தேசிய அரசியலில் கவனம் ஈர்க்கும் தமிழக வெற்றிக் கழகம் : த.வெ.க நிர்வாகி பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் அவர்கள் நாட்டின் பாரதப் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் எனத் த.வெ.க வின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.தேசிய அரசியலை நோக்கிய த.வெ.க:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இக்கருத்தைப் பதிவு செய்தார்.
தமிழக அளவில் மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டமன்றத்திற்குள் தடம் பதித்து உள்ள தமிழக வெற்றிக் கழகம், அடுத்து வரும் 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு இயங்கத் தொடங்கி உள்ளது.
"இந்தியாவின் முதன்மைத் தலைவராக முதல்வர் விஜய்":
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கு ஏற்க சென்ற எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது;
பிரதமர் வேட்பாளர் நமது தலைவர் தளபதி தான் என்றும், இரண்டு நாட்களாக இதைப் பற்றி தான் பேசப்படுவதாகவும், ஏனென்றால் 2025-யில் இதேபோன்று நிகழ்வு தான் ஆனது. இதே போன்று தான் என்னிடம் வந்து கேட்டார்கள், கண்டிப்பாக 2026 என்ன ? நடந்தது என்று இந்த நாடே பார்த்து இருக்கும், 2029 ஆம் ஆண்டு முக்கியமான விஷயம் பிரதமர் யார் ? என்பதை முடிவு பண்ணுவது டெல்லியில் இருந்து கிடையாது. அது வந்து தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு பண்ணி போவதாகவும், ஒரு அதிர்ச்சியான விஷயம் இந்திய அரசியல் பெரிய மாற்றத்தை 2029 இல் கண்டிப்பாக பார்ப்போம் என்றார்.
காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றும், இல்லையென்றால் த.வெ.க இருந்து வெளியேறுவதாக கூறியது குறித்தான கேள்விக்கு;
2029 ல் நீங்கள் அந்த விஷயத்தை பார்ப்பீர்கள், அதற்குப் பிறகு அவர்கள் வெளியில் இருப்பார்களா ? அல்லது உள்ளே போவார்களா ? அப்படி என்பதை தளபதி விஜயை முதல்வர் இருக்கையில் அமர வைத்ததே காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி சார் தான் என்றும், அவரே தான் நமது தளபதியின் கையைப் பிடித்து 2029 ல் கூட்டிப் போய் உட்கார வைக்கப் போகிறார் என்றார்.
2025 ஆம் ஆண்டு கணித்ததை அப்பொழுது 2029 ல் இதுதான் நடக்கும் இதை நான் ஆணித்தனமாக சொல்கிறேன் என்றும் கண்டிப்பாக பிரதமர் ஆவார் என்றார்.
தமிழகத்தில் யார் ? முதல்வர் என்று கேள்விக்கு;
அதை அடுத்ததாக பார்க்கலாம் என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

0 கருத்துகள்: