள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடியது பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

கோவை, சுகுணாபுரம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், கல்வியாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

 அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவிழாவின் போது, சக்தி பூ சட்டி ஏந்தி கம்பத்தைச் சுற்றி பூசாரி பக்தி பரவசத்துடன் ஆடிய நிகழ்வை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பக்தியுடன் கண்டு தரிசித்தனர்.

​தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஊர் பொதுமக்களுடனும் அ.தி.மு.க தொண்டர்களுடனும் இணைந்து எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக நடனமாடினார். முன்னாள் அமைச்சர் மக்களுடன் கலந்து நடனமாடியது அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: